Sunday, 30 October 2016

Saptarishi Arul Magazines

Sarvesham Namaskaraha


Pl. find the link below for the e-magazine -Saptarishi Arul - Durmukhi -Puratasi and Aipasi Issue.

https://drive.google.com/file/d/0BxVAGUaivearN0NhSFhZWnJOWDA/view?usp=sharing

https://drive.google.com/file/d/0BxVAGUaiveardGdnRmJzSnl0cU0/view?usp=sharing


We request our Saptrishi center members to send articles and any specific Jyothisha information to publish in our e-Magazine.

Your feedback on these issues are highly solicited .

Pl. send your feedback to
ushajk65@gmail.com  or barathitab@gmail.com

Pranam
Team



Wednesday, 15 June 2016

Saptarishi Arul Magazine

Sarvesham Namaskaraha


Pl. find the link below for the e-magazine -Saptarishi Arul - Durmukhi -Chithrai  Issue.

https://drive.google.com/file/d/0BxVAGUaivearNTIwd1R0RlZHcHc/view?usp=sharing

We request our Saptrishi center members to send articles and any specific Jyothisha information to publish in our e-Magazine.

Your feedback on these issues are highly solicited .

Pl. send your feedback to
ushajk65@gmail.com  or barathitab@gmail.com

Pranam
Team

Thursday, 14 April 2016

Saptharishi Arul eMagazine

Sarvesham Namaskaraha

Greetings to all for the New Year -Durmukhi

Pl. find the link below for the e-magazine -Saptarishi Arul - Durmukhi -Chithrai  Issue.

https://drive.google.com/file/d/0BxVAGUaivearcldBclZreVU0M3M/view?usp=sharing

We request our Saptrishi center members to send articles and any specific Jyothisha information to publish in our e-Magazine.

Your feedback on these issues are highly solicited .

Pl. send your feedback to 

Pranam
Team


Sunday, 13 March 2016

கிரகங்களின் பிரார்த்தனை ஸ்லோகங்கள்


நாராயணன் ஸ்ரீனிவாச சர்மா

ஒருவரின் ஜாதகத்தில் சில கிரகங்கள் பலவீனப்பட்டிருக்கலாம். அவற்றின் தசா காலங்களில் ஜாதகருக்கு நல்லது நடக்காமல் போகலாம். இப்படிப்பட்ட சமயங்களில் அந்தந்த கிரகத்தின் தொடர்புடைய விஷ்ணு அவதார ஸ்லோகங்களை பாராயணம் செய்வதன் மூலம் அந்தந்த கிரகத்தின் பலவீனம் சரி செய்யப்படும் என்று ஜோதிடம் கூறுகிறது. அவற்றை நமது ஜோதிட மாணவர்களுக்கு அளிப்பதில் பெருமையடைகின்றோம்.

சூரியன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: பித்ருகாரகன். தந்தை, மன உறுதி, உடல் ஆரோக்கியம். நேர்மை, தலைமைக் குணம், முடிவெடுக்கும் திறன்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ ராம அவதாரம்.
சூரியனுக்குரிய பாகவத ஸ்லோகம். ஸ்ரீமத் பாகவதம்: 5:19:3:--
ஓம் நமோ பகவதே உத்தமஸ்லோகாய நம ஆர்ய லக்ஷண ஸீல வ்ரதாய
நம உபசிக்ஷிதாத்மன உபாசித லோகாய நம : சாது வாத நிகஷனாய
நமோ ப்ரம்மண்ய தேவாய மாஹாபுருஷாய மஹாராஜாய நம இதி: ΙΙ
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 6000 முறை பாராயணம் செய்யவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

சந்திரன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: மனோகாரகன், மாத்ருகாரகன்; மன அமைதி தாய், செல்வம், வியாபாரம், சொத்துக்கள், உடல் நலம் (ரத்த ஓட்டம்).
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்.
சந்திரனுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: பல இடங்களில்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 10000 முறை பாராயணம் செய்யவேண்டும். திங்கள்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

செவ்வாய்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: சகோதரம். உடலின் திடகாத்திரம். விவசாயம். வீரியம். விடாமுயற்சி. விவசாயம். போர் ஆயுதங்கள். ரத்தத்தின் சிவப்பு அணுக்கள்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.
செவ்வாய்க்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:18:8
ஓம் நமோ பகவதே நரசிம்மாய நமஸ் தேஜஸ் தேஜஸே ஆவிராவிர்பவ
வஜ்ர நக வஜ்ர தம்ஷ்ட்ர கர்மாஸாயன் ரந்தய ரந்தய
தமோ க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா Ι
அபயம் அபயம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம் ΙΙ
ஓம் நமோ பகவதே ஸ்ரீ நரசிம்மாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 7000 முறை பாராயணம் செய்யவேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

புதன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: புத்திகாரகன், பேச்சுகாரகன். பேச்சு. பொருளாதார ஜீவிதம். சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ளும் திறன்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ பலராமர் – ஆதிசேஷன்.
புதனின் பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:17:17.
ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய
ஸர்வ குண சங்க்யா அனந்தாய அவ்யக்தாய
நம இதி Ι
ஒம் நமோ பகவதே பலபத்ராய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 17000 முறை பாராயணம் செய்யவேண்டும். புதன்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

குரு
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஞானம், பகுத்துப் பார்க்கும் அறிவு, புத்திரன், கர்மா
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ வாமன அவதாரம்.
குருவுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:19:11 நாரத மஹரிஷி சாவர்ணீ மனுவுக்கு நாரத பாஞ்சராத்ரம் மூலம் உபதேசித்தது.
ஓம் நமோ பகவதே உபஸம ஸீலாயோபரதானாத்ம்யாய
தமோ(அ)கிஞ்சனவித்தாய ருஷி ருஷபாய நர நாராயணாய
பரம ஹம்ச பரம குரவே ஆத்மாராமதிபதயே நமோ நம இதி Ι
ஓம் நமோ பகவதே வாமனாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 18000 முறை பாராயணம் செய்யவேண்டும். வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.


சுக்கிரன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: களத்திரகாரகன். உறவு நிலை, பொதுவான சந்தோஷங்கள். இல்லற சந்தோஷம்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ திரிவிக்ரம, ஸ்ரீ வாமன அவதாரங்கள்.
சுக்கிரனுக்குரிய பாகவத ஸ்லோகம்:  ஸ்ரீமத் பாகவதம் 5:18;18
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேசாய ஸர்வ குண
விலேஷைர் விலக்ஷிதாத்மனே ஆக்ஷதீனாம் சித்தீனாம் சேதசாம்
விசேஷாணாம் சாதிபதயே க்ஷோடசகலாய ச்சந்தோ
மாயாயன்ன மாயாயாம்ருத மயாய ஸர்வமயயாய ஹயே ஓஜஸே
பலாய காந்தாய காமாய நமஸ்தே உபயத்ர பூயாத் Ι
ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேசாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 20000 முறை பாராயணம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

சனி
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஆயுள்காரகன். உழைப்பு, கர்மவினை
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ கூர்ம அவதாரம்
சனிக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:18;30
ஓம் நமோ பகவதே அகூபராய சர்வ சத்வ குண விசேஷனாயானு
பலக்ஷித ஸ்தானாய நமோ வர்ஷமனே நமோ பூம்னே
நமோ நமோ (அ)வஸ்தானாய நமஸ்தே Ι
ஓம் நமோ பகவதே கூர்ம ரூபாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 19000 முறை பாராயணம் செய்யவேண்டும். சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

ராகு
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: பிதுர் வழி உறவுகள். கடல் பயணம்
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ வராஹ அவதாரம்.
ராகுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:18:35
ஓம் நமோ பகவதே மந்த்ர தத்வ லிங்காய யஞக்ருதவே மஹாத்வராவ்யவாய
மஹாபுருஷாய நம கர்ம சுக்லாய த்ரியுகாய நமஸ்தே Ι
ஓம் நமோ பகவதே சூகராய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 18000 முறை பாராயணம் செய்யவேண்டும். சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

கேது
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஞானம். ஆத்மாவின் விடுதலை
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்
கேதுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:18:25
ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: சத்வாய ப்ராணாயௌஜஸே
ஸஹஸே பலாய மஹாமத்ஸ்யாய நம இதி Ι
ஓம் நமோ பகவதே முக்யசமாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 7000 முறை பாராயணம் செய்யவேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

இவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகார ஸ்லோகங்கள். நம்பிக்கையுடன் உடல் தூய்மை உள்ளத்தூய்மையுடன் அந்தந்த விஷ்ணு அவதார புருஷரை ஸ்மரித்துக்கொண்டு ஸ்லோகங்களை பாரயணம் செய்யுங்கள். ஒரே நாளில் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு பாராயணம் செய்து வாருங்கள். பாராயணங்களுக்கு நடுவே சிலருக்கு (முக்கியமாக பெண்களுக்கு) சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த நாட்களில் பாராயணம் செய்ய வேண்டாம். மீண்டும் தங்களை சுத்தப்படுத்திய பிறகு தொடரலாம்.
எந்த கிரகம் பாதிப்பில் உள்ளது என்பதை உங்களால் பார்க்க முடியும். அப்படி முடியாதவர்கள் தகுந்த ஜோதிடரிடம் ஆலோசிக்கவும்.
பகவான் மஹாவிஷ்ணு உங்களது பிரார்த்தனைக்கு நிச்சயம் செவி கொடுப்பார்.
**************&&&&&&&&&*************




Saturday, 13 February 2016

ஜோதிடம் - சப்தரிஷி ஜோதிட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை: Saptharishi Arul eMagazine

ஜோதிடம் - சப்தரிஷி ஜோதிட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை: Saptharishi Arul eMagazine: Hi Readers, Thanks a lot for keeping in pace with me in all my posts published so far. The magazine for this month is released and is avai...

Saptharishi Arul eMagazine

Hi Readers,
Thanks a lot for keeping in pace with me in all my posts published so far. The magazine for this month is released and is available for your reading pleasure. Enjoy reading and enjoy sharing the same!:

https://drive.google.com/file/d/0BxVAGUaiveardTZQRHo3NWZjbk0/view?usp=sharing

ஜோதிட வகுப்பு மாணவர் ஒருவரிடமிருந்து வந்த கடிதம்

To
Feb 12 at 3:46 PM

Dear Sir, Madam

Kindly accept our heartfelt and sincere thanks for systematically leading us through the complex concepts of this amazing science!

I really enjoyed learning the science and eagerly look forward to the advanced topics in the coming months.

My humble namaskarams for spearheading the movement of education in this field!

The test we wrote last week only proved to me that I have miles to cross before I can get proficiency in astrology! But it was a fantastic test paper!

For the puja on 14th, I would like to bring about 70 pieces of homemade sweet,
which my wife has kindly consented to prepare.
Please let me know if 70 pieces would suffice or more would be needed.

Thanks and regards

Raghuraman


ராகு - செவ்வாய் - சனி பாதிப்பில் இருந்து விலக செய்ய இருக்கும் பரிகாரம் - மார்ச் 5 சென்னையில்

இந்த உலகத்தில் தீமைகள் ஏற்படும் சூழ்நிலைகள் உறுவாகும்போது மானுடர்களான நம்மால் எதுவும் செய்து அதைத் தடுத்து விட முடியுமா? மானுடரால் முடியாத நிலைகளில் இறைவனைத் தானே சரணடைய வேண்டும். இறைவனே இயற்கை வடிவத்தில் இருக்கின்றான். அந்த இயற்கை சீற்றங்களை எப்படிப்பட்ட விஞ்ஞானத் திறமையினாலும் சந்திக்க முடிவதில்லை என்பது தானே உண்மை. சமீபத்தில் பார்த்தோமே சென்னை பட்ட துயரத்தை. துயரம் வந்தடைந்த பின்னர் அதை மானுடரால் துடைக்கத்தான் முயல முடியும், வராமல் தடுக்க முடியுமா?
ஏற்கனவே சொன்னதுபோல வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஏற்படும் கிரகணம் ஒரு முக்கியமான ஒன்று. (சனி, ராகு, செவ்வாய்க் கிடையில் ஏற்படும் கூட்டு, அனைத்து கிரகங்களும் மூன்று கேந்திரங்களில் வாசம்) அதன் பின்னர் சில நாட்களில் உலகத்தில் துன்பத்தின் அலைகள் பெருமளவு வீசக்கூடும் என்பது கணிப்பு. இதிலிருந்து முடிந்தவரை நாம் பாதிக்கப்படாமல் தப்பிக்க அந்த இறை சக்தியை சரணடைவதுதான் நமக்கு கிடைத்த ஒரே வழி.
மிக முக்கியமாக செவ்வாயும் சனியும் (இரண்டு பகை கிரகங்கள்) விருச்சிகத்தில் வக்ர கதியில் செயல் படுகின்றார்கள். ராகுவால் பாதிக்கப்பட்ட குருவும் சிம்மத்தில் வக்கிர கதியில் செயல் படுகின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் லக்னத்துடன் சேர்ந்து கும்பத்தில் வாசம் செய்கின்றன. இதனால் தனி மனித வாழ்க்கையிலும் பாதிப்புகள் ஏற்படும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னமாகவோ அல்லது ராசியாகவோ அமையும் அனைவரும் பரிகாரம் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
இதுபற்றி வல்லுனர்களிடம் கலந்தாலோசித்தபோது அவர்கள் காட்டிய வழிதான் மார்ச் 5 ஆம் நாள் ஸப்தரிஷி ஜோதிட மையத்தின் சார்பில் நாம் செய்ய இருக்கும் “தேவி மஹாத்மிய ஜபம்” 10,000 முறை + “ருத்ர பாராயணம்” ஒரு முறை + “தேவி மஹாத்மிய விசேஷ ஹோமம்” 1,000 முறை + ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திர பாராயணம் ஒரு முறை ஒருமுறை என்கிற கூட்டுப் பிரார்த்தனை (ராகு + செவ்வாய் + சனி இவர்களின் தேவதைகளை அழைத்து). 
இவற்றை முறையாகச் செய்திட தேவி உபாசனை செய்பவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுடன் நாமும் சேர்ந்து ஜபம் செய்யலாம். சற்று கடினமான பிரார்த்தனைதான் இது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் நிகழ்த்தப்படுவதால் எளிதில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
அப்படி உலக நன்மைக்காக நம்முடன் இந்த பிரார்த்தனைகள் செய்ய வரும் தேவி உபாசகர்களுக்கு தகுந்த மரியாதை செய்து அவர்களை கௌரவிக்க வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்கள் தேவியின் உபாசகர்கள் என்பதால் இறை தூதர்களாக செயல் படுவர். அவர்கள் செய்யும் ஜபத்தின் பின்னர் அவர்களது சக்தி அதிகரிக்கும். அவர்களது ஆசீர்வாதம் நமக்கு பெரும் பயனளிக்கும்.
இந்த மஹா ஹோமம் + ஜபம் சேர்ந்த பிரார்த்தனை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ லலித் மஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இறைவனின் பிரசாதம் உணவாக அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் சங்கல்பம் செய்துகொள்ள 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
தேவி உபாசகர்களுக்கு வஸ்த்ரம், தக்ஷிணை ஆகியவற்றுக்கும் அன்னதானத்துக்கும் நன்கொடைகள் வரவேர்க்கப்படுகின்றன. இப்படி நன்கொடைகள் கொடுப்பதால், கொடுப்பவர்களுக்கு பல மடங்கு நன்மைகள் பெருகும் என்பது உண்மை. இது ஒரு பரிகாரச் செயல்தான்.
தேவி உலகத்தைக் காக்கும் தாய். அவளை சர்வ மங்கள மாங்கல்யே என்றும் சர்வார்த்த சாதகே என்றும் அழைக்கிறோம். மிகவும் கொடிய அசுரனான சும்பாசுரனை அவள் வதம் செய்த பிறகு அவளிடம் இந்திரன் போன்ற தேவர்கள் அக்னி தேவனின் தலைமையில், தேவியை மலர்ந்த தாமரை புஷ்பங்களுடன் வணங்குகிறார்கள். அவர்கள் அவளை காத்யாயனி என்ற ரூபத்தில் வணங்குகிறார்கள். சண்டிகாவின் இன்னொரு பெயர்தான் காத்யாயனி. பார்வதி தேவியே காத்யாயன மஹரிஷியின் மகளாக ஒருமுறை அவதரித்தாள்.

த்யானம்
ஓம் பாலார்கவித்யுதிம் இம்துகிரீடாம்
தும்ககுசாம் னயனத்ரயயுக்தாம் |
ஸ்மேரமுகீம் வரதாம் குஶபாஶ
பீதிகராம் ப்ரபஜே புவனேஶீம் |

தேவி ப்ரபன்னார்தி ஹரே ப்ரசீத
ப்ரசீத மாதர் ஜகதோகிலஸ்ய
ப்ரசீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம்
த்வமீஸ்வரி தேவி சரா சரஸ்ய
என்று அவளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.
உன்னிடம் சரணடைவர்களின் துன்பத்தைப் போக்குபவளே, தேவி, எங்களிடம் கருணை காட்டு. உனது அனுக்ரகங்களை எங்களுக்கு வழங்கு. உலகத்தின் அன்னையே, கருணை காட்டு. பிரபஞ்சத்தின் தாயே, இந்த பிரபஞ்சத்தை அழிவுகளிலிருந்து காப்பாற்று. அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் ஆள்பவளே தேவியே, காப்பாற்று.
ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் 11 ஆவது அத்தியாயத்தில் உள்ள இந்த ஸ்லோகமானது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இதையே 10,000 முறை ஜபம் செய்யவும் 1,000 முறை ஹோமம் செய்யவும் நமக்கு வழிகாட்டும் ஒரு தேவி உபாசகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து நீங்களும் ஜபத்தில் பங்கு பெறலாம். ஒரு பிரார்த்தனை பலவிதமான மக்களுடன் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக செய்யப்படும்போது அதன் பலன், பல மடங்கு பெருகி அதனால் அந்த முயற்சியில் கூட இருக்கும் அனைவரும் அவர்களது குடும்பங்களும் பலன் பெறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்புவர்கள் திருமதி உஷா ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் திரு நாகராஜன் அவர்களிடமும் பெயரும் பொருளும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். திருமதி உஷாவின் தொலை பேசி எண்: 9444047472. திரு நாகராஜனின் தொலைபேசி எண்: 9841948752
இந்த பெறும் முயற்சிக்கு நன்கொடை அளிப்பவர்களும் திருமதி உஷாவை தொடர்பு கொள்ளலாம்.
நமது சப்தரிஷி ஜோதிட மையத்தை சேர்ந்தவர்கள் அவர்களது நண்பர்களுக்கும் தெரிவித்து இதில் கலந்து கொள்ள செய்யலாம்.

வணக்கத்துடன்

நாராயணன். ஸ்ரீநிவாச சர்மா

Monday, 18 January 2016

வருகின்ற மார்ச்சு மாதம் 9 ஆம் நாள் சூரிய கிரகணம். அதன் விளைவுகள் - என் பயங்கள்

நான் ஏன் பயப்படுகிறேன்?
 
வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் தெரியும். இந்தியாவில் இது பூரணமாக இருக்காது, பகுதியாக இருக்கும். பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேது க்ரஸ்தமாக தோன்றும். காலை 05:09 லிருந்து 06:47 வரை இருக்கும்.
 
பொதுவாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரஹணம் பூமி அதிர்வுகளை ஏற்படுத்தும். கூர்ம சக்கரத்தில் பூரட்டாதி நக்ஷத்திரம் வடக்கு திசையைக் குறிப்பதாலும், இந்த கிரஹணம் ஏற்படும் ராசி கும்பம் மேற்கு திசையைக் குறிப்பதாலும் இது இந்தியாவின் வட மேற்கு திசையில் உள்ள இமயமலைப் பகுதிகளைத் தாக்கும். வடக்கில் உள்ள உத்தராகண்ட், உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதன் தாக்கம் இருக்கும். இந்தியாவுக்கு வட மேற்கில் இருக்கும் பாகிஸ்தானிலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானிலும் இதன் தாக்கம் இருக்கும்.
 
சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 நாட்களில் இந்த பூகம்பம் ஏற்படலாம். சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் உள்ள கிரக நிலைகளைப் பாருங்கள்.
 
 
 
 
 
 
சந், சூரி
கேது
லக், சுக், சூரி, புத, சந், கேது
ராசி
 
லக்னம்
நவாம்சம்
 
 
ராகு, (குரு)
சனி, புத
 
 
சனி, செவ்
 
 
ராகு
(குரு)
சுக்
செவ்
 
பவிஷ்யபல பாஸ்கரா என்னும் மிகவும் பழமையான பொது உலக ஜோதிட நூலில் சொல்லப்பட்ட விபரம்:--
ஒரு கிரகணத்தின்போது சூரியனும் சந்திரனும் தீயவர்களுடன் சேர்ந்து தீயவர்களால் பார்க்கப்பட்டால் அரசர்களையும் அவர்களது நாடுகளையும் அழிக்கும்.
லக்ன கேந்திரங்களான லக்னம், 7 ஆம் வீடு, 10 ஆம் வீடு ஆகியவற்றில் அனைத்திலும் தீயவர்கள் குடிகொண்டிருக்கின்றார்கள். 10 ஆம் வீட்டிலிருந்து செவ்வாய், லக்னம், சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் கேது ஆகியவற்றைப் பார்க்கிறார். 7 ஆம் வீட்டிலிருந்து ராகுவும் பார்க்கிறார். ராகுவுடன் சேர்ந்து பலமிழந்த குருவின் பார்வை இங்கு பலனளிக்க முடியாத நிலையில் உள்ளது. 10 ஆம் வீட்டில் இருக்கும் சனி ராகுவையும் குருவையும் பார்க்கிறார்.
சூரியனுக்கு செவ்வாயின் கேந்திர பார்வை ஒரு யுத்தத்தைக் கொண்டுவரும். இந்த யுத்தம் மேற்கு நாடுகளில் ஒன்றில் நடக்கும். அது இந்தியாவின் மேற்கிலும் நடக்கலாம். ஏனெனில் இந்த நிலை மேற்கு திசையைக் குறிக்கும் கும்பத்தில் ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சனி கேட்டை நக்ஷத்திரத்தில் பவனி வருகிறார். சில பழைய நூல்கள் சனி கேட்டையில் கோசாரத்தில் பவனி வரும் காலை மேற்கு திசையில் ஒரு யுத்தம் வரும் என்கின்றன.
ஜோதிடரீதியாக இந்தியாவின் மேற்கு பகுதியில் யுத்தம் வரும் வாய்ப்பு அதிக அளவில் தென்படுகின்றது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்து யுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம் ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன. அதுபோல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் (இந்தியாவின் மேற்கு பகுதி) யுத்தத்துக்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன. கூர்ம சக்கரம் இதைத்தான் சொல்லுகிறது.
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேத்திக்குப் பின்னர் சுமார் 20 நாட்கள் சனி, செவ்வாய், குரு ஆகிய மூவரும் வக்கிர கதியில் பயணம் செய்கிறார்கள். அப்பொழுது சைனாவின் வடக்கு, ஹிந்துகுஷ் மலைப்பகுதிகள், ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்னொரு பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆக இந்த கிரகணம் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவு ஆகியவற்றுக்கு ஆரம்பமாக இருக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை.
இன்னுமொரு சூரிய கிரகணம் செப்டம்பர் 1, 2016 அன்று ராகு க்ரஸ்தமாக ஏற்படுகின்றது. அந்த கால கட்டத்திலும் சிம்மத்தில் சூரியன், சந்திரன், ராகு அமர்கிறார்கள். அதன் கேந்திரமான விருச்சிகத்தில் சனியும், செவ்வாயும் அமர்கிறார்கள். கேது கும்பத்தில் அமர்கிறார். இந்த நிலையும் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
பிருஹத் சமிதையில் சொல்லப்பட்ட நிலை:--
·         சூரியன் அல்லது சந்திரனின் உதய நேரம் அல்லது அஸ்தமன நேரத்தில் ஒரு கிரகணம் ஏற்படின் அது பயிர்களை நாசம் செய்யும்;அரசர்களுக்கு தொல்லை தரும்.
·         கிரகணப் புள்ளி கும்பத்தில் அமைகிறது. அது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வேலை செய்யும். ஏனெனில் செவ்வாய் அந்த ஆறு மாதங்கள் விருச்சிகத்திலிருந்து கும்பத்தை பார்க்கிறார்.
·         செவ்வாய் சூரியனையும் சந்திரனையும் கிரகணத்தின்போது பார்ப்பது நெருப்பினால் ஆபத்து, யுத்தம் மற்றும் திருடர்களால் ஆபத்து போன்றவற்றைக் கொண்டு வரும்.
·         இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து 23 ஆம் தேதி ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அது இந்தியாவில் தெரியாது. இப்படி ஒரே மாதத்தில் இரு கிரகணங்கள் ஏற்படுவது அழிவைத்தரும்.
·         குரு வக்ரகதியில் பயணிக்கும்போது சனியும் ராகுவும் அதை பாதிக்கும்போது இக்கிரகணத்தின் தாக்கம் அதிகமாகிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போய்விடுகிறது.
·         தன காரகன் குரு பலமிழப்பதால் ஷேர்மார்க்கெட்டில் வீழ்ச்சி ஏற்படலாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம்.
·         எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் அமைவது தீய பலன்களுக்கு வலு சேர்க்கிறது.
·         நவாம்சத்தில் செவ்வாயும், சனியும் பூமி தத்துவத்தால் ஆளப்படும் ராசிகளில் அமர்ந்திருப்பது பூகம்பத்துக்கு வழிவிடும் என்று ஜோதிட மேதை பி. வி. ராமன் அவர்கள் தன்னுடைய நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
 
நாம் செய்ய வேண்டியது என்ன?
 
·         உலக அமைதிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         துர்கைக்கு ஹோமம், விஷ்ணுவுக்கு திருமஞ்சனம், சிவனுக்கு ருத்ராபிஷேகம் போன்றவற்றை நிகழ்த்தி உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         ஓம் நமோ பகவதே சூகராய நமஹ என்னும் மந்திரத்தை 108 என்கிற அலவில் நிறைய நாட்கள் ஜபிக்க வேண்டும்.