Sunday, 13 March 2016

கிரகங்களின் பிரார்த்தனை ஸ்லோகங்கள்


நாராயணன் ஸ்ரீனிவாச சர்மா

ஒருவரின் ஜாதகத்தில் சில கிரகங்கள் பலவீனப்பட்டிருக்கலாம். அவற்றின் தசா காலங்களில் ஜாதகருக்கு நல்லது நடக்காமல் போகலாம். இப்படிப்பட்ட சமயங்களில் அந்தந்த கிரகத்தின் தொடர்புடைய விஷ்ணு அவதார ஸ்லோகங்களை பாராயணம் செய்வதன் மூலம் அந்தந்த கிரகத்தின் பலவீனம் சரி செய்யப்படும் என்று ஜோதிடம் கூறுகிறது. அவற்றை நமது ஜோதிட மாணவர்களுக்கு அளிப்பதில் பெருமையடைகின்றோம்.

சூரியன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: பித்ருகாரகன். தந்தை, மன உறுதி, உடல் ஆரோக்கியம். நேர்மை, தலைமைக் குணம், முடிவெடுக்கும் திறன்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ ராம அவதாரம்.
சூரியனுக்குரிய பாகவத ஸ்லோகம். ஸ்ரீமத் பாகவதம்: 5:19:3:--
ஓம் நமோ பகவதே உத்தமஸ்லோகாய நம ஆர்ய லக்ஷண ஸீல வ்ரதாய
நம உபசிக்ஷிதாத்மன உபாசித லோகாய நம : சாது வாத நிகஷனாய
நமோ ப்ரம்மண்ய தேவாய மாஹாபுருஷாய மஹாராஜாய நம இதி: ΙΙ
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 6000 முறை பாராயணம் செய்யவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

சந்திரன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: மனோகாரகன், மாத்ருகாரகன்; மன அமைதி தாய், செல்வம், வியாபாரம், சொத்துக்கள், உடல் நலம் (ரத்த ஓட்டம்).
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்.
சந்திரனுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: பல இடங்களில்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 10000 முறை பாராயணம் செய்யவேண்டும். திங்கள்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

செவ்வாய்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: சகோதரம். உடலின் திடகாத்திரம். விவசாயம். வீரியம். விடாமுயற்சி. விவசாயம். போர் ஆயுதங்கள். ரத்தத்தின் சிவப்பு அணுக்கள்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.
செவ்வாய்க்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:18:8
ஓம் நமோ பகவதே நரசிம்மாய நமஸ் தேஜஸ் தேஜஸே ஆவிராவிர்பவ
வஜ்ர நக வஜ்ர தம்ஷ்ட்ர கர்மாஸாயன் ரந்தய ரந்தய
தமோ க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா Ι
அபயம் அபயம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம் ΙΙ
ஓம் நமோ பகவதே ஸ்ரீ நரசிம்மாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 7000 முறை பாராயணம் செய்யவேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

புதன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: புத்திகாரகன், பேச்சுகாரகன். பேச்சு. பொருளாதார ஜீவிதம். சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ளும் திறன்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ பலராமர் – ஆதிசேஷன்.
புதனின் பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:17:17.
ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய
ஸர்வ குண சங்க்யா அனந்தாய அவ்யக்தாய
நம இதி Ι
ஒம் நமோ பகவதே பலபத்ராய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 17000 முறை பாராயணம் செய்யவேண்டும். புதன்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

குரு
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஞானம், பகுத்துப் பார்க்கும் அறிவு, புத்திரன், கர்மா
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ வாமன அவதாரம்.
குருவுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:19:11 நாரத மஹரிஷி சாவர்ணீ மனுவுக்கு நாரத பாஞ்சராத்ரம் மூலம் உபதேசித்தது.
ஓம் நமோ பகவதே உபஸம ஸீலாயோபரதானாத்ம்யாய
தமோ(அ)கிஞ்சனவித்தாய ருஷி ருஷபாய நர நாராயணாய
பரம ஹம்ச பரம குரவே ஆத்மாராமதிபதயே நமோ நம இதி Ι
ஓம் நமோ பகவதே வாமனாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 18000 முறை பாராயணம் செய்யவேண்டும். வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.


சுக்கிரன்
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: களத்திரகாரகன். உறவு நிலை, பொதுவான சந்தோஷங்கள். இல்லற சந்தோஷம்.
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ திரிவிக்ரம, ஸ்ரீ வாமன அவதாரங்கள்.
சுக்கிரனுக்குரிய பாகவத ஸ்லோகம்:  ஸ்ரீமத் பாகவதம் 5:18;18
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேசாய ஸர்வ குண
விலேஷைர் விலக்ஷிதாத்மனே ஆக்ஷதீனாம் சித்தீனாம் சேதசாம்
விசேஷாணாம் சாதிபதயே க்ஷோடசகலாய ச்சந்தோ
மாயாயன்ன மாயாயாம்ருத மயாய ஸர்வமயயாய ஹயே ஓஜஸே
பலாய காந்தாய காமாய நமஸ்தே உபயத்ர பூயாத் Ι
ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேசாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 20000 முறை பாராயணம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

சனி
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஆயுள்காரகன். உழைப்பு, கர்மவினை
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ கூர்ம அவதாரம்
சனிக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம்: 5:18;30
ஓம் நமோ பகவதே அகூபராய சர்வ சத்வ குண விசேஷனாயானு
பலக்ஷித ஸ்தானாய நமோ வர்ஷமனே நமோ பூம்னே
நமோ நமோ (அ)வஸ்தானாய நமஸ்தே Ι
ஓம் நமோ பகவதே கூர்ம ரூபாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 19000 முறை பாராயணம் செய்யவேண்டும். சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

ராகு
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: பிதுர் வழி உறவுகள். கடல் பயணம்
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ வராஹ அவதாரம்.
ராகுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:18:35
ஓம் நமோ பகவதே மந்த்ர தத்வ லிங்காய யஞக்ருதவே மஹாத்வராவ்யவாய
மஹாபுருஷாய நம கர்ம சுக்லாய த்ரியுகாய நமஸ்தே Ι
ஓம் நமோ பகவதே சூகராய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 18000 முறை பாராயணம் செய்யவேண்டும். சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

கேது
பாதிக்கப்படும் காரகத்துவங்கள்: ஞானம். ஆத்மாவின் விடுதலை
விஷ்ணு அவதாரம்: ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்
கேதுக்குரிய பாகவத ஸ்லோகம்: ஸ்ரீமத் பாகவதம் 5:18:25
ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: சத்வாய ப்ராணாயௌஜஸே
ஸஹஸே பலாய மஹாமத்ஸ்யாய நம இதி Ι
ஓம் நமோ பகவதே முக்யசமாய நமஹ Ι
இந்த ஸ்லோகத்தை 7000 முறை பாராயணம் செய்யவேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வேளை உணவுண்டு விரதம் இருந்தால் கூடுதல் பலன்.

இவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகார ஸ்லோகங்கள். நம்பிக்கையுடன் உடல் தூய்மை உள்ளத்தூய்மையுடன் அந்தந்த விஷ்ணு அவதார புருஷரை ஸ்மரித்துக்கொண்டு ஸ்லோகங்களை பாரயணம் செய்யுங்கள். ஒரே நாளில் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு பாராயணம் செய்து வாருங்கள். பாராயணங்களுக்கு நடுவே சிலருக்கு (முக்கியமாக பெண்களுக்கு) சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த நாட்களில் பாராயணம் செய்ய வேண்டாம். மீண்டும் தங்களை சுத்தப்படுத்திய பிறகு தொடரலாம்.
எந்த கிரகம் பாதிப்பில் உள்ளது என்பதை உங்களால் பார்க்க முடியும். அப்படி முடியாதவர்கள் தகுந்த ஜோதிடரிடம் ஆலோசிக்கவும்.
பகவான் மஹாவிஷ்ணு உங்களது பிரார்த்தனைக்கு நிச்சயம் செவி கொடுப்பார்.
**************&&&&&&&&&*************