ஒருவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டால் அது பந்தனம்,
சிறைவாசம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அவரால் தன்னிஷ்டத்திற்கு செயல்கள் செய்ய
முடியாது. அவரை எப்பொழுதும் யாராவது ஒருவர் கண்காணித்துக் கொண்டிருப்பர். அவர்
விரும்பியவர்களை விரும்புகின்ற நேரத்தில் பார்க்க முடியாது, பேச முடியாது.
அது தன்னிச்சையாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டுப்பாடு அல்ல.
அவர் மீது திணிக்கப்பட்டது. சிலர் பாசம் என்கிற பெயரில் பந்தத்தில் மாட்டிக்கொண்டு
தன் சுதந்திரத்தை இழக்கிறார்கள். சிலர் அடுத்தவர்களாலோ, சமூகத்தாலோ தவறு என்று கருதப்படும் செயல்களைச்
செய்து பிடிபட்டவர், அப்படிப்பட்ட செயல்கள் தவறானவை என்று சட்ட நிபுணர்களால்
நிரூபிக்கப் பட்டவர், வழக்குரை மன்றங்களால் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ........
இப்படிப்பட்ட பந்தங்களில் மாட்டிக்கொண்டு சிறைவாசம் செய்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் பந்தன
யோகம்.
ஜோதிட சாஸ்திரம் இந்த பந்தன யோகத்தைப் பற்ரி நிறைய சொல்லி
இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன
யோகத்திற்கு காரணமாகின்றது. முக்கியமான பாவங்கள் 6, 8 12.
·
2-12, 3-11, 4-10, 5-9 ஆகிய பாவங்களில் சம எண்ணிக்கையில் கிரகங்கள் அமர்ந்தால்
பந்தன யோகம் ஏற்படும். 6-8 பாவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
·
2-12 ம் பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து அவை வேறு தீய கிரகங்களால்
பார்க்கப்பட்டால் பந்தன யோகம் ஏற்படும்.
·
4 ம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அமர்ந்து 10 ல் சனி அமர்ந்தாலும்
அல்லது 10 ம் பாவத்தை சனி பார்த்து 4 ம் வீட்டை சூரியன், செவ்வாய் பார்த்தாலும்
பந்தன யோகம் ஏற்படும்.
·
லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சனியுடன்
சேர்ந்து அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டாலும் (கேதுவுடன் சேர்ந்து அமரும் நிலை)
பந்தன யோகம் ஏற்படும்.
·
9 ம் பாவத்திலும் 10 ம் பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு
இல்லாமல் இருப்பின் அங்கு பந்தன யோகம் ஏற்படும்.
·
லக்னம் ஆயுத, சர்ப்ப அல்லது பாச திரேக்காணத்தில் விழுந்தால் ஜாதகருக்கு பந்தன
யோகம் ஏற்படும்.
·
விருச்சிக லக்னத்தாருக்கு 2, 5, 9 ம் பாவங்களில் தீயவர் அமர்ந்து சுபர்
பாதிப்பு எதுவும் இல்லை என்றால் அவருக்கு பந்தன யோகம் ஏற்படும்.
செய்யும் தவறுகளும் அதற்காக கிடைக்கும் தண்டனையும்
சம்பந்தப்பட்ட பாவங்களாலும் கிரகங்களாலும் குறிப்பிட்டுக் காட்டப்படும். 2 ம் பாவமும்
5 ம் பாவமும் தீயவர்களாலே ஆக்கிரமிக்கப்பட்டால் தகுதிக்கு மேலே சொத்துக்களை
சேர்ப்பதானாலும் அடுத்தவரை ஏமாற்றியதாலும் தண்டனை கிடைக்கும். இந்த யோகத்தில்
செவ்வாயின் தாக்கம் இருந்தால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததற்கு
தண்டனை கிடைக்கும். இந்த பந்தன யோகத்தில் குரு, சுக்கிரன் அல்லது லக்னாதிபதி
அல்லது 9 ம் அதிபதி சம்பந்தப்பட்டால் இது அரசியல் சம்பந்தப்பட்ட (அதிகார
துஷ்பிரயோகம்) தவறாகவும் அதனால் ஏற்படும் தண்டனையாகவும் அமையும்.
செவ்வாயின் தொடர்பு ஏற்படும்போது அங்கு கொலை போன்ற தவறுகள்
நடக்கும். செவ்வாயுடன், சுக்கிரன் மற்றும் 12 ம் பாவம் சம்பந்தப்பட்டால் உடலுறவு,
கற்பழிப்பு போன்ற தவறுகள் நடக்கும். சனியும் செவ்வாயும் சம்பந்தப்படும்பொழுது
மீண்டும் மீண்டும் தவறு செய்யும் ஒரு குற்ரவாளி நபர் சம்பந்தப்பட்டிருப்பார்.
புதனும் சந்திரனும் இந்த பந்தன யோகத்தில் சம்பந்தப்பட்டால்
மீண்டும் மீண்டும் சிறை வாசம் செய்யும் நிலை ஏற்படும். ஒரே ஒரு பந்தன யோகம்
மட்டும் ஏற்பட்டு சிம்மம் லக்னமானால் சிறைவாசம் தவிர்க்கப்படும். எப்படி என்றாலும்
குற்றம் என்று வரும்பொழுது 5 ம் பாவமும் 9 ம் பாவமும் ஒன்றுக்கு மேர்ப்பட்ட
தீயவரின் பிடியில் மாட்டிக்கொள்ளும் நிலை காணப்படும்.
கீழெ கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:-
லக்னம் ஆயுத திரேக்காணத்தில் – பந்தன யோகம்..
2 ம் அதிபதி சந்திரன் வக்கிர செவ்வாயின் பிடியில் (6, 11
க்கு அதிபர்). ராகுவின் பார்வையில். தீயவர்களான சூரியன் வக்கிர புதன் பார்வையில்.
குரு பார்வை ஒரு நன்மை.
5 ம் அதிபதி சுக்கிரன் உச்சத்தில். ஆனால் செவ்வாயின்
பார்வையில்.
சுக்கிரன்
|
ராகு
|
லக்னம்
|
|
புதன்(வ), சூரியன்
|
24-02-1948 சென்னை பகல் 14:34
|
சனி(வ)
|
|
சந்திரன், செவ்வாய்(வ)
|
|||
குரு
A 11
|
கேது
|
2 ம் பாவத்தில் சனி. 5 ம் பாவத்தில் கேது. ஆக இரண்டு
மற்றும் ஐந்தாம் பாவங்கள் தீயவர்களின் பிடியில். (பந்தன யோகம்).
11 ம் பாவத்தில் ராகு. கூடா நட்பு என்பதை அது அடையாளம்
காட்டுகிறது. சனியால் பார்க்கப்படுகிறது. அது 5 ம் பாவத்தைப் பார்க்கிறது.
A 11 - தனுசு ராசியில். அங்கிருந்து
11 வீட்டின் மூலம் வருமானம். வீடு சுக்கிரனுடையது. அவர் உச்சம்.
திரைத்துறையிலிருந்து வருமானம். அதே சமயம் அந்த வீட்டை ராகு பாதிக்கிறார். கூடா
நட்பு மூலமும் வருமானம். கூடா நட்புக்கு காரணமான ராகு 2 ம் அதிபரைப் பார்க்கிறார்.
அதுமட்டுமின்றி தன காரகனான குருவையும் பார்க்கிறார். தனஸ்தானம், தன காரகன்
இருவரையும் அவர் பார்ப்பதால் அவர் மூலம் பண வரவு அடையாளம் காட்டப்ப்டுகிறது. இந்த
ஜாதகருக்கு 9 ம் அதிபதி சனி. அவர் அதிக பாகை கடந்துள்ளார். பந்தன யோகம் 9 ம்
அதிபரோடு சம்பந்தம். இது அரசியலின் காரணமாக தவறு என்பதையும் அதனால் கிடைக்கும்
தண்டனையையும் காட்டுகிறது.
உபய லக்ன ஜாதகர். 7 ம் பாவம் பாதகஸ்தானம். பாதகஸ்தானதிபதி
குரு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நவாம்சத்தில் செவ்வாயுடன் சேர்ந்து
மேஷத்தில் அமர்ந்து அவர்களை சனி பார்க்கிறார். பாதகஸ்தானாதிபதி பாதிக்கப்பட்டு
பாதகஸ்தானத்தில் அமரும்போது பாதகத்தை தங்கு தடையின்றி செய்கிறார். வக்கிர சனி
ஆத்மகாரகன். குரு 7 ம் பாவத்துக்கு மட்டுமல்ல, ஜீவனஸ்தானத்துக்கும் அதிபர்.
ஜாதகரின் 12 ம் பாவத்தின் ஆருதபாவம் மகரத்தில், சனியின் வீட்டில். அந்த பாவத்தை
சனி பார்க்கிறார். 12 ம் பாவத்தின் ஆருத பாவம் சிறைவாசம் மற்றும் ரகசிய
எதிரிகளையும் குறிக்கிறது.
தற்பொழுது நடப்பது குரு தசா 08-08-2012 லிருந்து. அதற்கு
முன்னர் 1994 ல் இருந்து 2012 வரை ராகு தசா. 1987 ல் இருந்து 1994 வரை செவ்வாய்
தசா.
1992 ல் வக்கிர செவ்வாயின் தசாவில் புதன் புக்தி முடியும்
தருவாயில் பதவியில் அமர்வு. 1996 ல் ராகு தசா ராகு புக்தியில் முதல் முறையாக சிறை
வாசம். பின் வழக்குகள், வழக்குகள், குரு
தசா குரு புக்தி சரியாக 27-09-2014 அன்று முடிந்து சனி புக்தி ஆரம்பம். சனி புக்தி
05-04-2017 வரை. இரண்டாவது சிறைவாசம். மீண்டும் சிறைவாசம் புதன் சந்திரனின்
தொடர்பு இருந்தால் ஏற்படும். ஆம் இங்கு புதனும் சந்திரனும் ஒருவரை மற்றவர்
நேர்பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறைவாசம் ஆரம்பிக்கும் காலை குரு
தசா (பாதகாதிபதி) சனி (8 ம் அதிபதி) புக்தி, சனி அந்தரம், சனி சூக்ஷுமம், சனி
நேத்ரம், சனி ஜீவன் (27-09-2014 17:48:06 வரை).
இந்த ஜாதகத்தில் ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு கிரகம் 16 வர்கச்சக்கரங்களில் எத்தனை சக்கரங்களில் வர்க
மேன்மை பெறுகிறது என்பது அவரது நிலைக் காட்ட உதவும். ஒரு கிரகம் தன் உச்ச
வீட்டிலோ, மூலத் திரிகோண வீட்டிலோ அல்லது தன் சொந்த வீட்டிலோ அவ்வாறு அமருமாயின்
அது அது வர்க மேன்மை பெறுகிறது.
இவரது ஜாதகத்தில் குரு ஷோடச வர்கத்தில் “கல்பவ்ருக்ஷாம்சா”
என்கிற நிலையை அடைந்துள்ளார். கல்பவ்ருக்ஷம் என்பது கேட்டதைத் தரும் ஒரு தேவ மரம்.
தச வர்கத்தில் “சிம்மாசனாம்சா” என்கிற
நிலையில் உள்ளார். அரசாட்சி செய்வார் என்பது இதன் பொருள். சப்த வர்கத்தில்
“சாமராம்சா” என்கிற நிலையில் உள்ளார். இது வேலைக்காரர்கல் சாமரம் வீசி பணிவுடன்
வேலை செய்வார்கள் என்பது இதன் பொருள். ஷட் வர்கத்தி “வ்யஞ்சனாம்சா” என்கிற நிலை.
வியஞ்சனம் என்றால் நிறைய சொத்துக்கலை அடைவார் என்று பொருள். சனியும் சுக்கிரனும்
“நாகபுருஷாம்சா” என்கிற நிலையில் உள்ளனர். இதன் பொருள் இவர் வாசமுள்ள மலராக
பாம்புகள் தன்னிடம் விரும்பி சேரும் வண்ணம் விளங்குவார். இப்படி இவரது கிரகங்கள்
வர்க மேன்மை பெற்றிருந்தாலும் குரு பாதகாதிபதியாகவும், சனி 8 ம் அதிபதியாகவும் சுக்கிரன்
12 ம் அதிபதியாகவும் அமைந்து விட்டார்கள். இப்படிப்பட்ட நிலையே இவருக்கு பாதகமாக
அமைகிறது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது போலும்.
******************************************************************************************************************
No comments:
Post a Comment