Monday, 18 January 2016

வருகின்ற மார்ச்சு மாதம் 9 ஆம் நாள் சூரிய கிரகணம். அதன் விளைவுகள் - என் பயங்கள்

நான் ஏன் பயப்படுகிறேன்?
 
வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் தெரியும். இந்தியாவில் இது பூரணமாக இருக்காது, பகுதியாக இருக்கும். பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேது க்ரஸ்தமாக தோன்றும். காலை 05:09 லிருந்து 06:47 வரை இருக்கும்.
 
பொதுவாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரஹணம் பூமி அதிர்வுகளை ஏற்படுத்தும். கூர்ம சக்கரத்தில் பூரட்டாதி நக்ஷத்திரம் வடக்கு திசையைக் குறிப்பதாலும், இந்த கிரஹணம் ஏற்படும் ராசி கும்பம் மேற்கு திசையைக் குறிப்பதாலும் இது இந்தியாவின் வட மேற்கு திசையில் உள்ள இமயமலைப் பகுதிகளைத் தாக்கும். வடக்கில் உள்ள உத்தராகண்ட், உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதன் தாக்கம் இருக்கும். இந்தியாவுக்கு வட மேற்கில் இருக்கும் பாகிஸ்தானிலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானிலும் இதன் தாக்கம் இருக்கும்.
 
சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 நாட்களில் இந்த பூகம்பம் ஏற்படலாம். சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் உள்ள கிரக நிலைகளைப் பாருங்கள்.
 
 
 
 
 
 
சந், சூரி
கேது
லக், சுக், சூரி, புத, சந், கேது
ராசி
 
லக்னம்
நவாம்சம்
 
 
ராகு, (குரு)
சனி, புத
 
 
சனி, செவ்
 
 
ராகு
(குரு)
சுக்
செவ்
 
பவிஷ்யபல பாஸ்கரா என்னும் மிகவும் பழமையான பொது உலக ஜோதிட நூலில் சொல்லப்பட்ட விபரம்:--
ஒரு கிரகணத்தின்போது சூரியனும் சந்திரனும் தீயவர்களுடன் சேர்ந்து தீயவர்களால் பார்க்கப்பட்டால் அரசர்களையும் அவர்களது நாடுகளையும் அழிக்கும்.
லக்ன கேந்திரங்களான லக்னம், 7 ஆம் வீடு, 10 ஆம் வீடு ஆகியவற்றில் அனைத்திலும் தீயவர்கள் குடிகொண்டிருக்கின்றார்கள். 10 ஆம் வீட்டிலிருந்து செவ்வாய், லக்னம், சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் கேது ஆகியவற்றைப் பார்க்கிறார். 7 ஆம் வீட்டிலிருந்து ராகுவும் பார்க்கிறார். ராகுவுடன் சேர்ந்து பலமிழந்த குருவின் பார்வை இங்கு பலனளிக்க முடியாத நிலையில் உள்ளது. 10 ஆம் வீட்டில் இருக்கும் சனி ராகுவையும் குருவையும் பார்க்கிறார்.
சூரியனுக்கு செவ்வாயின் கேந்திர பார்வை ஒரு யுத்தத்தைக் கொண்டுவரும். இந்த யுத்தம் மேற்கு நாடுகளில் ஒன்றில் நடக்கும். அது இந்தியாவின் மேற்கிலும் நடக்கலாம். ஏனெனில் இந்த நிலை மேற்கு திசையைக் குறிக்கும் கும்பத்தில் ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சனி கேட்டை நக்ஷத்திரத்தில் பவனி வருகிறார். சில பழைய நூல்கள் சனி கேட்டையில் கோசாரத்தில் பவனி வரும் காலை மேற்கு திசையில் ஒரு யுத்தம் வரும் என்கின்றன.
ஜோதிடரீதியாக இந்தியாவின் மேற்கு பகுதியில் யுத்தம் வரும் வாய்ப்பு அதிக அளவில் தென்படுகின்றது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்து யுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம் ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன. அதுபோல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் (இந்தியாவின் மேற்கு பகுதி) யுத்தத்துக்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன. கூர்ம சக்கரம் இதைத்தான் சொல்லுகிறது.
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேத்திக்குப் பின்னர் சுமார் 20 நாட்கள் சனி, செவ்வாய், குரு ஆகிய மூவரும் வக்கிர கதியில் பயணம் செய்கிறார்கள். அப்பொழுது சைனாவின் வடக்கு, ஹிந்துகுஷ் மலைப்பகுதிகள், ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்னொரு பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆக இந்த கிரகணம் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவு ஆகியவற்றுக்கு ஆரம்பமாக இருக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை.
இன்னுமொரு சூரிய கிரகணம் செப்டம்பர் 1, 2016 அன்று ராகு க்ரஸ்தமாக ஏற்படுகின்றது. அந்த கால கட்டத்திலும் சிம்மத்தில் சூரியன், சந்திரன், ராகு அமர்கிறார்கள். அதன் கேந்திரமான விருச்சிகத்தில் சனியும், செவ்வாயும் அமர்கிறார்கள். கேது கும்பத்தில் அமர்கிறார். இந்த நிலையும் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
பிருஹத் சமிதையில் சொல்லப்பட்ட நிலை:--
·         சூரியன் அல்லது சந்திரனின் உதய நேரம் அல்லது அஸ்தமன நேரத்தில் ஒரு கிரகணம் ஏற்படின் அது பயிர்களை நாசம் செய்யும்;அரசர்களுக்கு தொல்லை தரும்.
·         கிரகணப் புள்ளி கும்பத்தில் அமைகிறது. அது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வேலை செய்யும். ஏனெனில் செவ்வாய் அந்த ஆறு மாதங்கள் விருச்சிகத்திலிருந்து கும்பத்தை பார்க்கிறார்.
·         செவ்வாய் சூரியனையும் சந்திரனையும் கிரகணத்தின்போது பார்ப்பது நெருப்பினால் ஆபத்து, யுத்தம் மற்றும் திருடர்களால் ஆபத்து போன்றவற்றைக் கொண்டு வரும்.
·         இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து 23 ஆம் தேதி ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அது இந்தியாவில் தெரியாது. இப்படி ஒரே மாதத்தில் இரு கிரகணங்கள் ஏற்படுவது அழிவைத்தரும்.
·         குரு வக்ரகதியில் பயணிக்கும்போது சனியும் ராகுவும் அதை பாதிக்கும்போது இக்கிரகணத்தின் தாக்கம் அதிகமாகிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போய்விடுகிறது.
·         தன காரகன் குரு பலமிழப்பதால் ஷேர்மார்க்கெட்டில் வீழ்ச்சி ஏற்படலாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம்.
·         எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் அமைவது தீய பலன்களுக்கு வலு சேர்க்கிறது.
·         நவாம்சத்தில் செவ்வாயும், சனியும் பூமி தத்துவத்தால் ஆளப்படும் ராசிகளில் அமர்ந்திருப்பது பூகம்பத்துக்கு வழிவிடும் என்று ஜோதிட மேதை பி. வி. ராமன் அவர்கள் தன்னுடைய நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
 
நாம் செய்ய வேண்டியது என்ன?
 
·         உலக அமைதிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         துர்கைக்கு ஹோமம், விஷ்ணுவுக்கு திருமஞ்சனம், சிவனுக்கு ருத்ராபிஷேகம் போன்றவற்றை நிகழ்த்தி உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         ஓம் நமோ பகவதே சூகராய நமஹ என்னும் மந்திரத்தை 108 என்கிற அலவில் நிறைய நாட்கள் ஜபிக்க வேண்டும்.
 
 
அன்புள்ள சென்னை வாசகர்களே,

எளிய முறையில் மிகவும் குறைந்த செலவில் நமது மகரிஷிகளால் நமக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட வேத ஜோதிடம் பயில வேண்டுமா?

உடனே அணுகுங்கள் எங்களை.

தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முகவும் எளிய அணுகு முறையில் ஜோதிடம் சொல்லித் தருகின்றோம்.

அடிப்படை - 6 மாதம்.

உயர் நிலை - 6 மாதம்.

சென்னை தி. நகரில் ஹபிபுல்லா சாலையில் கர்னாடக சங்கா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09 30 மணி முதல் பகல் 12 30 மணி வரை பயிலலாம்.

வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி (2016) முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்.

விபரங்களுக்கு கைப் பேசி எண்கள்:

93 81 71 30 52 - நாராயணன்
9841431273 - சேகரன்
98 40 13 64 03 - ஷ்யாமளா

நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்.

அன்பன் நாராயணன்.

General Health Part 3

பொதுவான ஆரோக்கியம் – பகுதி 3
ஒரு ஜோதிடர் ஜாதகரின் நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும்போது நோயைப் பற்றி சொல்லுவதில் கவனமாக இருத்தல் வேண்டும். கிரக நிலைகள் மட்டும் அதை உறுதி செய்யாது. ஏனெனில் அந்த கிரக நிலைகளுக்கு நல்லதொரு பார்வை இருந்து விடலாம். அல்லது ஆறாம் பாவம் நல்ல பார்வையில் இருக்கலாம். ஒரு பாவத்தின் மூலம் சொல்லப்படும் வியாதி சந்திரன், சூரியன் மற்றும் நவாம்ச லக்னம் இவற்றின் பலத்தால் ஏற்படாமலே போகலாம். லக்னத்திலிருந்து நோய் தென்படாமலும் சந்திரன் சூரியன் வீட்டிலிருந்து தென்படவும் செய்யலாம். சில சமயம் லக்னம், சந்திரன், சூரியன் ஆகிய மூன்றுக்கும் தொடர்புடைய நிலையில் உள்ள ஒரு வீடு பாதிப்படைந்திருந்தால்  நோய் கட்டாயம் ஏற்படும்.
கிரகங்களின் இயற்கை குணங்கள் அவை எந்த அவஸ்தையிலிருந்தாலும் மற்றும் அவை அமர்ந்திருக்கும் வீடுகள் ஆகிய இரண்டும் நோய் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சுபர் கொடுக்கும் வியாதி தீயவரிடமிருந்து மாறுபட்டிருக்கும். ஒரு நட்பு கிரகம் கொடுக்கும் வியாதி பகை கிரகத்திலிருந்து மாறுபட்டிருக்கும். நோயின் தன்மை கிரகங்களின் குணத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும்.
உதாரணத்துக்கு சனியை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு வெவ்வேறு லக்னங்கள் எடுத்துக் கொள்வோம். ஒன்று ரிஷப லக்னம். மற்றொன்று சிம்ம லக்னம். ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன் – ஒன்பதுக்கும் பத்துக்கும் அதிபர். சுபர். சிம்ம லக்னத்துக்கு ஆறுக்கும் ஏழுக்கும் அதிபர். அசுபர். மாரகர். இந்த இரண்டு லக்னத்துக்கும் சனியினால் அடையாளம் காட்டப்படும் நோய் நிச்சயம் மாறுபடும் அல்லவா?
இன்னொரு முக்கிய விஷயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் அதிபர் இயற்கை சுபர் அல்லது அசுபராகலாம். இயற்கை சுபரால் அளிக்கப்படும் நோய் இயற்கை அசுபரால் அளிக்கப்படும் நோயைவிட குறைவான தொல்லைகள் தரும்.
உதாரணமாக குருவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் துலா லக்னத்துக்கு மூன்று ஆறு ஆகிய வீடுகளின் அதிபர். அடுத்து சனியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிம்ம லக்னத்துக்கு ஆறு மற்றும் ஏழுக்கு அதிபர். குரு இயற்கை சுபர். சனி இயற்கை அசுபர். இந்த இரண்டு நிலைகளையும் ஒப்பிட்டால் சனி குருவை விட அதிக தொல்லைகள் தருவார் என்பது புரியும்.
இரண்டு கிரகங்களுக்கிடையில் உள்ள உறவு நிலையும் மிகவும் முக்கியமானதாகும். உதாரணத்துக்கு சூரியனை செவ்வாயை நேர்ப் பார்வையாக பார்ப்பதாகக் கொள்ளுங்கள். சூரியன் செவ்வாயின் நண்பர். ஆனால் சூரியனிலிருந்து ஏழாம் வீட்டில் இருப்பதால் அவர் பகைவர். ஒரு வகையில் நட்பானாலும் இன்னொருவகையில் பகையாவதால் அவர் நடுநிலை வகிக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். இன்னூரு நிலையில் செவ்வாய் சூரியனுக்கு 10 ஆம் வீட்டிலிருந்து பார்க்கிறார் என்று கொண்டால் இந்த நிலையில் அவர் இரு கோணங்களிலும் நண்பராகிரார். இந்த இரண்டு நிலைகளிலும் நோயின் தன்மையில் மாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பார்வை மற்றும் சேர்க்கை இரண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு சனி கடகத்தில் 18 பாகையிலும் சந்திரன் மகரத்தில் 16 பாகையிலும் இருப்பதாகக் கொள்ளுங்கள். இன்னொரு நிலையில் சனி கடகத்தில் 24 பாகையில் இருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது முதல் நிலையில் சனிக்கும் சந்திரனுக்கும் எதிர்பார்வை 180 பாகையிலிருந்து 2 பாகைகள்மட்டுமே தள்ளியிருக்கின்றது. இரண்டாம் நிலையில் 8 பாகை தள்ளியிருக்கின்றது. இரண்டிலும் பலன்கள் மாறுபடும். சனியும் சந்திரனும் பார்த்துக் கொண்டால் அது புனர்பு தோஷம். சந்திரன் மனோகாரகன் என்பதால் அது சனியினால் ஜாதகரின் மன நிலையைப் பாதிக்கும் நிலை. இங்கு இரண்டு நிலையிலும் ஏற்படும் பாதிப்பு மாறுபடும். முதல் நிலையை விட இரண்டாம் நிலையில் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே போகும்.
அதுமட்டுமின்றி ஒரு கிரகம் பாவ மத்தியில் இருக்கிறதா அல்லது பாவ சந்தியில் இருக்கிறதா என்பதையும் பாரக்க வேண்டும். உதாரணத்துக்கு ராகு ஒரு நிலையில் 16 பாகையிலும் இன்னொரு நிலையில் 26 பாகையிலும் இருப்பதாகக் கொள்வோம். அந்த பாவத்தின் மத்ய நிலை 19 பாகையெனக் கொண்டால், ஒருநிலையில் ராகு 3 பாகை வித்தியாசத்திலும், இன்னொரு நிலையில் 7 பாகை வித்தியாசத்திலும் இருப்பதை உணர வேண்டும். அப்பொழுது கிரக பலன் மாறுபடும். பாவ மத்திக்கு அருகில் உள்ல கிரகத்தால் ஏற்படும் பலன் வலுவானது.
இப்படி பல நிலைகளையும் ஆராஉந்துதான் நோயின் தன்மையை அடையாளம் காட்ட வேண்டும்.
தொடருவோம்




                                          
பொதுவான ஆரோக்கியம் – பகுதி 2
ஒவ்வொரு கிரகத்துக்கும் மறுபட்ட காரகத்துவங்கள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிரகமும் மானுடரின் உடம்பில் வெவ்வேறு பகுதியை ஆள்கிறது என்பதும் தெரியும். அந்த கிரகங்களின் பலம் வாய்ந்த நிலை, பலமற்ற நிலை, பாதிப்படைந்த நிலை, அவை வகிக்கும் பாவாதிபத்தியம், அவை இருக்கும் பாவம் ஆகியன அவைகள் ஆளும் உடம்பின் உறுப்பினுடைய வளர்ச்சிக்கும் அதன் செழுமை அல்லது நோய்வாய்ப்படும் தன்மைக்கும்  முக்கிய காரணிகளாக செயல் படுகின்றன.
1.        சூரியன் பலமிழந்த நிலையில் உள்ள போதும் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் அது உடலின் பொதுவான ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் கண் நோய், கண் பார்வை தெரியாமல் போவது, இருதய நோய், எலும்பு முறிவு, மாறுபட்ட இருதயத் துடிப்பு போன்ற நோய்களைத் தரும்.
2.        சந்திரன் பலமிழந்த நிலை அல்லது பாதிக்கப்பட்ட நிலையில் மன அழுத்த நோய், வலிப்பு நோய், புத்தி பேதலிக்கப்பட்ட நோய், மன அழுத்தத்தினால் ஏற்படும் துக்க நிலை, மாதவிடாய்ப் பிரச்சனைகள், ரத்தம் விஷமாவது போன்ற நோய்களைத் தரும்.
3.        செவ்வாய் பலமான நிலையில் இருந்து அதே சமயம் பாதிக்கப்பட்டிருந்தால் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாகி ரத்தக் கொதிப்பு, காக்கை வலிப்பு, விபத்துக்கள், எரிச்சல், தோல் நோய், உள்ளுறுப்புகளில் வீக்கம் போன்ற நோய்களைத் தரும். அதே செவ்வாய் பலமிழந்த நிலையில் இருந்து பாதிக்கப்பட்டால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சோகை, கட்டிகள், கொப்புளங்கள், புற்று நோய், எலும்பு மஜ்ஜையில் நோய் போன்றவற்றைத் தரும்.
4.        புதன் வலுவிழந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பின் நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய், பாரிச வாயு, சுரம், கட்டிகள், உணவு ஜெரிமானப் பகுதிகளில் நோய் போன்ற நோய்களைத் தரும்.
5.        குரு வலுவிழந்து பாதிக்கப்பட்ட நிலையில் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவற்றில் நோய்களையும் தொண்டை வறண்டிருக்கும் நிலை, காது நோய் போன்றவற்றைத் தரும்.
6.        சுக்கிரன் வலுவிழந்து பாதிக்கப்பட்ட நிலையில் பால்வினை நோய்கள் போன்ற பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், சர்க்கரை நோய், பெண்களின் பிறப்புறுப்பு நோய்கள், குழந்தை உற்பத்தி செய்யும் உறுப்புகளில் குறைகள், உடலின் செழுமை மற்றும் பளபளப்பு மறைந்து போதல், கண் பார்வையில் குறைபாடு போன்ற நோய்களைத் தரும்.
7.        சனி வலுவிழந்து பாதிக்கப்பட்டால் மூட்டுகளில் வலி, எலும்புகளில் குறைகள், உடல் ஊனம், தோல் நோய், மன அழுத்த நோய்கள், வாத ரோகம், அதிக வலி போன்ற நோய்களைத் தரும்.
8.        ராகு வலுக்குறைந்து பாதிக்கப்பட்டால் மூச்சுத் திணறல் நோய், குஷ்டம், கட்டிகள், விஷத்தினால் வரும் தொல்லைகள், உணவே விஷமாவது, அதிக வலி போன்ற தொல்லைகள் தரும்.
9.        கேது வலுவிழந்து பாதிக்கப்பட்டல் உடலில் வலி, பசி மற்றும் விஷங்களினால் ஏற்படும் நோய்கள், தானாகத் தோன்றிய நோய்கள் விலகாமல் இருப்பது, காரணம் தெரியாமலேயே நோய்கள் ஏற்படுவது போன்ற தொல்லைகள் ஏற்படும்.
நல்ல வலுவான பாதிக்கப்படாத சூரியன் ஒரு ஜாதகத்துக்கு மிகவும் அவசியம். அப்படிப்பட்ட நிலை நல்ல ஆரோக்கியம், நல்ல உடலமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைத் தரும். நல்ல வலுவான பாதிக்கப்படாத சந்திரன் ஒரு ஜாதகருக்கு நல்ல மன நிலையையும், ஆரோக்கியமான சிந்தனையையும் தரும். அதனால் வலுவான சூரியனும் வலுவான சந்திரனும் பாதிக்கப்படாமல் இருப்பது அரோக்கிய வாழ்க்கைக்கு ஒரு மிக்ச் சிறந்த வரம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
கன்னி ராசியும் மீன ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பின் அதுவும் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். ஜாதகத்தைப் பார்க்கும்போது இந்த இரண்டு ராசிகளையும் தவறாமல் பசோதித்துப் பார்க்க வேண்டும்.            

(தொடரும்)