பொதுவான ஆரோக்கியம் – பகுதி
3
ஒரு ஜோதிடர்
ஜாதகரின் நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும்போது நோயைப் பற்றி சொல்லுவதில் கவனமாக
இருத்தல் வேண்டும். கிரக நிலைகள் மட்டும் அதை உறுதி செய்யாது. ஏனெனில் அந்த கிரக
நிலைகளுக்கு நல்லதொரு பார்வை இருந்து விடலாம். அல்லது ஆறாம் பாவம் நல்ல பார்வையில்
இருக்கலாம். ஒரு பாவத்தின் மூலம் சொல்லப்படும் வியாதி சந்திரன், சூரியன் மற்றும்
நவாம்ச லக்னம் இவற்றின் பலத்தால் ஏற்படாமலே போகலாம். லக்னத்திலிருந்து நோய்
தென்படாமலும் சந்திரன் சூரியன் வீட்டிலிருந்து தென்படவும் செய்யலாம். சில சமயம்
லக்னம், சந்திரன், சூரியன் ஆகிய மூன்றுக்கும் தொடர்புடைய நிலையில் உள்ள ஒரு வீடு
பாதிப்படைந்திருந்தால் நோய் கட்டாயம்
ஏற்படும்.
கிரகங்களின் இயற்கை
குணங்கள் அவை எந்த அவஸ்தையிலிருந்தாலும் மற்றும் அவை அமர்ந்திருக்கும் வீடுகள்
ஆகிய இரண்டும் நோய் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சுபர் கொடுக்கும்
வியாதி தீயவரிடமிருந்து மாறுபட்டிருக்கும். ஒரு நட்பு கிரகம் கொடுக்கும் வியாதி
பகை கிரகத்திலிருந்து மாறுபட்டிருக்கும். நோயின் தன்மை கிரகங்களின் குணத்துக்குத்
தகுந்தாற்போல மாறுபடும்.
உதாரணத்துக்கு சனியை
எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு வெவ்வேறு லக்னங்கள் எடுத்துக் கொள்வோம். ஒன்று ரிஷப
லக்னம். மற்றொன்று சிம்ம லக்னம். ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன் – ஒன்பதுக்கும்
பத்துக்கும் அதிபர். சுபர். சிம்ம லக்னத்துக்கு ஆறுக்கும் ஏழுக்கும் அதிபர்.
அசுபர். மாரகர். இந்த இரண்டு லக்னத்துக்கும் சனியினால் அடையாளம் காட்டப்படும் நோய்
நிச்சயம் மாறுபடும் அல்லவா?
இன்னொரு முக்கிய
விஷயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் அதிபர் இயற்கை சுபர் அல்லது
அசுபராகலாம். இயற்கை சுபரால் அளிக்கப்படும் நோய் இயற்கை அசுபரால் அளிக்கப்படும்
நோயைவிட குறைவான தொல்லைகள் தரும்.
உதாரணமாக குருவை
எடுத்துக் கொள்ளுங்கள். அவர் துலா லக்னத்துக்கு மூன்று ஆறு ஆகிய வீடுகளின் அதிபர்.
அடுத்து சனியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிம்ம லக்னத்துக்கு ஆறு மற்றும்
ஏழுக்கு அதிபர். குரு இயற்கை சுபர். சனி இயற்கை அசுபர். இந்த இரண்டு நிலைகளையும்
ஒப்பிட்டால் சனி குருவை விட அதிக தொல்லைகள் தருவார் என்பது புரியும்.
இரண்டு
கிரகங்களுக்கிடையில் உள்ள உறவு நிலையும் மிகவும் முக்கியமானதாகும். உதாரணத்துக்கு
சூரியனை செவ்வாயை நேர்ப் பார்வையாக பார்ப்பதாகக் கொள்ளுங்கள். சூரியன் செவ்வாயின்
நண்பர். ஆனால் சூரியனிலிருந்து ஏழாம் வீட்டில் இருப்பதால் அவர் பகைவர். ஒரு
வகையில் நட்பானாலும் இன்னொருவகையில் பகையாவதால் அவர் நடுநிலை வகிக்கிறார்
என்றுதான் கொள்ள வேண்டும். இன்னூரு நிலையில் செவ்வாய் சூரியனுக்கு 10 ஆம் வீட்டிலிருந்து
பார்க்கிறார் என்று கொண்டால் இந்த நிலையில் அவர் இரு கோணங்களிலும் நண்பராகிரார்.
இந்த இரண்டு நிலைகளிலும் நோயின் தன்மையில் மாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பார்வை மற்றும்
சேர்க்கை இரண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு சனி கடகத்தில்
18 பாகையிலும் சந்திரன் மகரத்தில் 16 பாகையிலும் இருப்பதாகக் கொள்ளுங்கள். இன்னொரு
நிலையில் சனி கடகத்தில் 24 பாகையில் இருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது முதல்
நிலையில் சனிக்கும் சந்திரனுக்கும் எதிர்பார்வை 180 பாகையிலிருந்து 2 பாகைகள்மட்டுமே
தள்ளியிருக்கின்றது. இரண்டாம் நிலையில் 8 பாகை தள்ளியிருக்கின்றது. இரண்டிலும் பலன்கள்
மாறுபடும். சனியும் சந்திரனும் பார்த்துக் கொண்டால் அது புனர்பு தோஷம். சந்திரன்
மனோகாரகன் என்பதால் அது சனியினால் ஜாதகரின் மன நிலையைப் பாதிக்கும் நிலை. இங்கு
இரண்டு நிலையிலும் ஏற்படும் பாதிப்பு மாறுபடும். முதல் நிலையை விட இரண்டாம்
நிலையில் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே போகும்.
அதுமட்டுமின்றி ஒரு
கிரகம் பாவ மத்தியில் இருக்கிறதா அல்லது பாவ சந்தியில் இருக்கிறதா என்பதையும்
பாரக்க வேண்டும். உதாரணத்துக்கு ராகு ஒரு நிலையில் 16 பாகையிலும் இன்னொரு நிலையில்
26 பாகையிலும் இருப்பதாகக் கொள்வோம். அந்த பாவத்தின் மத்ய நிலை 19 பாகையெனக்
கொண்டால், ஒருநிலையில் ராகு 3 பாகை வித்தியாசத்திலும், இன்னொரு நிலையில் 7 பாகை
வித்தியாசத்திலும் இருப்பதை உணர வேண்டும். அப்பொழுது கிரக பலன் மாறுபடும். பாவ
மத்திக்கு அருகில் உள்ல கிரகத்தால் ஏற்படும் பலன் வலுவானது.
இப்படி பல
நிலைகளையும் ஆராஉந்துதான் நோயின் தன்மையை அடையாளம் காட்ட வேண்டும்.
தொடருவோம்
No comments:
Post a Comment