Tuesday, 2 December 2014

பந்தன யோகம்

ஒருவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டால் அது பந்தனம், சிறைவாசம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அவரால் தன்னிஷ்டத்திற்கு செயல்கள் செய்ய முடியாது. அவரை எப்பொழுதும் யாராவது ஒருவர் கண்காணித்துக் கொண்டிருப்பர். அவர் விரும்பியவர்களை விரும்புகின்ற நேரத்தில் பார்க்க முடியாது, பேச முடியாது.
அது தன்னிச்சையாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டுப்பாடு அல்ல. அவர் மீது திணிக்கப்பட்டது. சிலர் பாசம் என்கிற பெயரில் பந்தத்தில் மாட்டிக்கொண்டு தன் சுதந்திரத்தை இழக்கிறார்கள். சிலர் அடுத்தவர்களாலோ,  சமூகத்தாலோ தவறு என்று கருதப்படும் செயல்களைச் செய்து பிடிபட்டவர், அப்படிப்பட்ட செயல்கள் தவறானவை என்று சட்ட நிபுணர்களால் நிரூபிக்கப் பட்டவர், வழக்குரை மன்றங்களால் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ........ இப்படிப்பட்ட பந்தங்களில் மாட்டிக்கொண்டு சிறைவாசம் செய்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் பந்தன யோகம்.
ஜோதிட சாஸ்திரம் இந்த பந்தன யோகத்தைப் பற்ரி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமாகின்றது. முக்கியமான பாவங்கள் 6, 8 12.
·         2-12, 3-11, 4-10, 5-9 ஆகிய பாவங்களில் சம எண்ணிக்கையில் கிரகங்கள் அமர்ந்தால் பந்தன யோகம் ஏற்படும். 6-8 பாவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
·         2-12 ம் பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து அவை வேறு தீய கிரகங்களால் பார்க்கப்பட்டால் பந்தன யோகம் ஏற்படும்.
·         4 ம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அமர்ந்து 10 ல் சனி அமர்ந்தாலும் அல்லது 10 ம் பாவத்தை சனி பார்த்து 4 ம் வீட்டை சூரியன், செவ்வாய் பார்த்தாலும் பந்தன யோகம் ஏற்படும்.
·         லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சனியுடன் சேர்ந்து அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டாலும் (கேதுவுடன் சேர்ந்து அமரும் நிலை) பந்தன யோகம் ஏற்படும்.
·         9 ம் பாவத்திலும் 10 ம் பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பின் அங்கு பந்தன யோகம் ஏற்படும்.
·         லக்னம் ஆயுத, சர்ப்ப அல்லது பாச திரேக்காணத்தில் விழுந்தால் ஜாதகருக்கு பந்தன யோகம் ஏற்படும்.
·         விருச்சிக லக்னத்தாருக்கு 2, 5, 9 ம் பாவங்களில் தீயவர் அமர்ந்து சுபர் பாதிப்பு எதுவும் இல்லை என்றால் அவருக்கு பந்தன யோகம் ஏற்படும்.
செய்யும் தவறுகளும் அதற்காக கிடைக்கும் தண்டனையும் சம்பந்தப்பட்ட பாவங்களாலும் கிரகங்களாலும் குறிப்பிட்டுக் காட்டப்படும். 2 ம் பாவமும் 5 ம் பாவமும் தீயவர்களாலே ஆக்கிரமிக்கப்பட்டால் தகுதிக்கு மேலே சொத்துக்களை சேர்ப்பதானாலும் அடுத்தவரை ஏமாற்றியதாலும் தண்டனை கிடைக்கும். இந்த யோகத்தில் செவ்வாயின் தாக்கம் இருந்தால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததற்கு தண்டனை கிடைக்கும். இந்த பந்தன யோகத்தில் குரு, சுக்கிரன் அல்லது லக்னாதிபதி அல்லது 9 ம் அதிபதி சம்பந்தப்பட்டால் இது அரசியல் சம்பந்தப்பட்ட (அதிகார துஷ்பிரயோகம்) தவறாகவும் அதனால் ஏற்படும் தண்டனையாகவும் அமையும்.
செவ்வாயின் தொடர்பு ஏற்படும்போது அங்கு கொலை போன்ற தவறுகள் நடக்கும். செவ்வாயுடன், சுக்கிரன் மற்றும் 12 ம் பாவம் சம்பந்தப்பட்டால் உடலுறவு, கற்பழிப்பு போன்ற தவறுகள் நடக்கும். சனியும் செவ்வாயும் சம்பந்தப்படும்பொழுது மீண்டும் மீண்டும் தவறு செய்யும் ஒரு குற்ரவாளி நபர் சம்பந்தப்பட்டிருப்பார்.
புதனும் சந்திரனும் இந்த பந்தன யோகத்தில் சம்பந்தப்பட்டால் மீண்டும் மீண்டும் சிறை வாசம் செய்யும் நிலை ஏற்படும். ஒரே ஒரு பந்தன யோகம் மட்டும் ஏற்பட்டு சிம்மம் லக்னமானால் சிறைவாசம் தவிர்க்கப்படும். எப்படி என்றாலும் குற்றம் என்று வரும்பொழுது 5 ம் பாவமும் 9 ம் பாவமும் ஒன்றுக்கு மேர்ப்பட்ட தீயவரின் பிடியில் மாட்டிக்கொள்ளும் நிலை காணப்படும்.
கீழெ கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:-
லக்னம் ஆயுத திரேக்காணத்தில் – பந்தன யோகம்..
2 ம் அதிபதி சந்திரன் வக்கிர செவ்வாயின் பிடியில் (6, 11 க்கு அதிபர்). ராகுவின் பார்வையில். தீயவர்களான சூரியன் வக்கிர புதன் பார்வையில். குரு பார்வை ஒரு நன்மை.
5 ம் அதிபதி சுக்கிரன் உச்சத்தில். ஆனால் செவ்வாயின் பார்வையில்.
சுக்கிரன்
ராகு

லக்னம்
புதன்(வ), சூரியன்
24-02-1948 சென்னை பகல் 14:34
சனி(வ)

சந்திரன், செவ்வாய்(வ)
குரு
A 11

கேது


2 ம் பாவத்தில் சனி. 5 ம் பாவத்தில் கேது. ஆக இரண்டு மற்றும் ஐந்தாம் பாவங்கள் தீயவர்களின் பிடியில். (பந்தன யோகம்).
11 ம் பாவத்தில் ராகு. கூடா நட்பு என்பதை அது அடையாளம் காட்டுகிறது. சனியால் பார்க்கப்படுகிறது. அது 5 ம் பாவத்தைப் பார்க்கிறது.
A 11 -  தனுசு ராசியில். அங்கிருந்து 11 வீட்டின் மூலம் வருமானம். வீடு சுக்கிரனுடையது. அவர் உச்சம். திரைத்துறையிலிருந்து வருமானம். அதே சமயம் அந்த வீட்டை ராகு பாதிக்கிறார். கூடா நட்பு மூலமும் வருமானம். கூடா நட்புக்கு காரணமான ராகு 2 ம் அதிபரைப் பார்க்கிறார். அதுமட்டுமின்றி தன காரகனான குருவையும் பார்க்கிறார். தனஸ்தானம், தன காரகன் இருவரையும் அவர் பார்ப்பதால் அவர் மூலம் பண வரவு அடையாளம் காட்டப்ப்டுகிறது. இந்த ஜாதகருக்கு 9 ம் அதிபதி சனி. அவர் அதிக பாகை கடந்துள்ளார். பந்தன யோகம் 9 ம் அதிபரோடு சம்பந்தம். இது அரசியலின் காரணமாக தவறு என்பதையும் அதனால் கிடைக்கும் தண்டனையையும் காட்டுகிறது.
உபய லக்ன ஜாதகர். 7 ம் பாவம் பாதகஸ்தானம். பாதகஸ்தானதிபதி குரு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நவாம்சத்தில் செவ்வாயுடன் சேர்ந்து மேஷத்தில் அமர்ந்து அவர்களை சனி பார்க்கிறார். பாதகஸ்தானாதிபதி பாதிக்கப்பட்டு பாதகஸ்தானத்தில் அமரும்போது பாதகத்தை தங்கு தடையின்றி செய்கிறார். வக்கிர சனி ஆத்மகாரகன். குரு 7 ம் பாவத்துக்கு மட்டுமல்ல, ஜீவனஸ்தானத்துக்கும் அதிபர். ஜாதகரின் 12 ம் பாவத்தின் ஆருதபாவம் மகரத்தில், சனியின் வீட்டில். அந்த பாவத்தை சனி பார்க்கிறார். 12 ம் பாவத்தின் ஆருத பாவம் சிறைவாசம் மற்றும் ரகசிய எதிரிகளையும் குறிக்கிறது.
தற்பொழுது நடப்பது குரு தசா 08-08-2012 லிருந்து. அதற்கு முன்னர் 1994 ல் இருந்து 2012 வரை ராகு தசா. 1987 ல் இருந்து 1994 வரை செவ்வாய் தசா.
1992 ல் வக்கிர செவ்வாயின் தசாவில் புதன் புக்தி முடியும் தருவாயில் பதவியில் அமர்வு. 1996 ல் ராகு தசா ராகு புக்தியில் முதல் முறையாக சிறை வாசம். பின் வழக்குகள், வழக்குகள்,  குரு தசா குரு புக்தி சரியாக 27-09-2014 அன்று முடிந்து சனி புக்தி ஆரம்பம். சனி புக்தி 05-04-2017 வரை. இரண்டாவது சிறைவாசம். மீண்டும் சிறைவாசம் புதன் சந்திரனின் தொடர்பு இருந்தால் ஏற்படும். ஆம் இங்கு புதனும் சந்திரனும் ஒருவரை மற்றவர் நேர்பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறைவாசம் ஆரம்பிக்கும் காலை குரு தசா (பாதகாதிபதி) சனி (8 ம் அதிபதி) புக்தி, சனி அந்தரம், சனி சூக்ஷுமம், சனி நேத்ரம், சனி ஜீவன் (27-09-2014 17:48:06 வரை).
இந்த ஜாதகத்தில் ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு கிரகம் 16 வர்கச்சக்கரங்களில் எத்தனை சக்கரங்களில் வர்க மேன்மை பெறுகிறது என்பது அவரது நிலைக் காட்ட உதவும். ஒரு கிரகம் தன் உச்ச வீட்டிலோ, மூலத் திரிகோண வீட்டிலோ அல்லது தன் சொந்த வீட்டிலோ அவ்வாறு அமருமாயின் அது அது வர்க மேன்மை பெறுகிறது.
இவரது ஜாதகத்தில் குரு ஷோடச வர்கத்தில் “கல்பவ்ருக்ஷாம்சா” என்கிற நிலையை அடைந்துள்ளார். கல்பவ்ருக்ஷம் என்பது கேட்டதைத் தரும் ஒரு தேவ மரம். தச வர்கத்தில் “சிம்மாசனாம்சா”  என்கிற நிலையில் உள்ளார். அரசாட்சி செய்வார் என்பது இதன் பொருள். சப்த வர்கத்தில் “சாமராம்சா” என்கிற நிலையில் உள்ளார். இது வேலைக்காரர்கல் சாமரம் வீசி பணிவுடன் வேலை செய்வார்கள் என்பது இதன் பொருள். ஷட் வர்கத்தி “வ்யஞ்சனாம்சா” என்கிற நிலை. வியஞ்சனம் என்றால் நிறைய சொத்துக்கலை அடைவார் என்று பொருள். சனியும் சுக்கிரனும் “நாகபுருஷாம்சா” என்கிற நிலையில் உள்ளனர். இதன் பொருள் இவர் வாசமுள்ள மலராக பாம்புகள் தன்னிடம் விரும்பி சேரும் வண்ணம் விளங்குவார். இப்படி இவரது கிரகங்கள் வர்க மேன்மை பெற்றிருந்தாலும் குரு பாதகாதிபதியாகவும், சனி 8 ம் அதிபதியாகவும் சுக்கிரன் 12 ம் அதிபதியாகவும் அமைந்து விட்டார்கள். இப்படிப்பட்ட நிலையே இவருக்கு பாதகமாக அமைகிறது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது போலும்.
 ******************************************************************************************************************


Friday, 18 July 2014

New Classes

This message is for those who are waiting for an opportunity to learn one of the greatest subject - Vedic Astrology. This is a subject of logic and art and based on Astronomy. Some people may claim that they do not believe in it. Many such people have come to me telling that they believe in it and want guidance since they have faced some troubles for which they could not identify the cause and get a remedy. I do not prefer any argument on the validity of this great subject in this forum.
What I wanted to communicate is that here is an opportunity to learn this subject in style for those interested and located in and nearby Chennai. Fresh classes are conducted by Saptharishi Jyothish Center for learning and research at Karnataka Sanga School, Habibullah Road, T Nagar Chennai from 3rd August 2014 onwards.
I can assure you a best quality in teaching. The classes are only on Sundays between 0930 hrs and 1230 hrs. If you attend the classes for 52 weeks, you will be thorough in its learning and will be able to analyse a Horoscope.
For next two Sundays we conduct free seminar like consultation between 0930 and 0530 at the same venue and you can come and see yourself what you will get from us.
Please come and see yourself. You can contact me at 93817 13052 and Sri Ramachandran at 98410 91842, 89399 01346.
இலவச ஆலோசனை குறைந்த செலவில் ஜோதிடம் பயிலுவது பற்றி
கர்னாடக சங்கா ஸ்கூல், ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை.
20/07/2014 & 27/07/2014 - இரு நாட்களும் காலை 0930 மணி முதல் மாலை 0530 வரை. புதிய வகுப்புகள் 03/08/2014 ஆரம்பம். 98410 91842, 89399 01346, 9381713052

Wednesday, 12 March 2014

எண் கணிதம் மூலம் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - எண் 9

எண்களில் மிகவும் மகத்துவம் வாய்ந்த  எண்கள் என்று சில உண்டு. 1, 4, 5, 9 – இவை எல்லாம் மகத்தான எண்கள்.

மகத்துவத்தை நாம் அளக்க ஆரம்பித்தால் அதில் உச்சத்தில் இருப்பது 9 ம் எண்தான்.

இந்த எண்ணால் எந்த எண்ணைப் பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை 9 ஆகத்தான் வரும்.

இந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் அதன் கூட்டுத்தொகை எந்த எண்ணுடன் 9 ஐக் கூட்டுகிறோமோ அதுவாக வரும்.

9 ஆல் பெருக்கப்படும் எண் அழிந்துவிடும்.

9 உடன் கூட்டப்படும் எண் மீண்டும் உருவாக்கப்படும்.

ஆக உருவாக்கவும் அழிக்கவும் சக்தி கொண்ட எண்தான் 9. இதிலிருந்து இதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

உருவாக்கும் திறன் மற்றும் அழிக்கும் திறன் பெற்ற பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் ராணுவம் மற்றும் காவல் துறை, நிர்வாகம் போன்ற துறைகளில் பணி புரிபவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனாவாதிகள், தத்துவ விஞ்ஞானிகள் ஆகியோர் இந்த எண்ணால் ஆளப்படுபவர்கள்.

செவ்வாயால் ஆளப்படும் இந்த எண் அழிக்க முடியாதது. அதுபோன்றே இந்த எண்ணில் பிறந்தவர்களும். அவர்களாகவே தன்னை அழித்துக் கொண்டால் தான் உண்டு.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் போராடப் பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருப்பதால் மிகவும் சுவையான (SPICY) வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப் போராட்டத்திலும், சுமாரான அறிவு பெற்றவர்கள் சண்டையிலும் தன் வாழ்நாளைக் கழிப்பர். நாட்டுக்காக போராடுபவர்கள் இவர்கள். குறைந்தது தன் இனத்தவருக்காகவாவது போராடுபவர்கள்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், தனி மனித சுதந்திரத்துக்காகவும் போராடுவார்கள்.
இவர்களுக்கு தன்னிஷ்டப்படிதான் கரியங்கள் நிறைவேற வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் உடனே அதை உதறிவிட்டு வேறு காரியம் நோக்கிப் போய்விடுவார்கள். உணர்ச்சியால் உந்தப்படுபவர்கள்.

இவர்களில் அறிவுடையோர் எப்போதும் தன் பலம் என்ன தன் எதிரியின் பலம் என்ன என்பது பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.

மிகச் சிறந்த ராஜ தந்திரிகள். எதை யார் மூலம் எந்த முறையில் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை துல்லியமாக அறிந்தவர்கள். சாணக்கியர்கள்.

ஓடுமீன் ஓட உரு மீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்குஎன்கிற பழமொழிக்கேற்ப சரியான நேரம் வரும் வரை காத்திருந்து சரியாக வேலையை செய்து முடிப்பவர்கள். ஆனால் சுயநல வாதி அல்ல. பொதுநலம் பேணுபவர்கள்.

இவர்களில் அறிவாளிகள் அடுத்தவரை பேசவோ அல்லது முதலில் ஈடுபடவோ வைத்து பின் அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களை எடுத்து சாதிப்பார்கள்.

இவர்கள் சிலரிடம் அபூர்வ சக்தி தென்படும். புகழை விரும்பமாட்டார்கள். எவ்வளவு கஷ்டம் வரினும் அதைத் தாங்கும் சக்தி உள்ளவர்கள்.

பெண்களையும் அழகையும் நளினத்தையும் மிகவும் ரசிக்கும் குணமுடன் கூடிய மென்மையாளர்கள். இதனால் சில சமயம் உணர்ச்சி மேலீட்டால் தவறுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உடனே திருந்த வேண்டும் என்பதிலும் தீவிரம் இருக்கும். இரக்க சுபாவம் உள்ளவர்கள். அதனால் சிலர் ஏமாறுவதும் உண்டு.

பெரியவர்களிடம் மரியாதையுடனும், நல்லவர்களை அரவணைத்துக் கொண்டும் செல்பவர்கள். சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மனதை யுத்தம் செய்த கடவுளின் அம்சங்கள் மிகவும் கவரும். ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், முருகன் (சுப்ரமணியர்), காளி, ஆஞ்சனேயர், ஐயப்பன் முதலிய மூர்த்தங்களை இஷ்ட தெய்வமாகக் கொள்வர்.

நடுத்தர உயரம், திட சரீரம், அகன்ற புஜங்கள், சதைப் பற்றுடன் கூடிய உடலமைப்பு உள்ளவர்கள். உயரமாக உள்ளவரிடம் நுண்ணியமான மனோசக்தி இருக்கும். நிமிர்ந்த நடை இருக்கும்.

உஷ்ணமான சரீரம். இவரது வயிற்றை இந்த உஷ்ணம் பாதிக்கும். ஏனெனில் இவர்களது மூலாதாரம் எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும்.

9 ம் எண்காரர்கள் யாரவது உடலில் காயம் படாமலோ அல்லது தழும்பு இல்லாமலோ அல்லது அறுவை சிகித்சைக்கு உட்படாமலோ இருப்பின் அது உலக அதிசயம் தான். சிலருக்கு விபத்துகள், அறுவை சிகித்சை பலதடவை நடக்கும்.

இவர்கள் உணவில் அடிக்கடி வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கீரைகளில் புளிச்ச கீரை மிகவும் நல்லது. மிளகாயைக் குறைத்து மிளகு சேர்ப்பது நல்லது. இஞ்சி மிகவும் நல்லது. வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு நல்லது. எல்லாவிதமான பழங்களையும் சேர்க்கலாம்.

எண்ணை ஸ்னானம் தவறாமல் செய்வது உடல் சூட்டைக் குறைக்கும். மிகவும் நல்லது.
5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30 ஆகிய தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமானவை. 1, 10 தேதிகளும் 
சாதகமானவையே.. 27 ம் தேதிகளும் அதிர்ஷ்டமானவையே.

2, 11, 20, 29 தேதிகள் துரதிர்ஷ்டமானவை. 19 ம் தேதிகளும் மனதைக் குழப்பும் தேதிகள்.

9 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 5, 6, 9 எண்காரர்களின் உதவி எப்பொழுதும் கிடைக்கும். 8 ம் எண்காரர்களால் நன்மையும், 2 ம் எண்காரர்களால் தீமையும் உண்டு.

9 ம் எண்காரர்கள் 3, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது நல்லது. 5 ம் தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது இரண்டாம் பக்ஷமே. 1, 2, 8 ம் தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது நல்லதல்ல.

இவர்கள் 3, 6, 9 என வரும் கூட்டு தேதிகளில் திருமணம் புரிவது நன்மை பயக்கும்.

சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம் ஆகியவை உகந்த நிறங்கள். வெளிர் பச்சை மற்றும் வெண்மை நிறைந்த வர்ணங்களை தவிர்ப்பது நல்லது.

உடைகளின் கரையிலாவது சிவப்பு கலந்திருப்பது நல்லது.

பவழம் இவர்களுக்கு மிகவும் உகந்தது. அது ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து சரீர குற்றங்களைக் குறைக்கும்.

குடலில் பிரச்சனை இருப்பின் (BLOOD STONE) எனப்படும் ரத்தம் போன்ற சிவப்புப் புள்ளிகள் கொண்ட பச்சை நிறக்கற்களை பயன் படுத்தலாம்.

9 ம் எண்னில் பிறந்த சில சிறந்த மனிதர்கள்:

GALVANI WHO STARTED RESEARCH ON ELECTRICITY

POET JOHN MILTON

RAMAKRISHNA PARAMAHAMSAR

DR. SAMUEL JOHNSON

GREAT PHILOSOPHER BERTRAND RUSSEL



நண்பர்களே, இதுவரை 1 முதல் 9 வரை உள்ல பொதுவான விஷயங்களை எழுதி உள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்

இனி மற்ற ஜோதிட விஷயங்களையும் எழுதுவேன். தொடர்ந்து படித்து வாருங்கள். முடிந்தால் நீங்களும் என் BLOG பதிவுக்கு FOLLOWER ஆகலாமே.

உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைசக்தியின் அருள் பரிபூரணமாக அமையட்டும்.