எண்களில் மிகவும் மகத்துவம் வாய்ந்த எண்கள் என்று சில உண்டு. 1, 4,
5, 9 – இவை எல்லாம் மகத்தான எண்கள்.
மகத்துவத்தை நாம் அளக்க ஆரம்பித்தால் அதில் உச்சத்தில் இருப்பது 9 ம் எண்தான்.
இந்த எண்ணால் எந்த எண்ணைப் பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை 9 ஆகத்தான் வரும்.
இந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் அதன் கூட்டுத்தொகை எந்த எண்ணுடன் 9 ஐக் கூட்டுகிறோமோ அதுவாக வரும்.
9 ஆல் பெருக்கப்படும் எண் அழிந்துவிடும்.
9 உடன் கூட்டப்படும் எண் மீண்டும் உருவாக்கப்படும்.
ஆக உருவாக்கவும் அழிக்கவும் சக்தி கொண்ட எண்தான் 9. இதிலிருந்து இதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உருவாக்கும் திறன் மற்றும் அழிக்கும் திறன் பெற்ற பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் ராணுவம் மற்றும் காவல் துறை, நிர்வாகம் போன்ற துறைகளில் பணி புரிபவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனாவாதிகள், தத்துவ விஞ்ஞானிகள் ஆகியோர் இந்த எண்ணால் ஆளப்படுபவர்கள்.
செவ்வாயால் ஆளப்படும் இந்த எண் அழிக்க முடியாதது. அதுபோன்றே இந்த எண்ணில் பிறந்தவர்களும். அவர்களாகவே தன்னை அழித்துக் கொண்டால் தான் உண்டு.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் போராடப் பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருப்பதால் மிகவும் சுவையான (SPICY) வாழ்க்கையை வாழ்பவர்கள்.
இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப் போராட்டத்திலும், சுமாரான அறிவு பெற்றவர்கள் சண்டையிலும் தன் வாழ்நாளைக் கழிப்பர். நாட்டுக்காக போராடுபவர்கள் இவர்கள். குறைந்தது தன் இனத்தவருக்காகவாவது போராடுபவர்கள்.
தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், தனி மனித சுதந்திரத்துக்காகவும் போராடுவார்கள்.
இவர்களுக்கு தன்னிஷ்டப்படிதான் கரியங்கள் நிறைவேற வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் உடனே அதை உதறிவிட்டு வேறு காரியம் நோக்கிப் போய்விடுவார்கள். உணர்ச்சியால் உந்தப்படுபவர்கள்.
இவர்களில் அறிவுடையோர் எப்போதும் தன் பலம் என்ன தன் எதிரியின் பலம் என்ன என்பது பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.
மிகச் சிறந்த ராஜ தந்திரிகள். எதை யார் மூலம் எந்த முறையில் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை துல்லியமாக அறிந்தவர்கள். சாணக்கியர்கள்.
“ஓடுமீன் ஓட உரு மீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு” என்கிற பழமொழிக்கேற்ப சரியான நேரம் வரும் வரை காத்திருந்து சரியாக வேலையை செய்து முடிப்பவர்கள். ஆனால் சுயநல வாதி அல்ல. பொதுநலம் பேணுபவர்கள்.
இவர்களில் அறிவாளிகள் அடுத்தவரை பேசவோ அல்லது முதலில் ஈடுபடவோ வைத்து பின் அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களை எடுத்து சாதிப்பார்கள்.
இவர்கள் சிலரிடம் அபூர்வ சக்தி தென்படும். புகழை விரும்பமாட்டார்கள். எவ்வளவு கஷ்டம் வரினும் அதைத் தாங்கும் சக்தி உள்ளவர்கள்.
பெண்களையும் அழகையும் நளினத்தையும் மிகவும் ரசிக்கும் குணமுடன் கூடிய மென்மையாளர்கள். இதனால் சில சமயம் உணர்ச்சி மேலீட்டால் தவறுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உடனே திருந்த வேண்டும் என்பதிலும் தீவிரம் இருக்கும். இரக்க சுபாவம் உள்ளவர்கள். அதனால் சிலர் ஏமாறுவதும் உண்டு.
பெரியவர்களிடம் மரியாதையுடனும், நல்லவர்களை அரவணைத்துக் கொண்டும் செல்பவர்கள். சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுபவர்கள்.
இவர்கள் மனதை யுத்தம் செய்த கடவுளின் அம்சங்கள் மிகவும் கவரும். ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், முருகன் (சுப்ரமணியர்), காளி, ஆஞ்சனேயர், ஐயப்பன் முதலிய மூர்த்தங்களை இஷ்ட தெய்வமாகக் கொள்வர்.
நடுத்தர உயரம், திட சரீரம், அகன்ற புஜங்கள், சதைப் பற்றுடன் கூடிய உடலமைப்பு உள்ளவர்கள். உயரமாக உள்ளவரிடம் நுண்ணியமான மனோசக்தி இருக்கும். நிமிர்ந்த நடை இருக்கும்.
உஷ்ணமான சரீரம். இவரது வயிற்றை இந்த உஷ்ணம் பாதிக்கும். ஏனெனில் இவர்களது மூலாதாரம் எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும்.
9 ம் எண்காரர்கள் யாரவது உடலில் காயம் படாமலோ அல்லது தழும்பு இல்லாமலோ அல்லது அறுவை சிகித்சைக்கு உட்படாமலோ இருப்பின் அது உலக அதிசயம் தான். சிலருக்கு விபத்துகள், அறுவை சிகித்சை பலதடவை நடக்கும்.
இவர்கள் உணவில் அடிக்கடி வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கீரைகளில் புளிச்ச கீரை மிகவும் நல்லது. மிளகாயைக் குறைத்து மிளகு சேர்ப்பது நல்லது. இஞ்சி மிகவும் நல்லது. வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு நல்லது. எல்லாவிதமான பழங்களையும் சேர்க்கலாம்.
எண்ணை ஸ்னானம் தவறாமல் செய்வது உடல் சூட்டைக் குறைக்கும். மிகவும் நல்லது.
5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30 ஆகிய தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமானவை. 1, 10 தேதிகளும்
சாதகமானவையே.. 27 ம் தேதிகளும் அதிர்ஷ்டமானவையே.
2, 11, 20, 29 தேதிகள் துரதிர்ஷ்டமானவை. 19 ம் தேதிகளும் மனதைக் குழப்பும் தேதிகள்.
9 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 5, 6, 9 எண்காரர்களின் உதவி எப்பொழுதும் கிடைக்கும். 8 ம் எண்காரர்களால் நன்மையும், 2 ம் எண்காரர்களால் தீமையும் உண்டு.
9 ம் எண்காரர்கள் 3, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது நல்லது. 5 ம் தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது இரண்டாம் பக்ஷமே. 1, 2, 8 ம் தேதிகளில் பிறந்தவர்களை மணப்பது நல்லதல்ல.
இவர்கள் 3, 6, 9 என வரும் கூட்டு தேதிகளில் திருமணம் புரிவது நன்மை பயக்கும்.
சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம் ஆகியவை உகந்த நிறங்கள். வெளிர் பச்சை மற்றும் வெண்மை நிறைந்த வர்ணங்களை தவிர்ப்பது நல்லது.
உடைகளின் கரையிலாவது சிவப்பு கலந்திருப்பது நல்லது.
பவழம் இவர்களுக்கு மிகவும் உகந்தது. அது ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து சரீர குற்றங்களைக் குறைக்கும்.
குடலில் பிரச்சனை இருப்பின் (BLOOD STONE) எனப்படும் ரத்தம் போன்ற சிவப்புப் புள்ளிகள் கொண்ட பச்சை நிறக்கற்களை பயன் படுத்தலாம்.
9 ம் எண்னில் பிறந்த சில சிறந்த மனிதர்கள்:
GALVANI
WHO STARTED RESEARCH ON ELECTRICITY
POET
JOHN MILTON
RAMAKRISHNA
PARAMAHAMSAR
DR.
SAMUEL JOHNSON
GREAT PHILOSOPHER BERTRAND RUSSEL
நண்பர்களே, இதுவரை 1 முதல் 9 வரை உள்ல பொதுவான விஷயங்களை எழுதி உள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்.
இனி மற்ற ஜோதிட விஷயங்களையும் எழுதுவேன். தொடர்ந்து படித்து வாருங்கள். முடிந்தால் நீங்களும் என் BLOG பதிவுக்கு FOLLOWER ஆகலாமே.
உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைசக்தியின் அருள் பரிபூரணமாக அமையட்டும்.
No comments:
Post a Comment