Thursday, 16 July 2015

பொதுவான ஆரோக்கியம் - ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவான ஆரோக்கியம்
1.        


1.        ஒரு ஜாதகருக்கு லக்னம், சூரியன், சந்திரன் மற்றும் 6 ஆம் பாவம் ஆகியவை நல்ல பலமான நிலையில் அமைந்து, சுபரின் வீடாகவோ, சுபரின் சேர்க்கையோ (2 பாகைக்குள்) அல்லது சுபரின் பார்வையோ பெற்றிருந்தால் அவரின் உடல் நலம் நன்றாகவே இருக்கும்.
2.        லக்னத்துக்கோ, சூரியனுக்கோ அல்லது சந்திரனுக்கோ தீயவரின் தொடர்பு அதிகமாக அதிகமாக அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதிலும் பிரச்சனை அதிகமிருக்கும்.
3.        லக்னாதிபதி தீயவராக இருந்து லக்னம் அல்லது லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அல்லது சந்திரனுடன் 2 பாகைக்குள் அமர்ந்து அல்லது சந்திர நவாம்சத்தில் அமர்ந்து இருந்தால் ஜாதகருக்கு நோய் நிச்சயம் தோன்றும்.
4.        லக்னாதிபதி தீயவராக இருந்து பலமிழந்து நீச்சம், அஸ்தமனம், ராகு கேதுவின் கோடு, கிரக யுத்தத்தில் தோல்வி அல்லது 6, 8, 12 ஆம் அதிபர்களால் பார்க்கப்பட்டிருந்தால் அவர் உடம்பு நொயின் மடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
5.        லக்னாதிபதி பலமிழந்து கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் அமர்ந்து அதே சமயம் லக்னமானது 6, 8, 12 ஆம் அதிபர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தீயவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பலவீனமான எதிர்ப்பு சக்தி குறைந்த உடம்பும் நோயை எளிதில் பற்றிக்கொள்ளும் உடம்புமாக இருக்கும்.
6.        லக்னாதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் 6 ஆம் அதிபருடன் சேர்ந்திருக்குமாயின் ஜாதகருக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் நோயை  எளிதில் பற்றிக்கொள்ளும் உடம்புமாக இருக்கும்.
7.        லக்னாதிபதி அமர்ந்த வீட்டின் அதிபர் 6, 8, 12 ஆம் வீடுகளில் இருந்தாலும் ஜாதகரை நோய் எளிதில் பற்றிக்கொள்ளும்.
8.        லக்னாதிபதி அமர்ந்த வீட்டின் அதிபர் பலமிழந்து நீச்சம், அஸ்தமனம், ராகு கேதுவின் கோடு, கிரக யுத்த்த்தில் தோல்வி, பகை வீடு அல்லது 3, 6, 11 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் அவர் உடம்பு நொயின் மடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  இதே நிலை சந்திரனுக்கும் பொருந்தும்.
9.        சனியும் செவ்வாயும் 6 ஆம் வீட்டில் அமர்ந்து சூரியன் ராகுவால் பார்க்கப்பட்டு அவர்களுடன் லக்னாதிபதியும் சேர்ந்து கொண்டால் ஜாதகருக்கு வருகின்ற நோய் சீக்கிரம் குணமாகாமல் தொடர்ந்து நீண்ட நாட்க்கள் நிலைத்திருக்கும்.
10.     இதே போன்று சனியும் ராகுவும் 6 ஆம் வீட்டில் இருப்பின் அவருக்கு வருகின்ற நோய் அவரை விட்டு சீக்கிரம் விலகாது.
11.     சனியும் செவ்வாயும் இரண்டாம் வீட்டில் சேர்ந்து அமர்ந்து ஜாதகருக்கு நோயைத் தரும் கிரகத்துடன் அல்லது பாவத்துடன் தொடர்பு கொண்டிருந்தால் பலவிதமான நொய்களை ஜாதகருக்குத் தரும்.
12.     அதுபோல 8 ஆம் வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தீயவர்கள் அமர்ந்தாலோ அல்லது அந்த வீட்டைப் பார்த்தாலோ அதனாலும் ஜாதகர் பலவிதமான நோய்களுக்கு உட்படுவார்.
13.     செவ்வாயும் சுக்கிரனும் 9 ஆம் வீட்டில் சேர்ந்து அமர்ந்தாலோ அல்லது சூரியனும் சனியும் 9 ஆம் வீட்டில் சேர்ந்து அமர்ந்தாலோ ஜாதகர் நொய்வாய்ப்படுவது உறுதி. இதே நிலை குரு சனியுடன் சேர்ந்து ஒன்பதில் அமர்ந்தாலும் ஏற்படும்.
14.   கடுமையாக பாதிக்கப்பட்ட சுக்கிரன் 12 லும், கேது லக்னத்திலும், சனி கேதுவுடன் கூடி லக்னத்திலோ அல்லது ராகுவுடன் சேர்ந்து 7 ஆம் வீட்டிலோ அமர்வதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்வாய்ப்படும் நிலைக்கு ஜாதகரை தள்ளும்.

ஆடி மாத சிந்தனைகள்

ஆடி மாத சிந்தனைகள்

மறு பிறவி என்று ஒன்று உண்டா? இது ஏற்றுக்கொள்ளும் கருத்து தானா?

இப்படி ஒரு கேள்வி நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவதில் வியப்பில்லை. ஒன்றை நாம் சரியாகப்

புரிந்து கொள்ள வேண்டும். இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இறப்பு என்ற ஒன்று சர்வ நிச்சயம். 


இறந்த பின்னர் இந்த ஜீவன் எங்கு செல்கிறது? உடல் மட்டுமே எரித்தோ அல்லது புதைத்தோ 

அழிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஜீவன்? அது எங்கோ பயணம் செய்துதானே ஆக வேண்டும். இதையே அந்த 

ஜீவன் இன்னொரு பிறவி எடுக்கிறது என்கிறார்கள். அதையே மறு பிறவி என்றும் மீண்டும் மீண்டும் 

பிறப்பதை ஜன்மாந்தரம் என்றும் சொல்கிறார்கள். இதை நமது சாஸ்த்திரங்கள் சொன்னாலும் ஸ்ரீமத் பகவத் 

கீதையில் பகவான் சொல்லுவதும் இதை உறுதி செய்யும் ஒரு உபகரணமாக அமைகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசங்கள் செய்யும்போது ஞான யோகம், கர்மயோகம் 


பற்றியெல்லாம் விளக்குகிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம், “பரமாத்மாவே லகுவான ஞான மர்க்கம் 

இருக்கும்போது கர்ம மார்க்கம் பற்றி சொல்லி என்னை ஏன் குழப்புகிறீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறான். 

அதற்கு பரமாத்மா சொல்லும் பதில் ஒன்று நம் கேள்விக்கும் விடை சொல்லுகிறது. மூன்றாவது 

அத்தியாயத்தில், ஐந்தாவது ஸ்லோகத்தில் பரமாத்மா சொல்கிறார்,

ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது த்யஷ்ட²த்யகர்ம க்ருத் Ι
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ருக்ருதிஜை கு³ணை: Ι Ι

“சந்தேகமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூடச் செயல் புரியாமல் இருப்பதில்லை. 

ஏனெனில் மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ருக்ருதியிலிருந்து உண்டாண குணங்களால் தன்வசமிழந்து வேறு 

வழியின்றி எப்பொழுதும் செயல் செய்யும்படித் தூண்டப்படுகிறது”.

ஆக மனிதர்கள் இயல்பாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மனிதர்களால் உடலாலும், 

மனதாலும், வாக்காலும் செய்யப்படும் அனைத்து செயல்களும் தனக்கோ அல்லது மற்றவருக்கோ நன்மை 

செய்யுமானால் அதை புண்ணிய கர்மா என்றும், தீமை செய்யுமானால் பாப கர்மா என்றும் இரண்டு 

வகையாகப் பிரிக்கப்படுகிறது. இந்த புண்ணிய பாவ செயல்களின் பலன்கள் உடனே ஏற்பட்டுவிடாது. எப்படி 

விவசாயத்தில் விளைப்பது ஒரு காலம் என்றும் அறுவடை செய்வது மற்றொரு காலம் என்றும் 

சொல்லப்படுகிறதோ அதுபோல புண்ணிய பாவ செயல்களின் பலன்களும் வெவ்வேறு காலத்தில்தான் 

வெளிப்படும். உணவு தயாரிக்கும் காலமும் அதை உண்ணும் காலமும் வெவ்வேறு அல்லவா?

சிலர் நம் கண்ணெதிரே பாப காரியங்கள் செய்தும் சுகமாக இருப்பதைக் காண்கிறோம். அது எதனால். 

இப்பொழுது செய்யும் பாப காரியங்களின் பலனை அவர்கள் அனுபவிக்கும் காலம் பின்னர்தான் வரும். முன் 

ஜன்மங்களில் செய்த புண்ணியங்கள் அவரை சுகமாக வைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள 

வேண்டும். மறு பிறவி என்ற ஒன்று இருந்தால் அல்லவா இப்படி நேரிடும்.

இதை வைத்துத் தான் சாஸ்த்திரங்கள் மறு பிறவி இருக்கின்றது என்று நமக்கு சொல்லுகின்றன.


“கல் நீ; உளி நீ: சிற்பியும் நீ” என்ற ஒரு பட்டவர்த்தனமான உண்மை வாக்கியத்தை நமது பள்ளியில் படித்தேன். 

நாம் நாளை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்திடல் வேண்டும்.


அன்புடன்


நாராயணன்

புஷ்கரம்

புஷ்கரம்
நவக்ரகங்களில் குரு மட்டும் நான்முகனான பிரும்மவை நோக்கி தவம் செய்ததார். அதன் பயனாய் பிரும்மாவும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தாங்கள் வைத்திருக்கும் கமண்டலுவில் (சொம்பு) இருக்கும் புஷ்கரம் என்னும் தீர்த்தத்துடன் தான் எப்பொழுதும் வசிக்க வேண்டும் என்று குரு வரம் கேட்க பிரும்மாவும் சம்மதித்தார். ஆனால் புஷ்கரமோ பிரும்மாவை விட்டு விலகிச் செல்ல தயக்கம் காட்டியது. இறுதியில் இருவரையும் சமாதானம் செய்த பிரும்மா, ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ராசியில் குரு கிரகம் பிரவேசிக்கும் சமயத்தில் முதல் பன்னிரெண்டு நாட்கள் புஷ்கரமானது ஒவ்வொரு நதியிலும் கலந்து வாசம் செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது குருவும் அதில் வசிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
அது முதல் பிரும்மாவின் கமண்டலு தீர்த்தமான புஷ்கரம் என்னும் தீர்த்தமும் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்து ஒவ்வொரு வருஷமும் சுமார் பன்னிரெண்டு நாட்கள் ஒவ்வொரு நதியிலும் வாசம் செய்கிறது. ஆகவே அந்த பன்னிரெண்டு நாட்களிலும் அந்தந்த நதியில் ஸ்னானம் செய்வதற்காக குரு கிரகம் மட்டுமல்லாமல் தேவலோகத்து அனைத்து தேவர்களும் மும்மூர்த்திகளும் கூட அங்கு வந்து சேருகிறார்கள், அனைத்து நதிகளும் அங்கு சான்னித்யமாக இருக்கின்றன என்கிறது புராணம்.
புஷ்கரம் என்பது நதிகளை வணங்கும் ஒரு இந்திய திருவிழா ஆகும். இதை புஷ்கராலு, புஷ்கர் என்றும் அழைப்பதுண்டு.12 புண்ணிய நதிக்கரைகளில் உள்ள க்ஷேத்திரங்களில் இது கொண்டாடப்படுகின்றது. இதில் பித்ரு வந்தனம், ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஒவ்வொரு நதியும் ஒரு ராசியுடன் தொடர்பு கொள்கிறது. முறையாக அவை
கங்கை
மேஷம்
காவேரி
துலாம்
 நர்மதா
ரிஷபம்
பீமா/தாமிரபரணி
விருச்சிகம்
ஸரஸ்வதி
மிதுனம்
தப்தி
தனுர்
யமுனா
கடகம்
துங்கபத்ரா
மகரம்
கோதாவரி
சிம்மம்
சிந்து
கும்பம்
க்ருஷ்ணா
கன்னி
ப்ரணிதா
மீனம்
இந்த விழா குரு ஒவ்வொரு ராசியையும் கோட்சாரத்தில் கடக்கும் பொழுது அந்த ராசியின் நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றது. இந்த விழா குருப்பெயற்சியில் இருந்து 12 நாட்கள் நடக்கும்.
குருவானவர் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு வருடம் ஆகின்றது. இவ்வாறு 12 முறை அதே ராசியை அவர் கடக்கும் பொழுது 144 ஆண்டுகள் (12 x 12 = 144) ஆகின்றன..புஷ்கர சுழற்சி ஆஷாட மாதத்தின் (June-July) சதுர்தசி திதியில் தொடங்குகின்றது. 144 வருதங்களுக்கு ஒரு முறை வரும் பொழுது இதை  இதை மஹா புஷ்கரம் என்பர். இந்த வருடம் 2015 மஹா புஷ்கரமாக கோதாவரிக்கரையில் கொண்டாடப்படும். (இந்த வருடம் நாசிக்கில்) அடுத்த மஹா புஷ்கரம் 2159ல் நடை பெறும். இந்த புஷ்கரத்தின் முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் கடைசி 12 நாட்கள் அந்த்ய புஷ்கரம் என்றும் கூறப்படும்.
இந்த நாட்களில் தேவர்களும், ரிஷிகளும் இந்த நதிகளில் நீராடுவதாக ஒரு நம்பிக்கை. இந்த நாளில் நீராடினால் குரு தவறான இடங்களில் இருப்பதால் வரும் கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

நாமும் இந்த நதிகளில் மானசீகமாகவாவது நீராடி குரு பகவானை வணங்கி அவர் சுப பார்வையை வேண்டுவோம்! இந்த வருடம் இந்த நிகழ்ச்சி ஜுல்ய் 14 முதல் 25 வரை நடக்கும்.
அன்புள்ள சென்னை வாசகர்களே,

எளிய முறையில் மிகவும் குறைந்த செலவில் நமது மகரிஷிகளால் நமக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட வேத ஜோதிடம் பயில வேண்டுமா?

உடனே அணுகுங்கள் எங்களை.

தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முகவும் எளிய அணுகு முறையில் ஜோதிடம் சொல்லித் தருகின்றோம்.

அடிப்படை - 6 மாதம்.

உயர் நிலை - 6 மாதம்.

சென்னை தி. நகரில் ஹபிபுல்லா சாலையில் கர்னாடக சங்கா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09 30 மணி முதல் பகல் 12 30 மணி வரை பயிலலாம்.

வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்.

விபரங்களுக்கு கைப் பேசி எண்கள்:

93 81 71 30 52 - நாராயணன்
90 94 48 12 73 - சேகரன்
98 40 13 64 03 - ஷ்யாமளா

நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்.

அன்பன் நாராயணன்.