புஷ்கரம்
நவக்ரகங்களில் குரு மட்டும் நான்முகனான பிரும்மவை நோக்கி
தவம் செய்ததார். அதன் பயனாய் பிரும்மாவும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க,
தாங்கள் வைத்திருக்கும் கமண்டலுவில் (சொம்பு) இருக்கும் புஷ்கரம் என்னும்
தீர்த்தத்துடன் தான் எப்பொழுதும் வசிக்க வேண்டும் என்று குரு வரம் கேட்க
பிரும்மாவும் சம்மதித்தார். ஆனால் புஷ்கரமோ பிரும்மாவை விட்டு விலகிச் செல்ல
தயக்கம் காட்டியது. இறுதியில் இருவரையும் சமாதானம் செய்த பிரும்மா, ஒவ்வொரு
வருஷமும் ஒவ்வொரு ராசியில் குரு கிரகம் பிரவேசிக்கும் சமயத்தில் முதல் பன்னிரெண்டு
நாட்கள் புஷ்கரமானது ஒவ்வொரு நதியிலும் கலந்து வாசம் செய்ய வேண்டும் என்றும்
அப்பொழுது குருவும் அதில் வசிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
அது முதல் பிரும்மாவின் கமண்டலு தீர்த்தமான புஷ்கரம்
என்னும் தீர்த்தமும் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்து ஒவ்வொரு வருஷமும் சுமார் பன்னிரெண்டு
நாட்கள் ஒவ்வொரு நதியிலும் வாசம் செய்கிறது. ஆகவே அந்த பன்னிரெண்டு நாட்களிலும்
அந்தந்த நதியில் ஸ்னானம் செய்வதற்காக குரு கிரகம் மட்டுமல்லாமல் தேவலோகத்து
அனைத்து தேவர்களும் மும்மூர்த்திகளும் கூட அங்கு வந்து சேருகிறார்கள், அனைத்து
நதிகளும் அங்கு சான்னித்யமாக இருக்கின்றன என்கிறது புராணம்.
புஷ்கரம் என்பது நதிகளை வணங்கும் ஒரு இந்திய திருவிழா ஆகும். இதை புஷ்கராலு, புஷ்கர் என்றும் அழைப்பதுண்டு.12
புண்ணிய நதிக்கரைகளில் உள்ள க்ஷேத்திரங்களில் இது கொண்டாடப்படுகின்றது. இதில்
பித்ரு வந்தனம், ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என பல
நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஒவ்வொரு நதியும் ஒரு ராசியுடன் தொடர்பு
கொள்கிறது. முறையாக அவை
கங்கை
|
மேஷம்
|
காவேரி
|
துலாம்
|
நர்மதா
|
ரிஷபம்
|
பீமா/தாமிரபரணி
|
விருச்சிகம்
|
ஸரஸ்வதி
|
மிதுனம்
|
தப்தி
|
தனுர்
|
யமுனா
|
கடகம்
|
துங்கபத்ரா
|
மகரம்
|
கோதாவரி
|
சிம்மம்
|
சிந்து
|
கும்பம்
|
க்ருஷ்ணா
|
கன்னி
|
ப்ரணிதா
|
மீனம்
|
இந்த விழா குரு ஒவ்வொரு ராசியையும் கோட்சாரத்தில்
கடக்கும் பொழுது அந்த ராசியின் நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றது. இந்த விழா குருப்பெயற்சியில்
இருந்து 12 நாட்கள் நடக்கும்.
குருவானவர் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு
வருடம் ஆகின்றது. இவ்வாறு 12 முறை அதே ராசியை அவர் கடக்கும் பொழுது 144 ஆண்டுகள்
(12 x 12 = 144) ஆகின்றன..புஷ்கர சுழற்சி ஆஷாட மாதத்தின் (June-July) சதுர்தசி திதியில்
தொடங்குகின்றது. 144 வருதங்களுக்கு ஒரு முறை வரும் பொழுது இதை இதை
மஹா புஷ்கரம் என்பர். இந்த வருடம் 2015 மஹா புஷ்கரமாக கோதாவரிக்கரையில்
கொண்டாடப்படும். (இந்த வருடம் நாசிக்கில்) அடுத்த மஹா புஷ்கரம் 2159ல் நடை
பெறும். இந்த புஷ்கரத்தின் முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் கடைசி 12
நாட்கள் அந்த்ய புஷ்கரம் என்றும் கூறப்படும்.
இந்த நாட்களில் தேவர்களும், ரிஷிகளும் இந்த நதிகளில்
நீராடுவதாக ஒரு நம்பிக்கை. இந்த நாளில் நீராடினால் குரு தவறான இடங்களில் இருப்பதால் வரும்
கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
No comments:
Post a Comment