Tuesday, 18 February 2014

ஸுபர் - அசுபர்

ஸுபர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இயற்கை நல்லவர்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் கேந்திரத்துக்கு ஆதிபத்தியம் பெறும் போது சுப பலன் தர வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுபர்கள் மற்றும் கேந்திர அதிபர்கள் என்கிற தகுதி மட்டும் அவர்களை நல்ல பலன் தர அனுமதிக்காது.

அதே சமயம் இயற்கை தீயவர்களான செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் ஆகியவர்கள் ஒரு கேந்திரத்துக்கு அதிபதியாகும் போது அவர்களும் தீய பலங்களைத் தர தகுதி இல்லாதவராகக் கருதப்படுகிறார்கள்.

இயற்கை நல்லவரோ அ ல்லது இயற்கை தீயவரொ யாராக இருப்பினும் அவர்கள் ஒரு கோணத்துக்கு அதிபரானால் சுப பலன்களைத் தருவதற்கு தகுதி பெற்று விடுகிறார்கள்.

லக்னம் ஒரு கேந்திர மற்றும் கோண ஸ்தானம். அதனால் லக்னாதிபதி நல்லவராக இருந்தாலும், தீயவராக இருந்தாலும் அவருக்கு நல்ல பலன் மட்டுமே தரும் யோக்யதை இருக்கிறது. அது ஒரு விஷேஷ நிலையாகும்.

அதனால்தான் மிதுனத்துக்கும் கன்னிக்கும் அதிபதியாகும் புதன் ஒரு இடத்தில் 4 ம் அதிபரானாலும் இன்னொரு இடத்தில் 10 ம் அதிபரானாலும் லக்னத்துக்கு அதிபராவதால் சுபராகவே கருதப்படுகிறார். இந்த இரண்டு லக்னத்துக்கும் குரு 4 க்கும் 7 க்கும் அதிபராக ஆவதால் அவர் சுப பலன் கொடுக்கும் தகுதியை இழந்து விடுகிறார்.

தனுர் மற்றும் மீன லக்னங்களுக்கு குரு சுபராகவும் புதன் தீயவராகவும் ஆகிவிடும் நிலையும் இதுதான்.

3, 6, 11 ம் அதிபர்கள் த்ரிஷாதயதிஷா என்கிற நிலையை அடைந்து எப்பொழுதும் தீய பலங்களைத் தருபவராக அமைகிறார்கள்.

மற்றவர்களைப் பற்றி அடுத்த மடலில் பார்ப்போம்.





No comments:

Post a Comment