Tuesday, 22 September 2015

Saptharishi Arul eMagazine

Hi Readers,
All the magazines released so far are available in this link. Please do read each and every magazine and share your valuable comments

https://drive.google.com/folderview?id=0BxVAGUaivearNGxwQjVGRFpETDQ&usp=sharing


Thursday, 16 July 2015

பொதுவான ஆரோக்கியம் - ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவான ஆரோக்கியம்
1.        


1.        ஒரு ஜாதகருக்கு லக்னம், சூரியன், சந்திரன் மற்றும் 6 ஆம் பாவம் ஆகியவை நல்ல பலமான நிலையில் அமைந்து, சுபரின் வீடாகவோ, சுபரின் சேர்க்கையோ (2 பாகைக்குள்) அல்லது சுபரின் பார்வையோ பெற்றிருந்தால் அவரின் உடல் நலம் நன்றாகவே இருக்கும்.
2.        லக்னத்துக்கோ, சூரியனுக்கோ அல்லது சந்திரனுக்கோ தீயவரின் தொடர்பு அதிகமாக அதிகமாக அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதிலும் பிரச்சனை அதிகமிருக்கும்.
3.        லக்னாதிபதி தீயவராக இருந்து லக்னம் அல்லது லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அல்லது சந்திரனுடன் 2 பாகைக்குள் அமர்ந்து அல்லது சந்திர நவாம்சத்தில் அமர்ந்து இருந்தால் ஜாதகருக்கு நோய் நிச்சயம் தோன்றும்.
4.        லக்னாதிபதி தீயவராக இருந்து பலமிழந்து நீச்சம், அஸ்தமனம், ராகு கேதுவின் கோடு, கிரக யுத்தத்தில் தோல்வி அல்லது 6, 8, 12 ஆம் அதிபர்களால் பார்க்கப்பட்டிருந்தால் அவர் உடம்பு நொயின் மடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
5.        லக்னாதிபதி பலமிழந்து கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் அமர்ந்து அதே சமயம் லக்னமானது 6, 8, 12 ஆம் அதிபர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தீயவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பலவீனமான எதிர்ப்பு சக்தி குறைந்த உடம்பும் நோயை எளிதில் பற்றிக்கொள்ளும் உடம்புமாக இருக்கும்.
6.        லக்னாதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் 6 ஆம் அதிபருடன் சேர்ந்திருக்குமாயின் ஜாதகருக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் நோயை  எளிதில் பற்றிக்கொள்ளும் உடம்புமாக இருக்கும்.
7.        லக்னாதிபதி அமர்ந்த வீட்டின் அதிபர் 6, 8, 12 ஆம் வீடுகளில் இருந்தாலும் ஜாதகரை நோய் எளிதில் பற்றிக்கொள்ளும்.
8.        லக்னாதிபதி அமர்ந்த வீட்டின் அதிபர் பலமிழந்து நீச்சம், அஸ்தமனம், ராகு கேதுவின் கோடு, கிரக யுத்த்த்தில் தோல்வி, பகை வீடு அல்லது 3, 6, 11 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் அவர் உடம்பு நொயின் மடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  இதே நிலை சந்திரனுக்கும் பொருந்தும்.
9.        சனியும் செவ்வாயும் 6 ஆம் வீட்டில் அமர்ந்து சூரியன் ராகுவால் பார்க்கப்பட்டு அவர்களுடன் லக்னாதிபதியும் சேர்ந்து கொண்டால் ஜாதகருக்கு வருகின்ற நோய் சீக்கிரம் குணமாகாமல் தொடர்ந்து நீண்ட நாட்க்கள் நிலைத்திருக்கும்.
10.     இதே போன்று சனியும் ராகுவும் 6 ஆம் வீட்டில் இருப்பின் அவருக்கு வருகின்ற நோய் அவரை விட்டு சீக்கிரம் விலகாது.
11.     சனியும் செவ்வாயும் இரண்டாம் வீட்டில் சேர்ந்து அமர்ந்து ஜாதகருக்கு நோயைத் தரும் கிரகத்துடன் அல்லது பாவத்துடன் தொடர்பு கொண்டிருந்தால் பலவிதமான நொய்களை ஜாதகருக்குத் தரும்.
12.     அதுபோல 8 ஆம் வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தீயவர்கள் அமர்ந்தாலோ அல்லது அந்த வீட்டைப் பார்த்தாலோ அதனாலும் ஜாதகர் பலவிதமான நோய்களுக்கு உட்படுவார்.
13.     செவ்வாயும் சுக்கிரனும் 9 ஆம் வீட்டில் சேர்ந்து அமர்ந்தாலோ அல்லது சூரியனும் சனியும் 9 ஆம் வீட்டில் சேர்ந்து அமர்ந்தாலோ ஜாதகர் நொய்வாய்ப்படுவது உறுதி. இதே நிலை குரு சனியுடன் சேர்ந்து ஒன்பதில் அமர்ந்தாலும் ஏற்படும்.
14.   கடுமையாக பாதிக்கப்பட்ட சுக்கிரன் 12 லும், கேது லக்னத்திலும், சனி கேதுவுடன் கூடி லக்னத்திலோ அல்லது ராகுவுடன் சேர்ந்து 7 ஆம் வீட்டிலோ அமர்வதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்வாய்ப்படும் நிலைக்கு ஜாதகரை தள்ளும்.

ஆடி மாத சிந்தனைகள்

ஆடி மாத சிந்தனைகள்

மறு பிறவி என்று ஒன்று உண்டா? இது ஏற்றுக்கொள்ளும் கருத்து தானா?

இப்படி ஒரு கேள்வி நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவதில் வியப்பில்லை. ஒன்றை நாம் சரியாகப்

புரிந்து கொள்ள வேண்டும். இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இறப்பு என்ற ஒன்று சர்வ நிச்சயம். 


இறந்த பின்னர் இந்த ஜீவன் எங்கு செல்கிறது? உடல் மட்டுமே எரித்தோ அல்லது புதைத்தோ 

அழிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஜீவன்? அது எங்கோ பயணம் செய்துதானே ஆக வேண்டும். இதையே அந்த 

ஜீவன் இன்னொரு பிறவி எடுக்கிறது என்கிறார்கள். அதையே மறு பிறவி என்றும் மீண்டும் மீண்டும் 

பிறப்பதை ஜன்மாந்தரம் என்றும் சொல்கிறார்கள். இதை நமது சாஸ்த்திரங்கள் சொன்னாலும் ஸ்ரீமத் பகவத் 

கீதையில் பகவான் சொல்லுவதும் இதை உறுதி செய்யும் ஒரு உபகரணமாக அமைகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசங்கள் செய்யும்போது ஞான யோகம், கர்மயோகம் 


பற்றியெல்லாம் விளக்குகிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம், “பரமாத்மாவே லகுவான ஞான மர்க்கம் 

இருக்கும்போது கர்ம மார்க்கம் பற்றி சொல்லி என்னை ஏன் குழப்புகிறீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறான். 

அதற்கு பரமாத்மா சொல்லும் பதில் ஒன்று நம் கேள்விக்கும் விடை சொல்லுகிறது. மூன்றாவது 

அத்தியாயத்தில், ஐந்தாவது ஸ்லோகத்தில் பரமாத்மா சொல்கிறார்,

ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது த்யஷ்ட²த்யகர்ம க்ருத் Ι
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ருக்ருதிஜை கு³ணை: Ι Ι

“சந்தேகமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூடச் செயல் புரியாமல் இருப்பதில்லை. 

ஏனெனில் மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ருக்ருதியிலிருந்து உண்டாண குணங்களால் தன்வசமிழந்து வேறு 

வழியின்றி எப்பொழுதும் செயல் செய்யும்படித் தூண்டப்படுகிறது”.

ஆக மனிதர்கள் இயல்பாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மனிதர்களால் உடலாலும், 

மனதாலும், வாக்காலும் செய்யப்படும் அனைத்து செயல்களும் தனக்கோ அல்லது மற்றவருக்கோ நன்மை 

செய்யுமானால் அதை புண்ணிய கர்மா என்றும், தீமை செய்யுமானால் பாப கர்மா என்றும் இரண்டு 

வகையாகப் பிரிக்கப்படுகிறது. இந்த புண்ணிய பாவ செயல்களின் பலன்கள் உடனே ஏற்பட்டுவிடாது. எப்படி 

விவசாயத்தில் விளைப்பது ஒரு காலம் என்றும் அறுவடை செய்வது மற்றொரு காலம் என்றும் 

சொல்லப்படுகிறதோ அதுபோல புண்ணிய பாவ செயல்களின் பலன்களும் வெவ்வேறு காலத்தில்தான் 

வெளிப்படும். உணவு தயாரிக்கும் காலமும் அதை உண்ணும் காலமும் வெவ்வேறு அல்லவா?

சிலர் நம் கண்ணெதிரே பாப காரியங்கள் செய்தும் சுகமாக இருப்பதைக் காண்கிறோம். அது எதனால். 

இப்பொழுது செய்யும் பாப காரியங்களின் பலனை அவர்கள் அனுபவிக்கும் காலம் பின்னர்தான் வரும். முன் 

ஜன்மங்களில் செய்த புண்ணியங்கள் அவரை சுகமாக வைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள 

வேண்டும். மறு பிறவி என்ற ஒன்று இருந்தால் அல்லவா இப்படி நேரிடும்.

இதை வைத்துத் தான் சாஸ்த்திரங்கள் மறு பிறவி இருக்கின்றது என்று நமக்கு சொல்லுகின்றன.


“கல் நீ; உளி நீ: சிற்பியும் நீ” என்ற ஒரு பட்டவர்த்தனமான உண்மை வாக்கியத்தை நமது பள்ளியில் படித்தேன். 

நாம் நாளை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்திடல் வேண்டும்.


அன்புடன்


நாராயணன்

புஷ்கரம்

புஷ்கரம்
நவக்ரகங்களில் குரு மட்டும் நான்முகனான பிரும்மவை நோக்கி தவம் செய்ததார். அதன் பயனாய் பிரும்மாவும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தாங்கள் வைத்திருக்கும் கமண்டலுவில் (சொம்பு) இருக்கும் புஷ்கரம் என்னும் தீர்த்தத்துடன் தான் எப்பொழுதும் வசிக்க வேண்டும் என்று குரு வரம் கேட்க பிரும்மாவும் சம்மதித்தார். ஆனால் புஷ்கரமோ பிரும்மாவை விட்டு விலகிச் செல்ல தயக்கம் காட்டியது. இறுதியில் இருவரையும் சமாதானம் செய்த பிரும்மா, ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ராசியில் குரு கிரகம் பிரவேசிக்கும் சமயத்தில் முதல் பன்னிரெண்டு நாட்கள் புஷ்கரமானது ஒவ்வொரு நதியிலும் கலந்து வாசம் செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது குருவும் அதில் வசிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
அது முதல் பிரும்மாவின் கமண்டலு தீர்த்தமான புஷ்கரம் என்னும் தீர்த்தமும் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்து ஒவ்வொரு வருஷமும் சுமார் பன்னிரெண்டு நாட்கள் ஒவ்வொரு நதியிலும் வாசம் செய்கிறது. ஆகவே அந்த பன்னிரெண்டு நாட்களிலும் அந்தந்த நதியில் ஸ்னானம் செய்வதற்காக குரு கிரகம் மட்டுமல்லாமல் தேவலோகத்து அனைத்து தேவர்களும் மும்மூர்த்திகளும் கூட அங்கு வந்து சேருகிறார்கள், அனைத்து நதிகளும் அங்கு சான்னித்யமாக இருக்கின்றன என்கிறது புராணம்.
புஷ்கரம் என்பது நதிகளை வணங்கும் ஒரு இந்திய திருவிழா ஆகும். இதை புஷ்கராலு, புஷ்கர் என்றும் அழைப்பதுண்டு.12 புண்ணிய நதிக்கரைகளில் உள்ள க்ஷேத்திரங்களில் இது கொண்டாடப்படுகின்றது. இதில் பித்ரு வந்தனம், ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஒவ்வொரு நதியும் ஒரு ராசியுடன் தொடர்பு கொள்கிறது. முறையாக அவை
கங்கை
மேஷம்
காவேரி
துலாம்
 நர்மதா
ரிஷபம்
பீமா/தாமிரபரணி
விருச்சிகம்
ஸரஸ்வதி
மிதுனம்
தப்தி
தனுர்
யமுனா
கடகம்
துங்கபத்ரா
மகரம்
கோதாவரி
சிம்மம்
சிந்து
கும்பம்
க்ருஷ்ணா
கன்னி
ப்ரணிதா
மீனம்
இந்த விழா குரு ஒவ்வொரு ராசியையும் கோட்சாரத்தில் கடக்கும் பொழுது அந்த ராசியின் நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றது. இந்த விழா குருப்பெயற்சியில் இருந்து 12 நாட்கள் நடக்கும்.
குருவானவர் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு வருடம் ஆகின்றது. இவ்வாறு 12 முறை அதே ராசியை அவர் கடக்கும் பொழுது 144 ஆண்டுகள் (12 x 12 = 144) ஆகின்றன..புஷ்கர சுழற்சி ஆஷாட மாதத்தின் (June-July) சதுர்தசி திதியில் தொடங்குகின்றது. 144 வருதங்களுக்கு ஒரு முறை வரும் பொழுது இதை  இதை மஹா புஷ்கரம் என்பர். இந்த வருடம் 2015 மஹா புஷ்கரமாக கோதாவரிக்கரையில் கொண்டாடப்படும். (இந்த வருடம் நாசிக்கில்) அடுத்த மஹா புஷ்கரம் 2159ல் நடை பெறும். இந்த புஷ்கரத்தின் முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் கடைசி 12 நாட்கள் அந்த்ய புஷ்கரம் என்றும் கூறப்படும்.
இந்த நாட்களில் தேவர்களும், ரிஷிகளும் இந்த நதிகளில் நீராடுவதாக ஒரு நம்பிக்கை. இந்த நாளில் நீராடினால் குரு தவறான இடங்களில் இருப்பதால் வரும் கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

நாமும் இந்த நதிகளில் மானசீகமாகவாவது நீராடி குரு பகவானை வணங்கி அவர் சுப பார்வையை வேண்டுவோம்! இந்த வருடம் இந்த நிகழ்ச்சி ஜுல்ய் 14 முதல் 25 வரை நடக்கும்.
அன்புள்ள சென்னை வாசகர்களே,

எளிய முறையில் மிகவும் குறைந்த செலவில் நமது மகரிஷிகளால் நமக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட வேத ஜோதிடம் பயில வேண்டுமா?

உடனே அணுகுங்கள் எங்களை.

தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முகவும் எளிய அணுகு முறையில் ஜோதிடம் சொல்லித் தருகின்றோம்.

அடிப்படை - 6 மாதம்.

உயர் நிலை - 6 மாதம்.

சென்னை தி. நகரில் ஹபிபுல்லா சாலையில் கர்னாடக சங்கா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09 30 மணி முதல் பகல் 12 30 மணி வரை பயிலலாம்.

வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்.

விபரங்களுக்கு கைப் பேசி எண்கள்:

93 81 71 30 52 - நாராயணன்
90 94 48 12 73 - சேகரன்
98 40 13 64 03 - ஷ்யாமளா

நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்.

அன்பன் நாராயணன்.

Monday, 27 April 2015

Saptharish Jothidam's very first E-Magazine Inaugurated

Hi All,
Please find the first Magazine with this post. Please do keep visiting often to find the subsequent releases of the eMagazine in this blog.

https://drive.google.com/file/d/0BxVAGUaivearRkRzc3hjV3Aydk0/view?usp=sharing

Please do let us know if you are not able to access the above link.

Thursday, 5 February 2015

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான நிலைகள்.

பொதுவாக திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது நாம் வெறும் நக்ஷத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்து பொருந்துகிறது அல்லது பொருந்தவில்லை என சொல்வது தவறு. திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் நீண்ட நாட்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு குலத்தை பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இருவரும் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வதும் சந்தோஷமாக வாழ்வதும் இதன் முக்கிய அம்சங்கள். அது மட்டுமின்றி அவர்கள் இருவரது உடல், மனம், எண்ணம், செயல் ஆகிய அனைத்திலும் ஒருமைப்பாடு இருக்கிறதா என்பதும் முக்கியமான அம்சமாகும்.
நாம் முதலில் நீண்ட நாட்கள் வாழ்வதை ஜோதிட முறையில் எது தடை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஒருவரது வாழ்நாட்களின் வயதை நான்கு விதமாக ஜோதிடம் பிரித்துள்ளது. பாலாரிஷ்டம், அற்பாயுசு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு என்பன அந்த நான்கு வகைகள்.
சுமார் 12 வயதிற்குள் ஒருவர் மரித்து விடுவாரே எனில் அது பாலாரிஷ்டம் என்கிற நிலையாகும்.
சுமார் 12 வயதிலிருந்து சுமார் 32 வயதுக்குள் ஒருவரது மரணம் சம்பவிக்கிறது என்றால் அது அற்பாயுசு என்கிற நிலையாகும். இதை எதிர்பாராத மரணம் என்றும் சொல்லலாம்.
சுமார் 32 வயதிலிருந்து சுமார் 75 வயது வரை தான் ஒருவர் வாழ்கிறார் என்றால் அவருக்கு மத்திம ஆயுசு என்று சொல்லவேண்டும்.
75 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் பூரண ஆயுசு பெற்றவர்கள் என்று சொல்லலாம்.
ஒருவரது சராசரி ஆயுசு எவ்வளவு என்பதை நாம் உத்தேசமாக கண்டு பிடிக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. இதில் பல நுண்ணிய விஷயங்களை ஜைமினி மஹரிஷி சேர்த்துள்ளார். அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுவாக சொல்லப்பட்ட அணுகுமுறையை மட்டும் பார்ப்போம்.
மூன்று ஜோடிகளை வைத்து ஒருவரது ஆயுளை கணிக்கலாம்.
1.     லக்னம் மற்றும் 8 ம் அதிபர் முதல் ஜோடி. (செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் ஒருவரே அதிபர் என்பதால் இதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அது இப்பொழுது நம்மைக் குழப்ப வேண்டாம்)
2.     சந்திரன் மற்றும் சனி இரண்டாம் ஜோடி.
3.     லக்னம் மற்றும் ஹோரா லக்னம் மூன்றாம் ஜோடி.
விதி முறைகள்:--
A.    ஒவ்வொரு ஜோடியிலும், இருவரும் சர ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் ஸ்திரத்திலும் மற்றவர் உபயத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு பூரண ஆயுள்.
B.    ஒவ்வொரு ஜோடியிலும் இருவரும் உபய ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் சரத்திலும் மற்றவர் ஸ்திரத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு மத்திம ஆயுள்.
C.    ஒவ்வொரு ஜோடியிலும் இருவரும் ஸ்திர ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் உபயத்திலும் மற்றவர் சரத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு அற்பாயுள்.
முடிவு செய்யும் விதி முறைகள்:
·         மேற்கண்ட மூன்று ஜோடிகளில் இரண்டு ஜோடிகள் ஒரேவிதமான ஆயுள் காலத்தை தீர்மானித்தால் அந்த ஆயுள் காலத்தையே ஜாதகரின் ஆயுள் காலமாகக் கொள்ளவேண்டும்.
·         மூன்றாவது ஜோடியும் அதே ஆயுள் காலத்தைக் குறித்தாலோ அல்லது வேறு ஆயுள் காலத்தைக் குறித்தாலோ கீழே உள்ள அட்டவணைப்படி ஆயுளை உத்தேசமாக குறிக்கலாம்.
·         மூன்று ஜோடிகளும் வெவ்வேறு காலத்தைக் குறித்தால் மூன்றாவது ஜோடியான லக்னம் மற்றும் ஹோரா லக்னம் குறிப்பிட்ட ஆயுள் காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அட்டவணையைப் பார்க்கலாம்:-
ஜோடி 1 & 2
ஜோடி 3
உத்தேச ஆயுள்
அற்பாயுள்
அற்பாயுள்
32 வருடம்
மத்திம ஆயுள்
அற்பாயுள்
64 வருடம்
பூரண ஆயுள்
அற்பாயுள்
96 வருடம்
அற்பாயுள்
மத்திம ஆயுள்
36 வருடம்
மத்திம ஆயுள்
மத்திம ஆயுள்
72 வருடம்
பூரண ஆயுள்
மத்திம ஆயுள்
108 வருடம்
அற்பாயுள்
பூரண ஆயுள்
40 வருடம்
மத்திம ஆயுள்
பூரண ஆயுள்
80 வருடம்
பூரண ஆயுள்
பூரண ஆயுள்
120 வருடம்

குறிப்பு: இது ஒரு உத்தேச முறைதான். இதன் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் சர ராசிகள் பிரும்மாவாலும், ஸ்திர ராசிகள் ருத்ரனாலும், உபய ராசிகள் விஷ்ணுவாலும் ஆளப்படுகின்றன என்பது தான். எனவே சர ராசிகள் நீண்ட ஆயுளையும், ஸ்திர ராசிகள் குறைவான ஆயுளையும், உபய ராசிகள் மத்திம ஆயுளையும் கொடுக்கின்றன.
சரி, இப்பொழுது ஆயுள் கணிப்பு என்பது நமக்கு புரிந்து விட்டது அல்லவா?
திருமண வயது என்பது சுமர் 23 வயதுக்கு மேலேதான். அதனால் அற்பாயுசு என்கிற நிலையை எப்படிப்பட்ட கிரக நிலைகள் ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
1.     லக்னாதிபதி உச்சம் பெற்று அதே சமயம் ஒரு இயற்கை சுபரால் பார்க்கப்படாமல் இருந்து, சனி நவாம்சத்தில் கும்பத்திலோ அல்லது மீனத்திலோ அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டால் அது அற்பாயுள் நிலைக்கு ஜாதகரை கொண்டு செல்லும்.
2.     சந்திரன் 6, 8, ம் வீடுகளில் அமர்ந்து லக்ன கேந்திரங்களில் தீயவர்கள் அமர்ந்து சுபர் பார்வையற்று போனால் அற்பாயுள்.
3.     8 மற்றும் 12 ஆம் அதிபர்கள் பலமிழந்து, ஜாதகரின் லக்னம் உபய லக்னமாக அமைந்து அங்கு சனி அமர்ந்தால் அற்பாயுள்.
4.     8 ஆம் அதிபர் ஒரு கேந்திரத்தில் அமர்ந்து அதே சமயம் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருப்பின் ஜாதகருக்கு அற்பாயுள்.
5.     சந்திரனின் நேர்ப்பார்வையில் செவ்வாயும் குருவும் லக்னத்தில் அமர்ந்து, ஏதேனும் ஒரு கிரகம் 8 ஆம் வீட்டில் அமர்ந்தால் அற்பாயுள்.
6.     லக்னாதிபதி லக்னத்திலும், 8 ஆம் அதிபர் 9 ஆம் வீட்டிலும் 8 ஆம் வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்து அதை ஒரு தீயவர் பார்க்க ஜாதகருக்கு அற்பாயுள்.
7.     லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து சூரியனும் சனியும் கேந்திரங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
8.     லக்னத்திலிருந்து 8 ஆம் அதிபரோ அல்லது சந்திரனிலிருந்து 8 ஆம் அதிபரோ 12 ஆம் வீட்டிலோ அல்லது ஒரு கேந்திரத்திலோ அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
9.     சனி லக்னத்தில் அமர்ந்து அது அதற்கு பகை வீடாகி, இயற்கை சுபர்கள் 3, 6 மற்றும் 9 அல்லது 12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
10.  சூரியன், சந்திரன், சனி ஆகிய மூவரும் 8 ஆம் வீட்டில் மிகவும் நெருக்கமாக அமர்வது ஜாதகருக்கு அற்பாயுளைக் கொடுக்கும்.
11.  புதன் கேந்திரத்தில் பலமான நிலையில் அமர்ந்து 8 ஆம் வீட்டில் யாருமே இல்லையெனில் அது ஜாதகருக்கு அற்பாயுள் தரும்.
12.  லக்னாதிபதியும் சந்திரனும் பலமிழந்து ஆபோக்லீம ஸ்தானங்களில் ( 3, 6, 9, 12 ஆம் வீடுகள்) அமர்ந்து தீயவர் பார்வை பெறின் அற்பாயுள்.
13.  லக்னத்தில் சூரியன் அமர்ந்து அது பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டால் ஜாதகருக்கு அற்பாயுள்.
14.  8 ஆம் வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்து கேந்திரங்கள் எதிலும் ஏதேனும் சுபர் அமரவில்லையெனில் அது அற்பாயுளைத் தரும்.
15.  8 ஆம் வீட்டின் அதிபர் சனி அல்லது ஒரு தீயவராகி, இன்னுமொரு தீயவருடன் கிரக யுத்த நிலையில் மிகவும் நெருக்கமாக ஒரு தீய சஷ்டியாம்சத்தில் அமர்ந்தால் அது ஜாதகருக்கு அற்பாயுள் தரும்.
16.  லக்னத்தில் தீயவர்கள் அமர்ந்து சந்திரனும் தீயவர்களோடு சேர்ந்து சுபர் பார்வையற்று இருக்குமேயானால் அது அற்பாயுளைத் தரும்.
எந்த ஜாதகத்திலும் ஒருவருடைய ஆயுளைக் கணிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம் தான். கவனம் தேவை. ஏதோ ஒரு நிலை நம் கண்களை மறைத்து விடும். சில சமயம் நம் கணிப்பும் தவறும். சந்திரனுக்கு 8 ஆம் பாவத்தொடர்பும், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்பும் மிகவும் கவனமாக அலசப் பட வேண்டும்.

ஒரு ஆணையும் பெண்ணையும் சரியான முறையில் ஆராய்ச்சி செய்து சேர்த்து வைப்பது என்பது கம்பியில் நடப்பது போன்றதுதான். இங்கு கொடுக்கப்பட்டவை அனைத்தும் ஜோதிட வல்லுனர்களால் அவரது அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்ட விஷயங்கள். இவற்றுக்கு தர்க்க ரீதியாக நாம் காரணம் கண்டு பிடிப்பது என்பது சிரமம்.

அடுத்ததாக ஒருவரது உடல், மனம், எண்ணம், செயல் ஆகியவற்றின் ஆரோக்கிய நிலையை நாம் ஆராய வேண்டும்.

இதற்கு ஜாதகத்தில் லக்னத்தில் உள்ள பாதிப்புகளை அளவிட்டு உடல் ரீதியான ஆரோக்கிய நிலையை அறியலாம். சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம் மன ரீதியான ஆரோக்கியத்தையும், புதனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம் புத்தி ரீதியான ஆரோக்கியத்தையும் அறியலாம். இதில் மிகவும் முக்கியமானது சந்திரனுக்கும் புதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள். இது அதிக அளவில் இருக்குமாயின் மன அழுத்தம், மன நோய், மனப் பிரிவு, மனச் சலனம், புத்தி தடுமாறுதல், நிலையான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்தல் போன்ற பல நிலைகளால் ஒருவரது மண வாழ்க்கை பாதிப்படையும்.
சந்திரனுக்கு ஏற்படும் பாதிப்பு இரண்டு விதமான துன்பங்களைத் தரும். முதலில் இது ஒருவரது ஆயுளைப் பாதிக்கும். இரண்டாவது ஒருவரை மன நல மருத்துவரிடம் கொண்டு சேர்க்கும். இது ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் நிலையைப் பொருத்து அமையும்.

இப்படிப்பட்ட பாதிப்புள்ள மனிதர்கள் சமுதாயத்தில் பழகும்போது மிகவும் இயல்பாகப் பழகுவதாக மற்றவர்களால் உணரப்படுவர். ஆனால் ஆழ்மனதில் மிகுந்த தடுமாற்றங்களையும், மன அழுத்தத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையுடனும் சில சமயம் தற்கொலை எண்ணத்துடனும் சில சமயம் கொடூர மனத்துடனும் வண்டி வண்டியான குழப்பங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் உடன் வாழ்பவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் இருக்கும்.

சனியால் பாதிக்கப்படும்போது அதிக துக்க உணர்வோடும், மிகுந்த மன அழுத்தத்துடனும் செயல் படுவார்கள். அவர்கள் அடுத்தவர்கள் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும், அடுத்தவர்களுக்காக தான் மிகுந்த தியாகங்களைச் செய்வது போலவும், அடுத்தவர்களால் தன் வாழ்க்கையே சீரழிந்து விட்டது போலவும், கற்பனை செய்துகொள்வார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை தடம் புரளும்.

செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் முரட்டுத்தனமான செயல்பாட்டுடன், சில சமயம் கொடூரமாக பழகுவார்கள். அவர்களது பேச்சில் வன்மம், கோபம், குரோதம் இருக்குமென்பதால் அவர்களோடு வாழ்பவர்கள் வெகு சீக்கிரத்தில் மன அழுத்தம் உண்டாகி வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ராகுவினால் பாதிக்கப்படுபவர்கள் அடுத்தவரை நம்பாமல் தான் ஏமாற்றப்படுவதாக அதீத கற்பனையில் மூழ்கி கொலை செய்யும் எண்ணத்துக்கு தள்ளப்படுவார்கள்.

கேதுவினால் பாதிக்கப்படுபவர்கள் மிகுந்த தாழ்மை உணர்ச்சியினால் உந்தப்பட்டு தன்னை ஒதுக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து அவர்கள் விடுதலை தேடும் வழி தன்னைத் தானே அழித்துக் கொள்ளுதல்தான். சிலர் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஆன்மீக ஈடுபாடு கொண்டு சாமியார்களை அணுகுவார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தீயவர்களால் பாதிப்பு அடையும்போது அவரது ஜாதகத்தில் வேறு என்ன சிறப்பு நிலைகள் இருந்தாலும் அவரிடமிருந்து விலகி இருப்பதே மற்றவருக்கு நல்லது.

இப்படிப்பட்ட ஜாதகங்களில் குரு, சுக்கிரன் அல்லது சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபர் ஆகியோரது பார்வை சந்திரனுக்கு இருப்பின் தாக்கத்தின் வீரியம் சற்றே குறையும். அப்படிப்பட்ட ஜாதகங்களில் மற்ற கிரகங்களின் நிலை நன்றாயிருக்க வேண்டும். அப்பொழுதான் தாக்கத்தின் வீரியம் குறையும்.

சந்திரனும் புதனும் விருச்சிகத்திலோ அல்லது மீனத்திலோ சேர்ந்து இருப்பின் வெளித்தோற்றத்தில் மிகுந்த அழகும் புத்திசாலித்தனமாய் பழகும் குணமும் அதே சமயம் உள்ளே பிசாசுத்தன்மையும் மறைந்திருக்கும் ஜாதகரை காணலாம். அப்படிப்பட்ட ஜாதகர் அடுத்தவர் அஞ்சி நடுங்கும் அளவுக்கு பேராசையும், வெறுப்பை உமிழும் கொடூரமும், பொறாமையும் கூடிய மனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையின் அழிவுப்பாதையில் எந்தவித சலனமும் இன்றி பிரயாணம் செய்வார்கள்.

இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளதா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. அடுத்தவருடன் ஒரு குடும்பத்தில் வாழ்வது என்பது வேறு. திருமணம் என்பது இரு மனத்தின் சங்கமம் அல்லவா. அதனால் தான் நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையை மிகவும் ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிலர் பழக்கத்துக்கு இனிமையாக இருப்பர். ஆனால் அவருடன் சேர்ந்து வாழும்போதுதான் அவரது உள் மனதின் வெளிப்பாடு நமக்குத் தெரியும். அதில் உள்ள வக்கிரம் தெரியும். இதை முன்னரேயே அறிந்து கொள்வது நல்லது அல்லவா? இதை காதல் திருமணத்தில் அறிந்துகொள்ள முடியுமா? காதலிக்கும்போது ஒருவர் மற்றவரை கவரவே முயற்சி செய்வார்கள். அதில் உண்மை எப்படி இருக்கும்? ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள சில வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைத்தான் நான் உங்களுக்கு தருகிறேன்.

திருமணப்பொருத்தம் காணும்போது சந்திரன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருப்பது உசிதம்.

அப்படிப்பட்ட ஜாதகர் சந்திரன் எந்த ராசியில் தனித்து இருக்கிறாரோ அந்த ராசியின் பாதிப்பில் மட்டும்தான் இருப்பார்.

மேஷத்தில் சந்திரன் தனித்து இருப்பின் ஜாதகர் சிந்தனையற்ற செயல் புரிபவராகவும், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்பவராகவும் விளங்குவார். அதே சமயம் ஒளிவு மறைவு இல்லாதவராக மனதில் பட்ட்தை அப்படியே பேசுபவராகவும் செயல் புரிபவராகவும் விளங்குவார்.

ரிஷபத்தில் இருப்பின் ஜாதகர் திடமாக முடிவுகளை எடுப்பவராக இருப்பர். ஆயினும் அவருடைய முடிவுகளில் பிடிவாதம் இழையோடும். இது தவிர்க்க முடியாத ஒன்று.

மிதுனத்தில் இருப்பின் அவருடைய முடிவுகளில் இரட்டைத்தன்மை இருக்கும். அதில் அவரது புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கடகத்தில் இருப்பின் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுப்பவராக இருப்பார்.

சிம்மத்தில் இருப்பின் ஜாதகர் அதிகாரம், தான் என்கிற அகங்காரம் ஆகியவற்றுடன் கூடிய,  அதே சமயம் நேர்மையான பிரகாசமான முடிவுகளை எடுப்பார்.

கன்னியில் இருப்பின் ஜாதகர் தீர்க்கமாக சிந்தனை செய்து, யதார்த்தமான அதே சமயத்தில் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் முழுமையான முடிவுகளை எடுப்பார்.

துலாத்தில் இருப்பின் ஜாதகர் அலை பாயும் மனதுடன், அடுத்தவரை நேசிக்கும் மனதுடையவராக இருந்து முடிவெடுப்பதில் சிரமப் படுவார்.

விருச்சிகத்தில் இருப்பின் ஜாதகர் அடுத்தவரை நேசிப்பவராக, நன்றியுள்ளவராக இருப்பார். ஆனால் தொட்டால் சிணுங்கியாக இருப்பார். அவரது முடிவுகள் பலரால் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படாது.

சந்திரன் தனுசு ராசியில் இருப்பது ஒரு வரம். அடுத்தவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெருந்தன்மையுடன் முடிவேடுப்பவராக ஜாதகர் விளங்குவார்.

மகர ராசியில் இருப்பின் ஜாதகர் எல்லோரிடமும் நட்பு பாராட்டுபவராகவும், துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுப்பவராகவும் விளங்குவார். அதே சமயம் எல்லோரிடமும் துல்லியம் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார் மற்றும் எதிர்பார்ப்பார்.

கும்ப ராசியில் சந்திரன் தனித்து இருப்பின் ஜாதகர் ஆழ்ந்த யோசனை உள்ளவராகவும், தனித்திருப்பதில் விருப்பம் உள்ளவராகவும், அடுத்தவரிடம் அதிகம் நட்பு பாராட்டாதவராகவும் அதே சமயத்தில் மனித நேயம் மிக்கவராகவும் இருப்பார்.

மீன ராசியில் சந்திரன் தனித்திருப்பின் ஜாதகர் பெரிய மனதுடன் எல்லோரையும் நேசிப்பவராக இருப்பார். ஆனால் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்பவராக இருப்பார்.

இப்படி தனித்திருக்கும் சந்திரனுக்கு உள்ள குணங்கள் சுபர்களின் சேர்க்கையால் நல்ல குணங்களின் வெளிப்பாடும், தீயவர்களின் சேர்க்கையால் தீய குணங்களின் வெளிப்பாடும் மிகுந்ததாக இருப்பதில் ஐயமில்லை.

சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது ஜாதகர் மிகவும் நட்பு பாராட்டுபவராகவும் அழகை ஆராதிப்பவராகவும் இருப்பார்.  இது சந்திரன் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் வெளிப்படும் குணமாக இருக்கும். பணிவு, அழகாக செயல்படுதல், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுதல், எதிர் காலத்தில் நம்பிக்கையுடன் இருத்தல் போன்ற குணங்கள் இவரிடம் மிகுந்திருக்கும்.

சந்திரன் குருவுடன் சேரும்போது ஜாதகருக்கு பெருந்தன்மையுடன் கூடிய அடுத்தவரை ஏற்றுக்கொள்ளும் / மன்னிக்கும் சுபாவம், அடுத்தவரால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை, ஆன்மீக உணர்வு, நட்பு பாராட்டுதல் போன்ற குணங்கள் மிகுந்திருக்கும். சந்திரன் இருக்கும் ராசிக்குத் தகுந்தார்ப்போல் இத்தன்மைகள் வெளிப்படும்.

சந்திரன் 6 (ருண, ரோக, சத்ருஸ்தானம்), 8 ( தவறுகள் நேரும் ஸ்தானம்), 12 ( இழப்பு மற்றும் பலவீனத்தை அடையாளம் காட்டும் ஸ்தானம்) ஆகியவற்றில் இருப்பின் அது ஆரோக்கியமற்ற மன நிலையைக் காட்டுகிறது. அதே சமயம் இந்த வீடுகளில் சந்திரன் இருந்தாலும் சுபர் பார்வை அல்லது சேர்க்கை, சந்திரனின் பலமான நிலை ஆகியவை ஜாதகரின் குறைபாடுகளை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் ஜாதகரின் மன நிலையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகின்றன. அதே சமயம் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகலையும் கணக்கில் கொள்வது அவசியம். எல்லா நிலைகளையும் நன்கு ஆராய்ந்து ஜாதகரின் குண நலனும் செயல்பாடும் இயல்பாக இருக்குமா அல்லது இயல்பு மாறி இருக்குமா என்பதை ஆராய வேண்டும்.

·         குரு லக்னத்திலும் செவ்வாய் 7 ஆம் வீட்டிலும் இருப்பது குண மாற்றத்துக்கு அடையாளம். மேஷ லக்னமாக இருந்து செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் கொடூர மனத்துடன் வீட்டிலுள்ளவர்களை மிரட்டுபவராக விளங்குவார்.
·         சனி லக்னத்திலும் செவ்வாய் சனி இருக்கும் வீட்டிலிருந்து 6, 8 அல்லது 12 ஆம் வீடுகளில் இருப்பது.
·         சனி லக்னத்திலும், சூரியன் 12 ஆம் வீட்டிலும் இருந்து சந்திரன் அல்லது செவ்வாய் திரிகோணஸ்தானங்களில் இருப்பது.
·         மூன்றாம் வீட்டின் அதிபர் ராகு கேதுவின் பிடியில் மாட்டிக் கொண்டாலோ அல்லது அஸ்தங்கம் ஆனாலோ அல்லது 6 ஆம் வீட்டில் அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்து ஒரு தீயவரால் பார்க்கப்பட்டாலோ விஷ ஜுரம் அல்லது ஏதோ ஒரு ஒவ்வாமையினால் மன நிலை பாதிப்படையும். உதாரணமாக மேஷ லக்னமாக அமைந்து புதன் ராகு அல்லது கேதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு கன்னி அல்லது மீனத்தில் அமர்ந்து சனியினால் பார்க்கப்பட்டால் மன நிலை பாதிப்பு இருக்கும்.
·         12 ஆம் வீட்டில் தேய்பிறைச் சந்திரன் சனியுடன் சேர்ந்து அமர்வது. இப்படி சொல்லப்பட்ட அமைப்புள்ள ஜாதகர் வெளி உலகத்தில் மிக சாதாரணமாகப் பழகினாலும் மனதிற்குள்ளே பெரிய போராட்டத்துடன் கூடிய, கழிவிரக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்ட மாறுப்பட்ட மன நிலை உள்ளவராகவே விளங்குவார்.
·         இரண்டாம் வீட்டின் அதிபரும் சனியும் தீயவர்களுடன் சேர்ந்தால் மன நிலையில் மற்றும் பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.
·         சனியுடன் சந்திரன் சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து புதனால் பார்க்கப்பட்டால் மண வாழ்க்கையின் அமைதியில் பாதிப்பு ஏற்படும்.
·         சந்திரன் ராகு / கேதுவுடன் சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து, திரிகோணஸ்தானங்களில் தீயவர்கள் அமர்ந்தால் ஜாதகர் மன பாதிப்புக்குள்ளாகி அடுத்தவரைக் கெடுக்கும் எண்ணத்துடன் கூடியவராக விளங்குவார்.
·         4 ஆம் வீட்டில் ஒரு தீயவர் அமர்ந்து நான்காம் வீட்டின் அதிபர் இன்னொரு தீயவருடன் சேர்க்கை பெற்று இருப்பின் ஜாதகருக்கு பகை உணர்ச்சி அதிகம் இருக்கும். அடுத்தவரை எளிதில் மன்னிக்க மாட்டார்.
·         சனி லக்னத்திலும் செவ்வாய் 5 அல்லது 7 அல்லது 9 ஆம் வீட்டில் இருப்பின் மண வாழ்க்கை பாதிக்கும்.
·         சந்திரனும் புதனும் லக்னத்தில் ஒரே நக்ஷத்திர பாதத்தில் மாட்டிக்கொண்டால் மனம் மற்றும் புத்தி பேதலிப்பினால் செயலில் தடுமாற்றம் ஏற்படும்.
·         பலமில்லாத சந்திரன் ஒரு தீயவருடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் அல்லது 5 ஆம் வீடு, 8 ஆம் வீடு அல்ல்து 9 ஆம் வீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்தால் மன பாதிப்பு இருக்கும்.
·         7 ஆம் வீட்டில் மாந்தி ஒரு தீயவருடன் ஒரே நக்ஷத்திர பாதத்தில் இருப்பின் மண வாழ்க்கை பாதிக்கும்.
·         தீயவரோடு சேர்ந்த புதன் 3, 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் புத்தி தடுமறும்.
இப்படி சொல்லப்பட்ட அமைப்புகளை தனித்துப் பார்க்கக் கூடாது. நல்ல வலுவான லக்னம், வலுவான சந்திரன், புதன், சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வை போன்ற தொடர்புகள் இப்படிப்பட்ட அமைப்பினால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும்.

மேலே சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மனதில் கொண்டு ஒரு ஆணையும் ஒரு பெண்னையும் சேர்க்கும் பணியில் ஜோதிடர்கள் ஈடு பட வேண்டும் எனபதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதை விடுத்து, 10 க்கு 7 பொருந்துகிறது, 10 க்கு 8 பொருந்துகிறது என்று கணக்குப் போட்டால் அது ஒருவரது மண வாழ்க்கையை பாதிக்கும். இந்தக் கட்டுரையில் நான் இரண்டு விஷயங்களைத் தான் எடுத்துக் கொண்டுள்லேன். ஒன்று ஒருவரின் அகால மரணம். இன்னொன்று ஒருவரின் மனம், புத்தி ஆகியவற்றின் செயல்பாட்டில் உள்ள மாறுபட்ட நிலை. இங்கு கொடுக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயம் உங்கள் சிந்தனையைத் தூண்டும் என்றே கருதுகிறேன். முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்

நாராயணன்