Thursday, 30 January 2014

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுங்கள் - எண் 5

புதனால் ஆளப்படுகின்ற எண் 5. புதன் புத்திகாரகன் என்று ஜொதிடத்தில் அழைக்கப்படுகிறான்.

எல்லோரையும் கவரும் சக்தியை இந்த எண் ஒருவருக்குத் தருகிறது.

குணங்கள் மூன்று வகைப் படும். சத்வம், ராஜசம், தாமசம் என்பனவையே அவை.

5 ம் எண் காரகர்கள் ராஜச குணத்தைச் சார்ந்தவர்கள். வேகம் அதிகம் உள்ளவர்கள். தன் வேகத்துக்கு யாராலும் ஈடு கட்ட முடியாது என நம்புபவர்கள்.

வெகு சீக்கிரம் முடிவுகளை எடுப்பவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானது என்பதை வெகு காலம் கழித்து தான் உலகம் புரிந்து கொள்ளும்.

சுலபமாக எல்லோரிடமும் பழகுவார்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு பேசமாட்டர்கள்.

எந்த காரியமாக இருந்தாலும்  துணிந்து இறங்குவார்கள்.

பழைமையை வெறுப்பர். புதுமையை ரசிப்பர்.

இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்க்கும்போது கவனம் தேவை.

இவர்களால் பலருக்கு மிகுந்த பயன் இருக்கும். மிகவும் உற்சாகமானவர்கள்.

துணிவானவர் என்பதால் எதிரிகளை அதிகம் சம்பாதித்துக் கொள்வார்.

விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது  அவசியம்.

வெகு எளிதில் பணம் சம்பாதிக்கும் வழியை அறிந்தவர்கள். வியாபாரத்துக்கு மிகவும் லாயக்காணவர்கள்.

இவர்களுக்கு (ஆண் / பெண்) சபல சித்தம் அதிகம். வெகு எளிதில் ஒருவரை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இவர்கள் மனதை வெகு எளிதில் கொள்ளை கொள்வார்கள்.

நடுத்தர உயரம், சிறிது பருமனான சரீரம், களை வீசும் துரு துரு என்கிற முகம், ஒளி வீசும் கண்கள், பார்வையிலும் பேச்சிலும் காந்த சக்தி ஆகியவை இவருக்கு இருக்கும்.

5, 9, 14, 18, 23, 27 தேதிகள் இவருக்கு அதிர்ஷ்டமானவை.

வியாபாரத்துக்கு 1, 4, 5, 9 எண்காரர்கலை கூட்டாக சேர்த்துக் கொள்ளலாம். 5 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லா எண் காரர்களும் உதவுவார்கள்.

சாம்பல் நிறம் மிகவும் அதிர்ஷ்டமானது. ஆழ்ந்த வர்ணங்களை அணிவது நல்லதல்ல.

வைரம் அல்லது ஸிர்கன் கற்களை அணியலாம்.

55555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555


சென்னையில் உள்லவர்களுக்கு ஜோதிடத்தை பயிலுவதில் நாட்டம் இருப்பின் தவறாமல் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வருகின்ற பிப்ரவரி மாதம் 9 ம் தேதி சென்னையில், தி நகரில் உள்ள கர்னாடக சங்க ஸ்கூலில் வகுப்புகள் ஆரம்பம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 09 30 மணி முதல் 12 30 மணி வரை வகுப்புகள், நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும். தொடர்பு கொள்ள:

S.Narayanan - 93817 13052
P.R.Ramachandhiran - 89399 01346

நல்ல சந்தர்ப்பம், தவற விடாதீர்கள்.



















Wednesday, 29 January 2014

எண் கணிதம் மூலம் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - எண் - 4

எண் 1 அறிவைக் குறிக்கும் எண். சூரியனால் ஆளப்படுகிறது.

எண் 2 மனத்தைக் குறிக்கும் எண். சந்திரனால் ஆளப்படுகிறது.

எண் 3 மனத்தின் இயக்கத்தைக் குறிக்கும் எண். குருவினால் ஆளப்படுகிறது.

ஆனால் எண் 4 இந்த மூன்றையும் ஒருநிலைப் படுத்தி ஒரு சட்டத்தை இயக்கும் எண். அதே சமயம் இது சட்டத்தைத் தாண்டவும் தயங்காது. இதை சமுதாய எண் என்றும் கூறலாம்.

எல்லொரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர்கள் எண் 4 ன் ஆளுமைக்குட்பட்டவர்.

இவர்கள் மிகுந்த வாக்கு சாமர்த்தியம் உள்ளவர்கள். தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.

இவரது பேச்சில் இனிமை இருக்காது. மிகவும் துடுக்குத் தனமாக தன் அபிப்பிராயங்களை வெளியிடுவர். தன் பேச்சைக் கேட்ப்பவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படமாட்டார்கள்.

யார் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக் கருத்து ஒன்றைக் கூறுவர். பிறர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தானே தீர விசாரித்து அறிந்து கொள்வதைத் தான் ஏற்றுக்கொள்வர்.

எல்லா விஷயத்தைப் பற்றியும் தனக்கென்று ஒரு கருத்தை வைத்துக் கொள்வர்.

மாற்றுக்கருத்துக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்களுக்கு நண்பர்கள் நிலைப்பர்.

இவர்களுக்கு அறிவுத் தேடல் எப்பொழுதும் இருக்கும்.

உணவு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பர். புகழுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்வு குறைவாக இருக்கும். பிறர் சொல்லும் சிறு விஷயத்தைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்வர்.

இவரது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பொதுவாக இவர்களுக்கு கிடைப்பதில்லை.

அதிகம் கஷ்டப்படாமல் சாதிக்கும் விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

பொதுவாக இரட்டை நாடி சரீரம் இருக்கும். முகம் பெரியதாகவும் கம்பீரமானதாகவும் இருக்கும். கண்கள் சிறிது உள்ளடங்கியே இருக்கும்.

வட்டமான முகம். அடர்த்தியான தலை மயிர் அலை போன்று இருக்கும்.

சட்டென்று நோய்வாய்ப் பட மாட்டார்கள். அப்படியே வந்தாலும் இவர்கள் யோகப் பயிற்சி மூலம் தன்னை வெகுவாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.

4 ம் தேதியில் பிறந்தவர்கள் 13, 22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்களை விட கண்டிப்பும் அதிகார தொனியும் அதிகம் உள்ளவர்களாக இருப்பர்.

13 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு எதிற்பாராமல் சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

22 ம் தேதியில் பிறந்தவர்களை தீய வழிகள் அதிகம் ஈர்க்கும். கவனம் தேவை.

31 ம் தேதியில் பிறந்தவர்கள் மனோ பலம் வாய்ந்தவர்கள். தனியாக வாழ்வதில் நாட்டம் இருக்கும். ஒழுங்குகளில் இருந்து விலகாமல் இருப்பது நலம்.

1, 10, 19, 28 ம் தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள். 9, 18, 27 ம் தேதிகள் சாதகமான பலன் தரும்.

4, 13, 22, 31 ம் தேதிகள் எதிர்பாராத செயல்களை செய்யும்.

8, 17, 26 ம் தேதிகள் எப்பொழுதும் தீமையே செய்யும்.

4 ம் எண்காரகர்கள் 1 ம் எண்ணில் பிறந்தவரிடம் வசியப்படுவார்கள். 4 ம் எண்ணில் பிறந்தவரிடம் 8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் வசியமாவர்.

பேச்சாளர், ஜொதிடர், கலைஞர், ஆராய்ச்சி செய்பவர், போக்குவரத்து தொழில் போன்றவைகள் இவர்களுக்கு நல்லது. வியாபாரம் நல்லதல்ல.

வெளிர் நீலம் அல்லது நீலம் இவர்களுக்கு பொருத்தமான நிறம். மஞ்சளும் நல்லதே. தவிர்க்க வேண்டிய நிறம் கறுப்பு.

வெளிர் நீலக்கல் அல்லது கோமேதகம் நல்லது.

இவர்கள் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பினால் வெற்றி பெறுவர்.

444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444



























Monday, 27 January 2014

கிரகங்களும் அதன் தேவதைகளும்

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அதி தேவதை, பிரத்யதி தேவதை, குரு தேவதை உண்டு. அதுபோல ஒவ்வொரு கிரகமும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் மட்டும்) ஒரு ரசத்தை ஆளுகின்றன.
இவற்றை நாம் எப்படி ஜோதிட முறையில் பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ஒரு கிரகம் வேலை செய்ய முடியாமல், வலுவிழந்த நிலையில் இருந்து அதனால் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நண்மைகள் கிடைக்கவில்லை யெனில், அந்த கிரகத்தின் அதி தேவதையை வணங்கினால் நல்ல பலன் கிட்டும். உதாரணமாக ஒரு குழந்தை படிப்பில் நாட்டம் கொள்லாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். படிப்பின் காரகன் புதன் கிரகம். அந்த குழந்தையின் ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பின் அதற்கு படிப்பில் நாட்டம் வராது. அந்த நிலையை மாற்ற புதனின் அதி தேவதையை வணங்கி வந்தால் படிப்பில் நாட்டம் வரும். அதி என்றால் அதிகப்படுத்துவது. கிரகங்கள் வெறும் பிரதிநிதிகள் தான். அதை இயக்குபவர் அதன் தேவதைகளே.
இப்பொழுது ஒரு கிரகம் தீமை வாய்ந்தது என்கிற நிலையில் இருந்து அது செயல் படாமல் இருப்பது நல்லது என்று நினைத்தால், அந்த கிரகத்தின் செயல்பாட்டினை கட்டுக்குள் வைத்திருக்க அதன் பிரத்யதி தேவதையை வணங்குதல் வேண்டும். உதாரணமாக சனி ஒரு ஜாதகருக்கு தீயவர். அவரை கட்டுக்குள் வைத்திருக்க அவரது பிரத்யதி தேவதையை வணங்குதல் அவசியம்.
சரி, எப்படி வணங்குவது? கிரகம் ஆளுகின்ற ரசத்தினால் அந்த கிரகத்தை ஆளுகின்ற தேவதைக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். அந்த கிரகம் ஆளுகின்ற பஞ்ச பூத தத்துவத்தின் துணைகொண்டு அந்த தேவதையை வணங்கலாம். ஒரு காரியம் கைகூட இது ஒரு மிகச் சிறந்த வழி.
சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சூரியன் ஆளுகின்ற ரசம் தேன். அவர் ஆளுகின்ற தத்துவம் மீண்டும் அக்னி.
சூரியன் வேலை செய்ய ஹோமம் மூலம் வழிபடுதல் வேண்டும். ஹோமத்தில் பல விதமான பொருள்களை அர்பணிக்கும்போது சூரியனின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம், கண் பார்வை தெளிவு போன்ற சூரியன் செயல்பாட்டினால் கிடைக்கும் பலவிதமான நன்மைகள் ஜாதகருக்குக் கிடைக்கும்.
சூரியனால் பிரச்சினை ஏற்படும்பொழுது சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றி வைத்தும் வழிபட்டால் பிரச்சினைகள் குறையும்.
கிரகம்
அதிதேவதை
பிரத்யதிதேவதை
ரசம்
சூரியன்
அக்னி
சிவன்
தேன்
சந்திரன்
வருணன்
கௌரி
சுத்த ஜலம்
செவ்வாய்
ஸ்கந்தன்
ஆதித்யன்
பால்
புதன்
விஷ்ணு
நாராயணா
கரும்புச் சாறு – சந்தனம்
குரு
இந்திரன்
சாம்ப சதாசிவன்
நெய்
சுக்கிரன்
இந்திராணி
லக்ஷ்மி
தயிர்
சனி
பிரம்மா
காலாக்னி ருத்ரா / காளி
இளநீர்
ராகு
சர்ப்ப தேவதை
துர்கா
--
கேது
நாக தேவதை
கணேஷா
--

கிரகம்
குருதேவதை
சூரியன்
தக்ஷிணாமூர்த்தி
சந்திரன்
மஹாவித்யா
செவ்வாய்
ஹனுமதே
புதன்
தத்தாத்ரேயர்
குரு
பிரஹஸ்பதி
சுக்கிரன்
பிருகு
சனி
தபஸ்வி / சாது
ராகு
பதஞ்சலி
கேது
கணேஷா
சூரியனும் செவ்வாயும் அக்னி என்கிற பஞ்ச பூத தத்துவத்தை ஆளுகின்றனர்.
சந்திரனும், சுக்கிரனும் ஜலத் தத்துவத்தை ஆளுகின்றனர்.
புதன் பூமித் தத்துவத்தை ஆளுகின்றார்.
குரு ஆகாயத் தத்துவத்தை ஆளுகின்றார்.
சனி வாயுத் தத்துவத்தை ஆளுகின்றார்.
இறைவனை / தேவதைகளை நாம் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். இது ஜல தத்துவத்தால் வணங்குவதாகும். இறைவனுக்கு மலர் சூட்டி, சந்தனம், குங்குமம், விபூதி தரித்து வணங்குகிறோம். ஆடை ஆபரணங்களைப் பூட்டி அழகு பார்க்கிறோம். நாம் செய்த பதார்த்தங்களையும், பழங்களையும் நைவேத்தியம் செய்கிறோம். இது பூமி தத்துவம் மற்றும் ஆகாய தத்துவங்களால் வணங்குவதற்கு ஒப்பானதாகும். இறைவனுக்கு சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற வாசனையுள்ள பொருள்களால் மணம் கமிழ புகையூட்டுகிறோம். இது வாயு தத்துவத்தால் வணங்குவதற்கு ஒப்பானதாகும்.கடைசியில் இறைவனுக்கு தீபத்தினால் ஆரத்தி செய்கிறோம். இது அக்னி தத்துவத்தால் வணங்குவதற்கு ஒப்பானதாகும்.
யார் யாருக்கெல்லாம் சனியினால் பிரச்சினை உள்ளதோ அவர்கள் தினமும் இறைவனுக்கு ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டி வணங்குவது நல்ல பயனைத் தரும். யார் யாருக்கெல்லாம் செவ்வாயால் பிரச்சினை உள்ளதோ அவர்கள் தினமும் இறைவனுக்கு விளக்கேற்றி வைத்து தீபம் காட்டி வழிபடுதல் நல்லது. யார் யாருக்கெல்லாம் சந்திரனால் அல்லது சுக்கிரனால் பிரச்சினை உள்ளதோ அவர்கள் தினமும் இறை உருவத்துக்கு அபிஷேகம் செய்வது நல்லது. அல்லது அடிக்கடி கோயிலில் அபிஷேகம் செய்வது நல்லது. புதன் குருவினால் பிரச்சினை இருப்பின் புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது நல்லது.

ஜோதிடம் காட்டும் வழியில் இறைவனைத் தொழுது கிரகங்களுக்கு அஞ்சாமல் வாழ உங்களை அழைக்கிறேன்.

உங்களுக்குத் தெரியுமா - சுனபா யோகத்தைப் பற்றி?

பிறப்பு ஜாதகத்தில் சந்திரனுக்கு அடுத்த வீட்டில் சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களில் ஏதேனும் ஒன்று இருப்பின் அது சுனபா யோகம் என்று அழைக்கப்படும்.

செவ்வாய் சுனபா யோகத்துக்குக் காரணம் என்றால் ஜாதகர் போராளியாகவும், பலம் வாய்ந்தவராகவும், சண்டை செய்பவராகவும், திருடனாகவும் இருப்பார்.

புதன் சுனபா யோகத்துக்குக் காரணம் என்றால் சிறந்த பேச்சாளர் ஆகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், கலைகளில் நாட்டம் உள்ளவராகவும், பண்பாளராகவும், அனைவரிடத்தும் நட்பு பாராட்டுபவராகவும், புகழ் வாய்ந்தவராகவும் விளங்குவார்.

குரு சுனபா யோகத்துக்குக் காரணம் என்றால் அவர் அறிவாளியாகவும், ஞானம் உள்ளவராகவும், அடுத்தவரை வழி நடத்துபவராகவும், செல்வந்தராகவும் விளங்குவார்.

சுக்கிரன் சுனபா யோகத்துக்குக் காரணம் என்றால் அவர் நல்ல ஆடை அணிகலன்களை அணிபவராகவும், மனைவியுடன் நட்பு பாராட்டுபவராகவும், உறவுகளால் மதிக்கப்படுபவராகவும், அதிர்ஷ்டம் உள்ளவராகவும் விளங்குவார்.

சனி சுனபா யோகத்துக்குக் காரணம் என்றால் அவர் செல்வந்தவராகவும், ரகசிய வாழ்க்கை வாழ்பவராகவும், புத்திசாலியாகவும், தலைமைக் குணம் உள்ளவராகவும், தீய பழக்கங்களை உடையவராகவும் அதே சமயம் நல்ல உடம்பு உள்ளவராகவும் விளங்குவார்.

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுதல் - எண்: 3

டக்டர் ராஜேந்திரப் பிரசாத், சர். சி.பி.ராமஸ்வாமி ஐயர், கிரிக்கெட்

விளையாட்டில் வல்லவரான விஜய் மெர்சன்ட், ஸ்வாமி விவேகானந்தர்,

ஜூலியஸ் ஸீசர், எலிஸெபெத் மஹாராணி, ஆல்ஃப்ரெட் பி நோபெல், சர்

வின்ஸ்டென் சர்ச்சில், ஹெண்ட்றி ஃபோர்ட், ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட்

போன்ற மிகப்  பெரிய மனிதர்கள் 3 ம் எண்னில் பிறந்தவர்கள் என்பதே இந்த

எண்ணுக்கு மகத்துவத்தை அளிக்கிறது.

3 அறிவைக் குறிக்கும் எண்.  அதுமட்டுமின்றி இது சக்தியைக் குறிக்கும் எண்.

இந்த எண்ணை குரு என்று அழைக்கப்படும் பிருஹஸ்பதி ஆள்கிறார்.

ஊக்கம், உற்சாகம், உழைப்பு ஆகியவற்றை இவ்வெண் குறிக்கிறது. இந்த

எண்ணில் பல தலைவர்கள் பிறந்து இருக்கிறார்கள்.

இவர்கள் தன் தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இடும் உத்தரவுகளை

சலிக்காமல் செய்பவர்கள்.

இவர்களிடம் இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்கு

கட்டுப்படுதல் போன்ற குணங்கள் இருக்கும்.

தான் எப்படி பெரியவர்களுக்கு அடங்கி நடக்கிறார்களோ அதுபோல் தன்னை

விட சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும்

என்று நினைப்பார்கள்.

இவர்கள் மிகவும் நாணயமானவர்கள். நல்ல உழைப்பாளிகள்.பிறர்களுக்கு

நிறைய உதவி செய்பவர்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக

நாட்டமுடையவர்கள்.

சட்டென்று அடுத்தவரிடம் உதவியைக் கோரமாட்டார்கள். லாபம் கருதாமல்

செய்யும் பணிகளில் இவரை அதிகம் பார்க்கலாம்.

சக்திக்கு மிஞ்சிய பதவிக்கு ஆசைப்பட மாட்டார்கள். எந்த பதவியிலும்

உண்மையாக உழைப்பவர்கள்.

இவர்களில் சிலருக்கு தன்னம்பிக்கை அதிகம் உண்டு. சிலருக்கு

தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.

தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் தான் சரியென்று ஏற்றுக்கொண்டதை

அடுத்தவரிடம் எடுத்துச் சொல்லி ஆதரவு தேடுவார்கள்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன் குடும்பத்தில் பெரியவர்கள் என்ன

சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை

புதைத்து விடுவார்கள். குடத்தில் இட்ட விளக்கு போன்றவர்களாக

ஆகிவிடுவார்கள்.

குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும் எந்தகாரியங்களையும் செய்ய

மாட்டார்கள்.

இவர்கள் ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் குறைந்தால் இவர்கள்

சோம்பேறிகளாகவும், குதற்கவாதிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும்,

சூதாடுவதில் விருப்பம் உள்ளவர்களாகவும், அதிக செலவு

செய்பவர்களாகவும்  மாறிவிடுவர்.

பொதுவாக 3 ம் எண்ணால் ஆளப்படுபவர்கள் நடை யுடை பாவனைகளில்

அடக்கம், சாந்தம், கம்பீரம் தென்படும்.

நடுத்தர உயரம், நீண்ட அழகான புருவங்கள், கருணை வீசும் கண்கள்,

நன்கமைந்த வாய், கொஞ்சம் பெரிதான இரண்டு முன்பற்களைஉடைய

அழகான பல்வரிசை, மெல்லிய நீண்ட தலைமயிர், நரை வழுக்கை, சதைப்

பற்றுடைய முகம், உடல், நிமிர்ந்த நடை, உஷ்ணமான சரீரம் உடையவர்கள்.

குரு ஆட்சி செய்யும் மனித உறுப்புகளான கல்லீரல், இடுப்பு, தொடை,

கால்கள், ஆகிய இடங்களில்  3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நோய் வரும்.

பல்லியை விட்டு தூரத்தில் இருப்பது இவர்களுக்கு நல்லது. பல்லி எச்சம்

இவர்களுக்கு தோலில் வியாதியைக் கொடுக்கும். இவர்கள் நீரிழிவு

நோயிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு சத்துள்ள

உணவை தவிர்ப்பதும் நலமே.

இவர்களது உடலுக்கு ஏற்ற உணவு கோதுமை, தக்காளி, எலுமிச்சை,

மாதுளை, அன்னாசி ஆகியவை. மிகவும் சிறந்தது நெல்லிக்கனி.

கணிதம் இவர்களுக்கு எளிதில் வரும். இவர்கள் இசை, ஓவியங்கள்

ஆகியவற்றில் நாட்டம் கொள்வது நல்லது.

ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 ஆகிய தேதிகள் மிக நன்மை

பயப்பன.

6, 15, 24 ம் தேதிகள் தீமை பயப்பன.

ஆசிரியர், வங்கி ஊழியர்கள், காரியதரிசி, கௌரவமான அரசாங்க

உத்தியோகங்கள், விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர், தத்துவஞானி, ஆலோசகர்

போன்ற தொழில்கள் இவர்களுக்கு நலம் தரும். வியாபாரம் லாயக்கல்ல.

3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 9, 2 ம் எண்காரார்கள் உதவுவார்கள். 5, 6, 8 ம்

எண்களில் பிறந்தவர்கள் உதவ மாட்டார்கள்.

3 ம் எண்ணி9ல் பிறந்தவர் 3, 9 ம் எண்களில் பிறந்தவர்களை நேசிப்பர்.

இவர்களுக்கு ஆரஞ்சு, ரோஸ் முதலிய எல்லா சிகப்பு நிறங்களும் நன்மை

தரும். தாமரைப் பூவின் வர்ணம் மிகவும் அதிர்ஷ்ட நிறம். கத்தரிப்பூ, மஞ்சள்,

சிகப்பு நிறங்களும் ஒத்துப்போகும்.

இவர்கள் கருநீலம், கறுப்பு ஆழ்ந்த பச்சை இவற்றை ஒதுக்குவது நலம்.

இவர்களுக்கு மிகவும் நன்மை அளிப்பது கத்தரிப்பூ நிறம் கொண்ட செவ்வந்தி

என்று அழைக்கப்படும் அமேதிஸ்ட் (Amethyst)  என்னும் கல் ஆகும். இந்தக்

கல்லுக்கு ஜலக்ரந்தம் என்ற பெயரும் உண்டு. புஷ்பராகமும் அணியலாம்.

333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333


























Tuesday, 21 January 2014

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுதல் - எண்: 2

எண் 2 அற்புதமான எண்களில் ஒன்று.

இது ஜல தத்துவத்தால் ஆளப்படுகிறது. இதன் அதிபர் மனோகாரகனான சந்திரன்.

வேதத்துடன் கூடிய ஜோதிடத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் இதன் தெய்வம். அதுமட்டுமின்றி பார்வதி, கௌரி இதன் தேவதை.

ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இதன் ஆளுமைக்குட்பட்டவர்கள்.

"வசுதேவக குடும்பகம்" என்ற சொல்லிற்கேற்ப இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் - நல்லபடியாகவோ அல்லது மோசமாகவோ மக்களால் பேசப்படுவார்கள்.

இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்; சந்தேகம் கொள்பவர்கள்; ஆராய்ச்சி செய்பவர்கள். எதிர் காலத்தைப் பற்றி சிந்தனை செய்தவண்ணம் இருப்பார்கள்.

பலவிதமான புதிய யுக்திகளைக் கையாளுபவர்கள். ஆனால் இவர்களுக்கு திட சித்தம் இருக்காது.

தெய்வ பக்தி, குரு பக்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் தீவிரத்தைக் காட்டுபவர்.

திட நம்பிக்கை மட்டும் இருந்தால் இவர்கள் சாதனையாளர்களாக இருப்பார்கள். உதாரனம்: காந்திஜி மற்றும் ஹிட்லர்.

சந்திரனைப் போன்றே இவர்கள் சில காலம் உற்சாகமாகவும் சில காலம் உற்சாகம் குன்றியும் இருப்பார்கள்.

பொதுவாக இவர்கள் நம்பிக்கையற்றவர்கள். சில சமயம் தன்னையே நம்பமாட்டார்கள். ஏதோ ஒன்றை பிடித்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

இயற்கையில் பயந்தவர்கள்; மென்மையானவர்கள். அதே சமயம் அடுத்தவர்களைக் கையாளும்போது பயமுறுத்தியும் மிரட்டியே காரியத்தை சாதித்துக் கொள்வதிலும் விருப்பத்துடன் செயல் படுவார்கள்.

சிறு விஷயங்களைத் தன் பயத்தினால் பெரியதாக ஆக்கிவிடுவார்கள்.

இந்த எண்ணில் பிறக்கும் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் யாரைச் சர்ந்து இருக்கிறார்களோ அவர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் குணத்தைக் கொள்வார்கள்.

பிறருக்கு நல்ல யோசனை சொல்வார்கள். ஆனால் தான் ஒரு காரியத்தை செய்யவேண்டி இருப்பின் மிகவும் குழம்புவார்கள்.

மன ஓட்டம் அதிகம் இருக்கும்; ஆனால் அதற்கு இணையாக உடல் ஓடாது. சோம்பேரித்தனம் இருக்கும். அதனால் எதையும் மெதுவாகவே செய்வார்கள்.

மிகுந்த தர்க்கவாதிகள். ஒவ்வொரு வார்த்தைக்கும் புதுப்புது அர்த்தங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

வாழ்க்கையில் இவர்கள் பிடிப்புடன் இருப்பது நல்லது. இவர்களது ஜாதகத்தில் சந்திரனும் புதனும் மோசமாகப் பாதிக்கப்பட்டால் இவர்கள் வெகு எளிதில் மன நோயாளி ஆகிவிடுவார்கள். அதனால் இவர்கள் தெய்வ  நம்பிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

இவர்களது மனதுக்கு ஆகர்ஷண சக்தி உண்டு. தெய்வத்தையோ, குருவையோ நினைத்தாரானால் இந்த ஆகர்ஷண சக்தி இவரது உடல் முழுவதும் பாயும். தெய்வ சக்தி

இவர்களுக்கு உண்மையான நட்பு கிடைப்பது சிரமம். இவர்களிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு விசுவாசமாக இருக்கமாட்டார்கள்.

1, 3, 4, 7, 8 எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்வார்கள்.

2 ம் எண்னில் பிரந்தவர்களுடன் இவர்கள் நட்பு கொண்டால் தீவிர நட்பு விரோதமாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.

7 ம் எண்காரர்களிடம் இவர்கள் வசமாவார்கள்.

2 ம் எண்ணின் ஆதிக்கம் பூரணமாக இருப்பின் இவர்கள் நல்ல உயரமுடையவர்களாக இருப்பர்; இல்லையெனில் குட்டையாகவே இருப்பர்.

பொதுவாக இவர்கள் சதைப் பற்றுடையவர்களாக இருப்பர். உருண்டையான தலையும் குட்டையான கேசமும் உடையவர்கள். கனத்த கண் இமைகளும் பெரிய கண்களும் உடையவர்கள்.

பகல் கனவு காண்பது போன்ற தோற்றம் இருக்கும்.

மூக்கு மேல் நோக்கி இருக்கும். கழுத்து சதைப் பற்றிருக்கும். கால்கள் வலிமையாக இராது. சீக்கிரம் தொந்தி விழுந்துவிடும்.

இவர்கள் ஜீரணக் கோளாறுகள், நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இவர்களுக்கு 7, 16, 25 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமானவை. அதுமட்டுமின்றி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் சாதகமானவை.

2, 11, 20, 29 தேதிகளில் அனேக முக்கிய சம்பவங்கள் நடக்கும். சில நல்லதாகவும் சில வேறுவிதமாகவும் முடியும். கூடியவரை இந்த தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம்.

இவர்களுக்கு 8, 9, 18, 26, 27 தேதிகள் நன்மை தராதவை.

இவர்கள் வக்கீல், ஆசிரியர், வியாபாரம், பால் பண்ணை, ஜவுளி வியாபாரம், பால் வியாபாரம், காய்கறி, உணவுப்பொருள்கள், மளிகைக் கடை வியாபாரம் நல்லவிதமாக அமையும். கூட்டாகச் செய்யும் வியாபாரத்தில் 1, 3, 4, 7 ம் எண்காரர்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

இலேசான பச்சைநிற வர்ணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் கெடுதல் செய்யும்.

தங்கத்தை விட வெள்ளி இவருக்கு உகந்தது. முத்து மற்றும் ஜேட் என்று சொல்லப்படும் பச்சை நிறக்கல் அதிக நன்மை தரும். வைடூரியமும் அணியலாம். சந்திரகாந்தக்கல்லும் அணியலாம். எல்லாவற்றிலும் முத்துதான் சிறந்தது.

2 ம் எண்காரர்களுக்கு அம்பாளின் துணை என்றும் கிட்ட இறைவனைப் பிரார்த்திப்போம்.

****************************************************************************
























Monday, 20 January 2014

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுதல் - பகுதி - 2 - எண்: 1

நாம் இப்பொழுது எண் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வோம். 

இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறப்பவர்களின் பொதுவான குணங்கள்:

நேர்மை மிக்கவர்கள். கம்பீரமானவர்கள். 

வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் திருப்தியுடன் அனுபவிக்க விரும்புபவர்கள்.

சௌகரியத்துக்காக பணத்தை செலவழிக்கத் தயங்க மாட்டார்கள்.

நுண்ணிய அறிவுடையவர்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் தீவிரமாகச் செயல் படுவார்கள். அதனால் இவரது முயற்சிகள் எளிதில் தோல்வியை அடைவது இல்லை.

தலைமைப் பண்பு உள்ளவர்கள். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்.

தொழில் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.

வெளிப்படையாகப் பேசுபவர்கள். அதனால் இவருக்கு விரோதிகள் இருப்பார்கள்.

தாமாகவே நண்பர்களைத் தேடிக்கொள்ளமாட்டர்கள். அவரைத் தேடிவரும்  நண்பர்களுக்காக உயிரையும் தருவார்கள்.

சுதந்திரமான மனப்போக்கு உள்ளவர்கள். அடுத்தவரை முகஸ்துதி செய்ய மாட்டர்கள்.

விஷயங்களை எளிதில் புறிந்து கொள்வார்கள். சோம்பேறிகளை வெறுப்பவர்கள்.

இவருக்கு நண்பர்கள் குறைவு. பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள்.
அரசியலுக்கு உகந்தவர்கள்.

இயற்கையை ரசிப்பவர்கள். 

நடுத்தர உயரம், அகன்ற மார்பு, அகண்ட நெற்றி, விசாலமான கண்கள் உடையவர்கள். 

இந்த ஆதிக்கத்தில் உள்ள பெண்கள் தன் வயதை விட சற்றே முதிர்ந்த தோற்றத்துடன் தெரிவார்கள்.

இந்த எண்ணில் பிறந்தவருக்கு தலை நோய், கண் நோய் இருக்கும். அனேகமாக எல்லோரும் கண்ணாடி அணிந்தவர்களாக இருப்பார்கள். குறிப்பாக 10 ம் தேதியில் பிறந்தவர்கள் 100 க்கு 98 சதவிகிதம் மக்கள் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.

40 வயதுக்குப் பிறகு இவர்கள் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்வது அவசியம். 

உஷ்ண சம்பந்தமான நோய்களும் இவருக்கு வரும். பித்த தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.

1, 10, 19, 28 ம் தேதிகள் இவருக்கு அதிர்ஷ்ட தேதிகளாகும்.

இவர்களுக்கு 4, 13, 22, 31 தேதிகளில் அனேக முக்கிய காரியங்கள் நடைபெறும். இந்த தேதிகளின் சுபாவம் சற்றும் நினைத்திராத மாற்றங்களைச் செய்வதுதான். அதனால் நல்லது தானே தேடி வரும். 

1 ம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் இந்த நாட்களில் எந்த புது முயற்சியும் செய்யாமல் இருப்பதே நலம்.

ஒவ்வொரு மாதமும் 8, 17, 26  ம் தேதிகள் இவர்களுக்கு துரதிர்ஷ்ட தேதிகளாகும். இந்த தேதியில் இவர்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அது இவர்களை வம்பு, வழக்கு என அழைத்துச் செல்லும், மனத்துன்பங்களுக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு உள்ள எல்லா தொழில்களும் வெற்றியைத் தேடித்தரும். மருத்துவம், ஆன்மீகம், அரசியல், நிர்வாகம், கலை, ஜோதிடம் ஆகிய தொழில்களில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

இவர்களுக்கு 1 ன் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் சாதாரண உதவியைச் செய்வார்கள்.

4 ம் எண்னின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத உதவிகளையும், 8 எண் காரகர்கள் நீண்ட நாள் பலன் தரும் உதவியையும், 2 மற்றும் 7 ம் எண் காரகர்கள் தற்காலிக உதவியையும் செய்வார்கள். அதே சம்யம் 2, 7 எண்னில் உள்ளவர்கள் இவர்களைத் திடீரென தான் தரும் உதவியை நிறுத்தி இவரைத் தவிக்க விட்டுவிடுவார்கள்.

1 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்  2, 3, 4, 5, 6  மற்றும் 8ம் எண்ணில் பிறந்தவர்களை மணக்கலாம். 3, 5, 6 ம் எண்ணில் பிறந்தவர்களை மணந்தால் கடைசீ வரை சுகம் உண்டு.

1, 4, 8 ம் எண்களில் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவரைக் காதலிப்பர்.

1 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உகந்த நிறம் மஞ்சள். 

கறுப்பு, பாக்கு நிற ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

தங்கம் இவருக்கு உகந்த உலோகம். 

மாணிக்கம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் கல்லாகும். 

மஞ்சள் புஷ்பராகம் மற்ரும் Topaz  கற்களும் இவர்களுக்கு நல்லது. 

குறிப்பாக சிறுவர்களுக்கு Topaz  அணிவிப்பது அவர்களது வளர்ச்சிக்கும் தேக ஆரோக்கியத்துக்கும் உதவும்.

1 ம் எண்ணில் பிறந்தவர்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
















Friday, 17 January 2014

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள் அறிவது எப்படி

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள்

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள் அடிக்கடி பேசப்படுகின்றன. அவை எப்படி செயல் படும் என்று பார்க்கலாமா? இதைப் புரிந்துகொள்ள முதலில் நம் ஜாதகத்தில் யார் நல்லவர் (சுபர்), யார் பொல்லாதவர்(தீயவர்) என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு நான் குறிப்பிடும் நல்லவர் / பொல்லாதவர்கள் ஆதிபத்திய ரீதியான சுபர் அசுபர் ஆவார்கள். அவர்களை எப்படி காண்பது என்று ஆராய்வதைவிட ஒவ்வொரு லக்னத்துக்கும் யார் தீயவர் (பொல்லாதவர்) என்பதைச் சொன்னால் போதும் என்று கருதுகிறேன்.

மேஷம் – புதன், ராகு, கேது
ரிஷபம் – சுக்கிரன், குரு, செவ்வாய், ராகு, கேது
மிதுனம் – ராகு, கேது
கடகம் – குரு, சனி, ராகு, கேது
சிம்மம் – சந்திரன், ராகு, கேது
கன்னி – சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது
துலாம் – புதன், ராகு, கேது
விருச்சிகம் – செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது
தனுர் – சந்திரன், ராகு, கேது
மகரம் – சூரியன், குரு, ராகு, கேது
கும்பம் – சந்திரன், புதன், ராகு, கேது
மீனம் – சூரியன், சுக்கிரன், ராகு, கேது

இவை எப்படி தீயர்கள் என்பதை ஒவ்வொரு கிரகத்தின் மூலத்திரிகோணத்தை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக 6, 8, 12 ம் வீடுகள் தீய ஸ்தானங்கள்.

தசாநாதன் ஒரு அரசனைப் போன்றவன். அதிகாரி.
புக்திநாதன் அந்த அரச சபையில் பணி புரிபவன். உதவி அதிகாரி.
இருவருமே ஆதிபத்திய சுபர்களானால் நல்ல பலன்களைத் தருவார்கள். அதே சமயம் இரண்டு முக்கியமான நிலைகள் அவர்கள் தரும் பலனைத் தீர்மானம் செய்கின்றன.
1.       அவர்களுடைய இயற்கை சுபாவம்.
2.       அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவு (சம்பந்தம்) நிலை.
இதை எல்லாம் ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

ஒரு தொழிலகம்; அதன் தலைமை நிர்வாக அதிகாரி (Managing Director)  மற்றும் அவருக்கு உதவி செய்யும் ஒரு பொது மேலாளர் ( General Manager)  என இருவர் இருப்பதாகக் கொள்வோம்.

காட்சி – 1: இருவரும் அவரவர் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல உறவு நிலை உள்ளது. அந்த சூழ்நிலையில் நல்ல பலன்களே நடைபெறும் அல்லவா?

“தசாநாதனும் புக்திநாதனும் சுபர்களாக இருந்து அவர்கள்குக்கிடையே உள்ள உறவு நிலையும் நன்றாக இருக்கும் போது நல்ல பலன்களே கிடைக்கும்.”

காட்சி – 2: தலைமை நிர்வாக அதிகாரி கோபத்தில் இருக்கிறார். பொது மேலாளர் கீழ் பணி புரியும் மேலாளர் ஒருவர் செய்த தவறினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொது மேலாளர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். மேலாளரின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொது மேலாளருக்கு உண்மை நிலை புரியும். அவர் ஊரில் இருப்பின் மேலாளரின் தலை தப்ப வாய்ப்பு உள்ளது. அனால் நிலைமை பலனில்லாமல் போய்விட்டது.

“ தசா நாதன் தீயவராக இருந்து புக்தி நாதனுடன் நல்ல சம்பந்தம் இல்லாமல் இருப்பின் தீய பலன்களே கிடைக்கும்.”

சில நாட்களில் பொது மேலாளர் ஊர் திரும்பி விடுகிறார். அவருக்கு என்ன நடந்தது என்கிற உண்மை தெரிகிறது. அவர் உடனே தலைமை நிர்வாக அதிகாரியிடம் போய்ப் பேசி மேலாளரை தண்டனையிலிருந்து தப்ப வைக்கிறார்.

“ தசா நாதன் தீயவராக இருப்பினும், நல்லவரான புக்தி நாதருடன் இருக்கும் நல்ல உறவினால் ஒன்று நல்ல பலன் விளையும் அல்லது தீய பலன் குறையும். நல்லவரான புக்தி நாதன் தசா நாதருடன் இருக்கும் நல்ல சம்பந்தத்தினால் தீய பலன்களைக் குறைக்க முடிகிறது.”

காட்சி – 3: பொது மேலாளர் மீண்டும் வெளிநாடு நீண்ட நாட்கள் பயணம் செய்கிறார். அவருடைய இடத்தில் அவரது உதவிப் பொது மேலாளர் அவரது பணிகளைப் பார்க்கிறார். அவர் தீயவர். அப்பொழுது யுனியன் தலைவர்கள் ஒரு பணியாளருக்கு மருத்துவ உதவி அனுமதிக்கப்பட்ட நிலைக்கு மேலே அதிகம் தேவைப்படுவதாகவும் அதை அனுமதிக்க வேண்டும் எண்றும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறையிடுகிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரியும் அனுமதிக்க முடிவு செய்கிறார்.

“ தசா நாதன் நல்லவராக இருந்து புக்தி நாதனுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கும்போது நல்ல பலன்களே நடைபெறும்.”

அவ்வாறு அனுமதித்ததை அறிந்த உதவிப் பொது மேலாளர், உடனே தலைமை நிர்வாக அதிகாரியைப் பார்த்து அதற்கு எதிராகத் தன் கருத்தைக் கூறி அது நிர்வாகத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று விளக்குகிறார். இருவரையுமே வருத்தப்படுத்தாமல் இதற்கு ஒரு தீர்ப்புக் காண வேண்டி தலைமை நிர்வாக அதிகாரி, தான் அனுமதித்த தொகையை பாதியாகக் குறைக்கிறார்.

“ தசா நாதன் நல்லவராக இருந்தாலும் தீயவரான புக்தி நாதருடன் உள்ள தொடர்பால் குறைவான நல்ல பலன்களே கிடைக்கும்.

காட்சி – 4: தலைமை நிர்வாக அதிகாரியும் பொது மேலாளரும் பணி ஓய்வு பெறுகிறார்கள். இப்பொழுது புதிய தலைமையின் கீழ் நிர்வாகம் வருகிறது. புதிய தலைமை நிர்வாக அதிகாரி நல்லவர் இல்லை. தீயவரான உதவிப் பொது மேலாளர் பணி உயர்வு பெற்று தற்பொழுது பொது மேலாளராக அமர்ந்துள்ளார்.

“ தசா நாதனும், புக்தி நாதனும் தீயவர்களாக இருக்கும் போது அவர்களுக்கிடையிலே சம்பந்தம் இருந்தாலும் இல்லையென்றாலும் தீய பலன்களே கிடைக்கும்.”

மேலும் ஒரு சில அமைப்புகள்:
1.  தசா நாதன் தீயவராக இருந்து புக்தி நாதன் யோககாரகனாக இருந்து இருவருக்கும் சம்பந்தம் இலாமல் இருப்பின் தீய பலன்களே கிடைக்கும்.
2.    தசா நாதன் தீயவராக இருந்து புக்திநாதனுக்கு அவருடன் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் தீய பலன்களே கிடைக்கும்.

சம்பந்தம் என்பது ஒருவரை ஒருவர் பார்ப்பது, ஒருவரோடு மற்றவர் பரிவர்த்தனை பெறுவது, ஒருவரோடு மற்றவர் சேர்ந்து இருப்பது, இருவரும் ஒருவருக்கு மற்றவர் கேந்திரத்தில் அல்லது கொணத்தில் இருப்பது போன்றவை ஆகும்.


************************************************************************************************************