Friday, 17 January 2014

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள் அறிவது எப்படி

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள்

ஜோதிடத்தில் தசா புக்தி பலன்கள் அடிக்கடி பேசப்படுகின்றன. அவை எப்படி செயல் படும் என்று பார்க்கலாமா? இதைப் புரிந்துகொள்ள முதலில் நம் ஜாதகத்தில் யார் நல்லவர் (சுபர்), யார் பொல்லாதவர்(தீயவர்) என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு நான் குறிப்பிடும் நல்லவர் / பொல்லாதவர்கள் ஆதிபத்திய ரீதியான சுபர் அசுபர் ஆவார்கள். அவர்களை எப்படி காண்பது என்று ஆராய்வதைவிட ஒவ்வொரு லக்னத்துக்கும் யார் தீயவர் (பொல்லாதவர்) என்பதைச் சொன்னால் போதும் என்று கருதுகிறேன்.

மேஷம் – புதன், ராகு, கேது
ரிஷபம் – சுக்கிரன், குரு, செவ்வாய், ராகு, கேது
மிதுனம் – ராகு, கேது
கடகம் – குரு, சனி, ராகு, கேது
சிம்மம் – சந்திரன், ராகு, கேது
கன்னி – சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது
துலாம் – புதன், ராகு, கேது
விருச்சிகம் – செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது
தனுர் – சந்திரன், ராகு, கேது
மகரம் – சூரியன், குரு, ராகு, கேது
கும்பம் – சந்திரன், புதன், ராகு, கேது
மீனம் – சூரியன், சுக்கிரன், ராகு, கேது

இவை எப்படி தீயர்கள் என்பதை ஒவ்வொரு கிரகத்தின் மூலத்திரிகோணத்தை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக 6, 8, 12 ம் வீடுகள் தீய ஸ்தானங்கள்.

தசாநாதன் ஒரு அரசனைப் போன்றவன். அதிகாரி.
புக்திநாதன் அந்த அரச சபையில் பணி புரிபவன். உதவி அதிகாரி.
இருவருமே ஆதிபத்திய சுபர்களானால் நல்ல பலன்களைத் தருவார்கள். அதே சமயம் இரண்டு முக்கியமான நிலைகள் அவர்கள் தரும் பலனைத் தீர்மானம் செய்கின்றன.
1.       அவர்களுடைய இயற்கை சுபாவம்.
2.       அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவு (சம்பந்தம்) நிலை.
இதை எல்லாம் ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

ஒரு தொழிலகம்; அதன் தலைமை நிர்வாக அதிகாரி (Managing Director)  மற்றும் அவருக்கு உதவி செய்யும் ஒரு பொது மேலாளர் ( General Manager)  என இருவர் இருப்பதாகக் கொள்வோம்.

காட்சி – 1: இருவரும் அவரவர் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல உறவு நிலை உள்ளது. அந்த சூழ்நிலையில் நல்ல பலன்களே நடைபெறும் அல்லவா?

“தசாநாதனும் புக்திநாதனும் சுபர்களாக இருந்து அவர்கள்குக்கிடையே உள்ள உறவு நிலையும் நன்றாக இருக்கும் போது நல்ல பலன்களே கிடைக்கும்.”

காட்சி – 2: தலைமை நிர்வாக அதிகாரி கோபத்தில் இருக்கிறார். பொது மேலாளர் கீழ் பணி புரியும் மேலாளர் ஒருவர் செய்த தவறினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொது மேலாளர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். மேலாளரின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொது மேலாளருக்கு உண்மை நிலை புரியும். அவர் ஊரில் இருப்பின் மேலாளரின் தலை தப்ப வாய்ப்பு உள்ளது. அனால் நிலைமை பலனில்லாமல் போய்விட்டது.

“ தசா நாதன் தீயவராக இருந்து புக்தி நாதனுடன் நல்ல சம்பந்தம் இல்லாமல் இருப்பின் தீய பலன்களே கிடைக்கும்.”

சில நாட்களில் பொது மேலாளர் ஊர் திரும்பி விடுகிறார். அவருக்கு என்ன நடந்தது என்கிற உண்மை தெரிகிறது. அவர் உடனே தலைமை நிர்வாக அதிகாரியிடம் போய்ப் பேசி மேலாளரை தண்டனையிலிருந்து தப்ப வைக்கிறார்.

“ தசா நாதன் தீயவராக இருப்பினும், நல்லவரான புக்தி நாதருடன் இருக்கும் நல்ல உறவினால் ஒன்று நல்ல பலன் விளையும் அல்லது தீய பலன் குறையும். நல்லவரான புக்தி நாதன் தசா நாதருடன் இருக்கும் நல்ல சம்பந்தத்தினால் தீய பலன்களைக் குறைக்க முடிகிறது.”

காட்சி – 3: பொது மேலாளர் மீண்டும் வெளிநாடு நீண்ட நாட்கள் பயணம் செய்கிறார். அவருடைய இடத்தில் அவரது உதவிப் பொது மேலாளர் அவரது பணிகளைப் பார்க்கிறார். அவர் தீயவர். அப்பொழுது யுனியன் தலைவர்கள் ஒரு பணியாளருக்கு மருத்துவ உதவி அனுமதிக்கப்பட்ட நிலைக்கு மேலே அதிகம் தேவைப்படுவதாகவும் அதை அனுமதிக்க வேண்டும் எண்றும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறையிடுகிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரியும் அனுமதிக்க முடிவு செய்கிறார்.

“ தசா நாதன் நல்லவராக இருந்து புக்தி நாதனுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கும்போது நல்ல பலன்களே நடைபெறும்.”

அவ்வாறு அனுமதித்ததை அறிந்த உதவிப் பொது மேலாளர், உடனே தலைமை நிர்வாக அதிகாரியைப் பார்த்து அதற்கு எதிராகத் தன் கருத்தைக் கூறி அது நிர்வாகத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று விளக்குகிறார். இருவரையுமே வருத்தப்படுத்தாமல் இதற்கு ஒரு தீர்ப்புக் காண வேண்டி தலைமை நிர்வாக அதிகாரி, தான் அனுமதித்த தொகையை பாதியாகக் குறைக்கிறார்.

“ தசா நாதன் நல்லவராக இருந்தாலும் தீயவரான புக்தி நாதருடன் உள்ள தொடர்பால் குறைவான நல்ல பலன்களே கிடைக்கும்.

காட்சி – 4: தலைமை நிர்வாக அதிகாரியும் பொது மேலாளரும் பணி ஓய்வு பெறுகிறார்கள். இப்பொழுது புதிய தலைமையின் கீழ் நிர்வாகம் வருகிறது. புதிய தலைமை நிர்வாக அதிகாரி நல்லவர் இல்லை. தீயவரான உதவிப் பொது மேலாளர் பணி உயர்வு பெற்று தற்பொழுது பொது மேலாளராக அமர்ந்துள்ளார்.

“ தசா நாதனும், புக்தி நாதனும் தீயவர்களாக இருக்கும் போது அவர்களுக்கிடையிலே சம்பந்தம் இருந்தாலும் இல்லையென்றாலும் தீய பலன்களே கிடைக்கும்.”

மேலும் ஒரு சில அமைப்புகள்:
1.  தசா நாதன் தீயவராக இருந்து புக்தி நாதன் யோககாரகனாக இருந்து இருவருக்கும் சம்பந்தம் இலாமல் இருப்பின் தீய பலன்களே கிடைக்கும்.
2.    தசா நாதன் தீயவராக இருந்து புக்திநாதனுக்கு அவருடன் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் தீய பலன்களே கிடைக்கும்.

சம்பந்தம் என்பது ஒருவரை ஒருவர் பார்ப்பது, ஒருவரோடு மற்றவர் பரிவர்த்தனை பெறுவது, ஒருவரோடு மற்றவர் சேர்ந்து இருப்பது, இருவரும் ஒருவருக்கு மற்றவர் கேந்திரத்தில் அல்லது கொணத்தில் இருப்பது போன்றவை ஆகும்.


************************************************************************************************************

2 comments:

  1. dearguruji iam shekaran veldanyour nots ireseved thanku verymuch

    ReplyDelete
  2. Dear Shri Narayanan,

    I appreciate your efforts in sharing your deep knowledge in astrology. SWAADYAYANAM CHA PRAVACHANECHA says Taitreya
    Upanishad. That not only one should continue ones ADYAYANAM (process of learning new things as well as revision of what had already been learnt) & PRAVACHANAM(Preach that knowledge to Others). To take so much pains to type it out and that too in
    an orderly arranged manner and make it quite interesting and informative and kindling their interest to look forward to more and more such writeups is some thing laudable and superb. Our PRANAMS.
    TIRUVARUR RANGASWAMY CHANDRASEKARAN

    ReplyDelete