Thursday, 30 January 2014

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுங்கள் - எண் 5

புதனால் ஆளப்படுகின்ற எண் 5. புதன் புத்திகாரகன் என்று ஜொதிடத்தில் அழைக்கப்படுகிறான்.

எல்லோரையும் கவரும் சக்தியை இந்த எண் ஒருவருக்குத் தருகிறது.

குணங்கள் மூன்று வகைப் படும். சத்வம், ராஜசம், தாமசம் என்பனவையே அவை.

5 ம் எண் காரகர்கள் ராஜச குணத்தைச் சார்ந்தவர்கள். வேகம் அதிகம் உள்ளவர்கள். தன் வேகத்துக்கு யாராலும் ஈடு கட்ட முடியாது என நம்புபவர்கள்.

வெகு சீக்கிரம் முடிவுகளை எடுப்பவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானது என்பதை வெகு காலம் கழித்து தான் உலகம் புரிந்து கொள்ளும்.

சுலபமாக எல்லோரிடமும் பழகுவார்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு பேசமாட்டர்கள்.

எந்த காரியமாக இருந்தாலும்  துணிந்து இறங்குவார்கள்.

பழைமையை வெறுப்பர். புதுமையை ரசிப்பர்.

இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்க்கும்போது கவனம் தேவை.

இவர்களால் பலருக்கு மிகுந்த பயன் இருக்கும். மிகவும் உற்சாகமானவர்கள்.

துணிவானவர் என்பதால் எதிரிகளை அதிகம் சம்பாதித்துக் கொள்வார்.

விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது  அவசியம்.

வெகு எளிதில் பணம் சம்பாதிக்கும் வழியை அறிந்தவர்கள். வியாபாரத்துக்கு மிகவும் லாயக்காணவர்கள்.

இவர்களுக்கு (ஆண் / பெண்) சபல சித்தம் அதிகம். வெகு எளிதில் ஒருவரை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இவர்கள் மனதை வெகு எளிதில் கொள்ளை கொள்வார்கள்.

நடுத்தர உயரம், சிறிது பருமனான சரீரம், களை வீசும் துரு துரு என்கிற முகம், ஒளி வீசும் கண்கள், பார்வையிலும் பேச்சிலும் காந்த சக்தி ஆகியவை இவருக்கு இருக்கும்.

5, 9, 14, 18, 23, 27 தேதிகள் இவருக்கு அதிர்ஷ்டமானவை.

வியாபாரத்துக்கு 1, 4, 5, 9 எண்காரர்கலை கூட்டாக சேர்த்துக் கொள்ளலாம். 5 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லா எண் காரர்களும் உதவுவார்கள்.

சாம்பல் நிறம் மிகவும் அதிர்ஷ்டமானது. ஆழ்ந்த வர்ணங்களை அணிவது நல்லதல்ல.

வைரம் அல்லது ஸிர்கன் கற்களை அணியலாம்.

55555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555


சென்னையில் உள்லவர்களுக்கு ஜோதிடத்தை பயிலுவதில் நாட்டம் இருப்பின் தவறாமல் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வருகின்ற பிப்ரவரி மாதம் 9 ம் தேதி சென்னையில், தி நகரில் உள்ள கர்னாடக சங்க ஸ்கூலில் வகுப்புகள் ஆரம்பம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 09 30 மணி முதல் 12 30 மணி வரை வகுப்புகள், நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும். தொடர்பு கொள்ள:

S.Narayanan - 93817 13052
P.R.Ramachandhiran - 89399 01346

நல்ல சந்தர்ப்பம், தவற விடாதீர்கள்.



















No comments:

Post a Comment