Wednesday, 29 January 2014

எண் கணிதம் மூலம் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - எண் - 4

எண் 1 அறிவைக் குறிக்கும் எண். சூரியனால் ஆளப்படுகிறது.

எண் 2 மனத்தைக் குறிக்கும் எண். சந்திரனால் ஆளப்படுகிறது.

எண் 3 மனத்தின் இயக்கத்தைக் குறிக்கும் எண். குருவினால் ஆளப்படுகிறது.

ஆனால் எண் 4 இந்த மூன்றையும் ஒருநிலைப் படுத்தி ஒரு சட்டத்தை இயக்கும் எண். அதே சமயம் இது சட்டத்தைத் தாண்டவும் தயங்காது. இதை சமுதாய எண் என்றும் கூறலாம்.

எல்லொரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர்கள் எண் 4 ன் ஆளுமைக்குட்பட்டவர்.

இவர்கள் மிகுந்த வாக்கு சாமர்த்தியம் உள்ளவர்கள். தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.

இவரது பேச்சில் இனிமை இருக்காது. மிகவும் துடுக்குத் தனமாக தன் அபிப்பிராயங்களை வெளியிடுவர். தன் பேச்சைக் கேட்ப்பவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படமாட்டார்கள்.

யார் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக் கருத்து ஒன்றைக் கூறுவர். பிறர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தானே தீர விசாரித்து அறிந்து கொள்வதைத் தான் ஏற்றுக்கொள்வர்.

எல்லா விஷயத்தைப் பற்றியும் தனக்கென்று ஒரு கருத்தை வைத்துக் கொள்வர்.

மாற்றுக்கருத்துக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்களுக்கு நண்பர்கள் நிலைப்பர்.

இவர்களுக்கு அறிவுத் தேடல் எப்பொழுதும் இருக்கும்.

உணவு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பர். புகழுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்வு குறைவாக இருக்கும். பிறர் சொல்லும் சிறு விஷயத்தைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்வர்.

இவரது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பொதுவாக இவர்களுக்கு கிடைப்பதில்லை.

அதிகம் கஷ்டப்படாமல் சாதிக்கும் விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

பொதுவாக இரட்டை நாடி சரீரம் இருக்கும். முகம் பெரியதாகவும் கம்பீரமானதாகவும் இருக்கும். கண்கள் சிறிது உள்ளடங்கியே இருக்கும்.

வட்டமான முகம். அடர்த்தியான தலை மயிர் அலை போன்று இருக்கும்.

சட்டென்று நோய்வாய்ப் பட மாட்டார்கள். அப்படியே வந்தாலும் இவர்கள் யோகப் பயிற்சி மூலம் தன்னை வெகுவாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.

4 ம் தேதியில் பிறந்தவர்கள் 13, 22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்களை விட கண்டிப்பும் அதிகார தொனியும் அதிகம் உள்ளவர்களாக இருப்பர்.

13 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு எதிற்பாராமல் சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

22 ம் தேதியில் பிறந்தவர்களை தீய வழிகள் அதிகம் ஈர்க்கும். கவனம் தேவை.

31 ம் தேதியில் பிறந்தவர்கள் மனோ பலம் வாய்ந்தவர்கள். தனியாக வாழ்வதில் நாட்டம் இருக்கும். ஒழுங்குகளில் இருந்து விலகாமல் இருப்பது நலம்.

1, 10, 19, 28 ம் தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள். 9, 18, 27 ம் தேதிகள் சாதகமான பலன் தரும்.

4, 13, 22, 31 ம் தேதிகள் எதிர்பாராத செயல்களை செய்யும்.

8, 17, 26 ம் தேதிகள் எப்பொழுதும் தீமையே செய்யும்.

4 ம் எண்காரகர்கள் 1 ம் எண்ணில் பிறந்தவரிடம் வசியப்படுவார்கள். 4 ம் எண்ணில் பிறந்தவரிடம் 8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் வசியமாவர்.

பேச்சாளர், ஜொதிடர், கலைஞர், ஆராய்ச்சி செய்பவர், போக்குவரத்து தொழில் போன்றவைகள் இவர்களுக்கு நல்லது. வியாபாரம் நல்லதல்ல.

வெளிர் நீலம் அல்லது நீலம் இவர்களுக்கு பொருத்தமான நிறம். மஞ்சளும் நல்லதே. தவிர்க்க வேண்டிய நிறம் கறுப்பு.

வெளிர் நீலக்கல் அல்லது கோமேதகம் நல்லது.

இவர்கள் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பினால் வெற்றி பெறுவர்.

444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444



























No comments:

Post a Comment