Tuesday, 21 January 2014

எண் கணிதம் மூலம் உங்களை அறிந்து கொள்ளுதல் - எண்: 2

எண் 2 அற்புதமான எண்களில் ஒன்று.

இது ஜல தத்துவத்தால் ஆளப்படுகிறது. இதன் அதிபர் மனோகாரகனான சந்திரன்.

வேதத்துடன் கூடிய ஜோதிடத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் இதன் தெய்வம். அதுமட்டுமின்றி பார்வதி, கௌரி இதன் தேவதை.

ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இதன் ஆளுமைக்குட்பட்டவர்கள்.

"வசுதேவக குடும்பகம்" என்ற சொல்லிற்கேற்ப இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் - நல்லபடியாகவோ அல்லது மோசமாகவோ மக்களால் பேசப்படுவார்கள்.

இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்; சந்தேகம் கொள்பவர்கள்; ஆராய்ச்சி செய்பவர்கள். எதிர் காலத்தைப் பற்றி சிந்தனை செய்தவண்ணம் இருப்பார்கள்.

பலவிதமான புதிய யுக்திகளைக் கையாளுபவர்கள். ஆனால் இவர்களுக்கு திட சித்தம் இருக்காது.

தெய்வ பக்தி, குரு பக்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் தீவிரத்தைக் காட்டுபவர்.

திட நம்பிக்கை மட்டும் இருந்தால் இவர்கள் சாதனையாளர்களாக இருப்பார்கள். உதாரனம்: காந்திஜி மற்றும் ஹிட்லர்.

சந்திரனைப் போன்றே இவர்கள் சில காலம் உற்சாகமாகவும் சில காலம் உற்சாகம் குன்றியும் இருப்பார்கள்.

பொதுவாக இவர்கள் நம்பிக்கையற்றவர்கள். சில சமயம் தன்னையே நம்பமாட்டார்கள். ஏதோ ஒன்றை பிடித்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

இயற்கையில் பயந்தவர்கள்; மென்மையானவர்கள். அதே சமயம் அடுத்தவர்களைக் கையாளும்போது பயமுறுத்தியும் மிரட்டியே காரியத்தை சாதித்துக் கொள்வதிலும் விருப்பத்துடன் செயல் படுவார்கள்.

சிறு விஷயங்களைத் தன் பயத்தினால் பெரியதாக ஆக்கிவிடுவார்கள்.

இந்த எண்ணில் பிறக்கும் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் யாரைச் சர்ந்து இருக்கிறார்களோ அவர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் குணத்தைக் கொள்வார்கள்.

பிறருக்கு நல்ல யோசனை சொல்வார்கள். ஆனால் தான் ஒரு காரியத்தை செய்யவேண்டி இருப்பின் மிகவும் குழம்புவார்கள்.

மன ஓட்டம் அதிகம் இருக்கும்; ஆனால் அதற்கு இணையாக உடல் ஓடாது. சோம்பேரித்தனம் இருக்கும். அதனால் எதையும் மெதுவாகவே செய்வார்கள்.

மிகுந்த தர்க்கவாதிகள். ஒவ்வொரு வார்த்தைக்கும் புதுப்புது அர்த்தங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

வாழ்க்கையில் இவர்கள் பிடிப்புடன் இருப்பது நல்லது. இவர்களது ஜாதகத்தில் சந்திரனும் புதனும் மோசமாகப் பாதிக்கப்பட்டால் இவர்கள் வெகு எளிதில் மன நோயாளி ஆகிவிடுவார்கள். அதனால் இவர்கள் தெய்வ  நம்பிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

இவர்களது மனதுக்கு ஆகர்ஷண சக்தி உண்டு. தெய்வத்தையோ, குருவையோ நினைத்தாரானால் இந்த ஆகர்ஷண சக்தி இவரது உடல் முழுவதும் பாயும். தெய்வ சக்தி

இவர்களுக்கு உண்மையான நட்பு கிடைப்பது சிரமம். இவர்களிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு விசுவாசமாக இருக்கமாட்டார்கள்.

1, 3, 4, 7, 8 எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்வார்கள்.

2 ம் எண்னில் பிரந்தவர்களுடன் இவர்கள் நட்பு கொண்டால் தீவிர நட்பு விரோதமாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.

7 ம் எண்காரர்களிடம் இவர்கள் வசமாவார்கள்.

2 ம் எண்ணின் ஆதிக்கம் பூரணமாக இருப்பின் இவர்கள் நல்ல உயரமுடையவர்களாக இருப்பர்; இல்லையெனில் குட்டையாகவே இருப்பர்.

பொதுவாக இவர்கள் சதைப் பற்றுடையவர்களாக இருப்பர். உருண்டையான தலையும் குட்டையான கேசமும் உடையவர்கள். கனத்த கண் இமைகளும் பெரிய கண்களும் உடையவர்கள்.

பகல் கனவு காண்பது போன்ற தோற்றம் இருக்கும்.

மூக்கு மேல் நோக்கி இருக்கும். கழுத்து சதைப் பற்றிருக்கும். கால்கள் வலிமையாக இராது. சீக்கிரம் தொந்தி விழுந்துவிடும்.

இவர்கள் ஜீரணக் கோளாறுகள், நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இவர்களுக்கு 7, 16, 25 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமானவை. அதுமட்டுமின்றி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் சாதகமானவை.

2, 11, 20, 29 தேதிகளில் அனேக முக்கிய சம்பவங்கள் நடக்கும். சில நல்லதாகவும் சில வேறுவிதமாகவும் முடியும். கூடியவரை இந்த தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம்.

இவர்களுக்கு 8, 9, 18, 26, 27 தேதிகள் நன்மை தராதவை.

இவர்கள் வக்கீல், ஆசிரியர், வியாபாரம், பால் பண்ணை, ஜவுளி வியாபாரம், பால் வியாபாரம், காய்கறி, உணவுப்பொருள்கள், மளிகைக் கடை வியாபாரம் நல்லவிதமாக அமையும். கூட்டாகச் செய்யும் வியாபாரத்தில் 1, 3, 4, 7 ம் எண்காரர்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

இலேசான பச்சைநிற வர்ணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் கெடுதல் செய்யும்.

தங்கத்தை விட வெள்ளி இவருக்கு உகந்தது. முத்து மற்றும் ஜேட் என்று சொல்லப்படும் பச்சை நிறக்கல் அதிக நன்மை தரும். வைடூரியமும் அணியலாம். சந்திரகாந்தக்கல்லும் அணியலாம். எல்லாவற்றிலும் முத்துதான் சிறந்தது.

2 ம் எண்காரர்களுக்கு அம்பாளின் துணை என்றும் கிட்ட இறைவனைப் பிரார்த்திப்போம்.

****************************************************************************
























No comments:

Post a Comment