ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அதி தேவதை, பிரத்யதி தேவதை,
குரு தேவதை உண்டு. அதுபோல ஒவ்வொரு கிரகமும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் மட்டும்) ஒரு ரசத்தை ஆளுகின்றன.
இவற்றை நாம் எப்படி ஜோதிட முறையில் பயன் படுத்தலாம் என்று
பார்க்கலாம்.
ஒரு கிரகம் வேலை செய்ய முடியாமல், வலுவிழந்த நிலையில்
இருந்து அதனால் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நண்மைகள் கிடைக்கவில்லை யெனில், அந்த
கிரகத்தின் அதி தேவதையை வணங்கினால் நல்ல பலன் கிட்டும். உதாரணமாக ஒரு குழந்தை
படிப்பில் நாட்டம் கொள்லாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். படிப்பின்
காரகன் புதன் கிரகம். அந்த குழந்தையின் ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பின்
அதற்கு படிப்பில் நாட்டம் வராது. அந்த நிலையை மாற்ற புதனின் அதி தேவதையை வணங்கி
வந்தால் படிப்பில் நாட்டம் வரும். அதி என்றால் அதிகப்படுத்துவது. கிரகங்கள் வெறும்
பிரதிநிதிகள் தான். அதை இயக்குபவர் அதன் தேவதைகளே.
இப்பொழுது ஒரு கிரகம் தீமை வாய்ந்தது என்கிற நிலையில்
இருந்து அது செயல் படாமல் இருப்பது நல்லது என்று நினைத்தால், அந்த கிரகத்தின்
செயல்பாட்டினை கட்டுக்குள் வைத்திருக்க அதன் பிரத்யதி தேவதையை வணங்குதல் வேண்டும்.
உதாரணமாக சனி ஒரு ஜாதகருக்கு தீயவர். அவரை கட்டுக்குள் வைத்திருக்க அவரது பிரத்யதி
தேவதையை வணங்குதல் அவசியம்.
சரி, எப்படி வணங்குவது? கிரகம் ஆளுகின்ற ரசத்தினால் அந்த
கிரகத்தை ஆளுகின்ற தேவதைக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். அந்த கிரகம் ஆளுகின்ற
பஞ்ச பூத தத்துவத்தின் துணைகொண்டு அந்த தேவதையை வணங்கலாம். ஒரு காரியம் கைகூட இது
ஒரு மிகச் சிறந்த வழி.
சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சூரியன்
ஆளுகின்ற ரசம் தேன். அவர் ஆளுகின்ற தத்துவம் மீண்டும் அக்னி.
சூரியன் வேலை செய்ய ஹோமம் மூலம் வழிபடுதல் வேண்டும்.
ஹோமத்தில் பல விதமான பொருள்களை அர்பணிக்கும்போது சூரியனின் செயல்பாட்டில் முன்னேற்றம்
ஏற்பட்டு உடல் ஆரோக்கியம், கண் பார்வை தெளிவு போன்ற சூரியன் செயல்பாட்டினால்
கிடைக்கும் பலவிதமான நன்மைகள் ஜாதகருக்குக் கிடைக்கும்.
சூரியனால் பிரச்சினை ஏற்படும்பொழுது சிவனுக்கு தேன்
அபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றி வைத்தும் வழிபட்டால் பிரச்சினைகள் குறையும்.
கிரகம்
|
அதிதேவதை
|
பிரத்யதிதேவதை
|
ரசம்
|
சூரியன்
|
அக்னி
|
சிவன்
|
தேன்
|
சந்திரன்
|
வருணன்
|
கௌரி
|
சுத்த ஜலம்
|
செவ்வாய்
|
ஸ்கந்தன்
|
ஆதித்யன்
|
பால்
|
புதன்
|
விஷ்ணு
|
நாராயணா
|
கரும்புச் சாறு –
சந்தனம்
|
குரு
|
இந்திரன்
|
சாம்ப சதாசிவன்
|
நெய்
|
சுக்கிரன்
|
இந்திராணி
|
லக்ஷ்மி
|
தயிர்
|
சனி
|
பிரம்மா
|
காலாக்னி ருத்ரா / காளி
|
இளநீர்
|
ராகு
|
சர்ப்ப தேவதை
|
துர்கா
|
--
|
கேது
|
நாக தேவதை
|
கணேஷா
|
--
|
கிரகம்
|
குருதேவதை
|
சூரியன்
|
தக்ஷிணாமூர்த்தி
|
சந்திரன்
|
மஹாவித்யா
|
செவ்வாய்
|
ஹனுமதே
|
புதன்
|
தத்தாத்ரேயர்
|
குரு
|
பிரஹஸ்பதி
|
சுக்கிரன்
|
பிருகு
|
சனி
|
தபஸ்வி / சாது
|
ராகு
|
பதஞ்சலி
|
கேது
|
கணேஷா
|
சூரியனும் செவ்வாயும் அக்னி என்கிற பஞ்ச பூத தத்துவத்தை
ஆளுகின்றனர்.
சந்திரனும், சுக்கிரனும் ஜலத் தத்துவத்தை ஆளுகின்றனர்.
புதன் பூமித் தத்துவத்தை ஆளுகின்றார்.
குரு ஆகாயத் தத்துவத்தை ஆளுகின்றார்.
சனி வாயுத் தத்துவத்தை ஆளுகின்றார்.
இறைவனை / தேவதைகளை நாம் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். இது
ஜல தத்துவத்தால் வணங்குவதாகும். இறைவனுக்கு மலர் சூட்டி, சந்தனம், குங்குமம்,
விபூதி தரித்து வணங்குகிறோம். ஆடை ஆபரணங்களைப் பூட்டி அழகு பார்க்கிறோம். நாம்
செய்த பதார்த்தங்களையும், பழங்களையும் நைவேத்தியம் செய்கிறோம். இது பூமி தத்துவம்
மற்றும் ஆகாய தத்துவங்களால் வணங்குவதற்கு ஒப்பானதாகும். இறைவனுக்கு சாம்பிராணி,
ஊதுபத்தி போன்ற வாசனையுள்ள பொருள்களால் மணம் கமிழ புகையூட்டுகிறோம். இது வாயு
தத்துவத்தால் வணங்குவதற்கு ஒப்பானதாகும்.கடைசியில் இறைவனுக்கு தீபத்தினால் ஆரத்தி
செய்கிறோம். இது அக்னி தத்துவத்தால் வணங்குவதற்கு ஒப்பானதாகும்.
யார் யாருக்கெல்லாம் சனியினால் பிரச்சினை உள்ளதோ அவர்கள்
தினமும் இறைவனுக்கு ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டி வணங்குவது நல்ல பயனைத்
தரும். யார் யாருக்கெல்லாம் செவ்வாயால் பிரச்சினை உள்ளதோ அவர்கள் தினமும் இறைவனுக்கு
விளக்கேற்றி வைத்து தீபம் காட்டி வழிபடுதல் நல்லது. யார் யாருக்கெல்லாம்
சந்திரனால் அல்லது சுக்கிரனால் பிரச்சினை உள்ளதோ அவர்கள் தினமும் இறை உருவத்துக்கு
அபிஷேகம் செய்வது நல்லது. அல்லது அடிக்கடி கோயிலில் அபிஷேகம் செய்வது நல்லது.
புதன் குருவினால் பிரச்சினை இருப்பின் புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது நல்லது.
ஜோதிடம் காட்டும் வழியில் இறைவனைத் தொழுது கிரகங்களுக்கு
அஞ்சாமல் வாழ உங்களை அழைக்கிறேன்.
மிகவும் நன்றி ஐயா. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete